Wednesday, 24 May 2017

தொலைந்து போனவைகளின் பட்டியலிலிருந்து

தொலைந்து போனவைகளின் பட்டியலிலிருந்து
==============================================

பேசும்போதெல்லாம் நிறைய ஆக்கிரகம் இருக்கும்,  
அதைப்பொருட் படுத்தாதே,  
ஒரு சமயம், 
தூரமாயிருந்து
ஒரு தொலைநோக்குப் பார்வை,
இன்னொரு சமயம்,  
கூர்மையான நகங்களுடைய 
உன் நீண்ட விரல்களை 
என் உள்ளங்கைக்கொண்டு 
யாரும் காணாதே ஒரு தழுவல், 
நல்லதொரு சந்தர்பம் கிடைத்தால் 
ஒரு அணைப்பு, 
நீ பயப்படுகிறாய், 
பக்கத்தில் வந்தால்
பின்மாறுகிறாய்,
பார்வையில் மோகாந்தம் தூறுகிறாய், 
அன்றொருநாள், 
உன் தோழியின் விசேஷநாளின் போது
ஆடம்பரமான 
புடவை  உடுத்தியிருந்தாய், 
விழிகளால் செய்கைக்காட்டி,
அழகாக இருக்கிறேனா என்று கேட்கிறாய், 
இல்லை என்று  தலை அசைத்தபோது,
முகம் சுளிக்கிறாய்,  
உன் நேர்த்தியான உடல் வாகிற்கும், 
உயரத்திற்கும், 
சுற்றும் முற்றும் சாலையும் காணாதே,   
நடந்துபோகும் 
உன் துரித நடையின் போதும், 
ஏதோ ஒரு தூணில் சாய்ந்து நிற்கும்போதும், 
உன்னோடு இணக்கமாய்  தெரிவது  
சிந்தெடிக் புடவைதான்,  
உள்ளாடைகளின் 
தடசமின்றி, 
இருவரும், அதற்குள்ளேயே கிடக்கலாம், 
ஆம் 
அதில் மட்டும்தான்,  
நீ எல்லோரையும் ஈர்ப்பாய் 
எல்லோரும், 
உன்னையே பார்த்திருக்கும்படி திகழ்வாய், 
இழுத்துக்கட்டாமல்,   
தளர்வாக விட்டிருக்கும்  
தூரிகைப்போன்ற,  இறகுவெட்டு செய்த முடி,  
உன்னை விரட்டிப்பிடிக்க எத்தனிக்கும் 
விரல்களிடமிருந்து  
தப்பி ஓடவேண்டும் நம் முதலிரவில்,   
அசலாகவே,  
சற்று  குறுகலோடு  இருக்கும் 
உன்  இதழ்களைக் கடக்க நேரிடுகையில், 
உதடு வன்முறைக்கு அழைக்க மாட்டாயா 
என்றிருக்கும் ம்ம், 
முதல் முறை, 
உன்னை பார்க்கணும்போல இருக்கு,  
வீட்டுக்கு வரட்டுமா என்றேன்,
சுற்றிலும் காவல், 
திறந்துவைக்கப்பட்ட,  
ஜன்னல் கதவுகளும், காவல் என்றாய், 
சரி மாயாவி போல  வந்துவிடுகிறேனே என்றேன், 
நடப்பதை யோசி என்கிறாய், 
சரி, உன்னை கரெக்ட் பண்றது எப்படி  
நீயே சொல்  என்றால், 
எதற்குமே பிடிகொடுக்காமல் இருந்துவிட்டு
வாய்மூடி  சிரிக்கிறாய், 
ஒரு முறை சுதாரித்து,  மறுமுறை  சரிந்து என
என் சத்திய சந்ததை எல்லாம்,  
பிடிமானம் விட்டு விட்ட  
திருகு சுருள் போல் 
உன்னை சந்தித்து போனபிறகு 
தொலைந்து போனவைகளின் பட்டியலில் 
இடம் சேர்த்துவிட்டேன்,

"பூக்காரன் கவிதைகள்"



Wednesday, 10 May 2017

நேசிக்கிறவளுக்காக ம்ம்


நேசிக்கிறவளுக்காக ம்ம் 
=======================

வீட்ல யாருமில்லாதப்போ, 
அவளும் நானும் தனியா இருக்கும்போது, 
யாராவது 
காலிங் பெல் அடிச்சா, 
அவளை எந்திரிக்க விடாமே, 
நான் போயி பார்க்கணும், 
என்னை மாதிரி ஒவ்வொருத்தனும், 
நேசிக்கிறவளுக்காக, 
பார்த்து பார்த்து செய்யணும் ம்ம், 
ஆனா என்னைக்கும் 
அதை சொல்லி காமிச்சிடக் கூடாது, 
எனக்கு எங்கம்மான்னா 
ரொம்ப பிடிக்கும் 
எல்லோருக்கும்தான் ம்ம்ம் 
அதுக்காக அவங்களை 
கல்யாணம் பண்ணிக்க முடியாது, 
அதுக்காகத்தான், 
என்னோட வாழ்க்கையில, 
என்னை நேசிக்க, அவள் அனுப்பப்பட்டிருக்கா  ம்ம், 
என்னைப்பொறுத்தவரை, 
கட்டில் ல மட்டுந்தான், 
அவ என்னை  தங்கணும் ம்ம், 
கட்டில விட்டு இறங்கிட்ட நிமிஷம் முதல், 
காலம் பூரா,
அவளை, நான்தான் தங்கணும்,  
அவளுக்காக, 
என்ன வேணும்னாலும் பண்ணலாம்,   
எந்த எல்லைவரைக்கும் கூட, 
போலாம்,  
ஒரு நிபந்தனையில்லா அன்பு ம்ம், 
அது அவளுக்காகத்தான்,  
ராத்திரி ரெண்டு மணிக்கு எந்திரிச்சி, 
முத்தம் கேட்டாலும், 
உடனே அவளுக்குக் குடுத்திடணும் ம்ம்ம், 
பல்லு விளக்கலேன்னாக் கூட 
பரவால்ல, 
கோச்சிக்கிட்டு, ஒரு நாள் பூரா,
அவ என்கிட்டே  
பேசாம இருந்தாலும், 
காலையில எழுந்து பார்க்கும்போது, 
அவள் அறியாதேயே நான், 
அவளை கட்டிப்பிடிச்சு படுத்திருக்கணும், 
வழக்கமா இல்லாமே, 
எதுவும் வாங்கத் தெரியாம, 
புதுசா ஏதாவது ப்ராண்ட் ல நாப்கின் 
வாங்கிட்டுப்போனா கூட, 
அத அவ கையில  
சும்மா குடுத்துட்டுப் போகாமே, 
அது அவளுக்கு காயமுண்டாக்காமே  
மென்மையா இருக்குமான்னு,
திறந்து, தொட்டுப்பார்த்து குடுத்துட்டு போகணும் ம்ம் 
அவளுக்கு நா 
லவ் சொன்ன நாளையோ, 
அவளை கைப்பிடிச்ச நாளையோ, 
ஒருவேளை 
மறந்துட்டேன்னா,  
அத இனிமே மறக்காத மாதிரி இருக்க
அவ எனக்கு,  
பயங்கரமான, 
பனிஷ்மென்ட் ஒண்ணு கொடுக்கணும் ம்ம், 
காருல போகும்போது, 
அவ என் தோள் சாஞ்சு 
தூங்கிட்டா, 
அவளுக்கு தொந்தரவாகாததப்போல, 
ஓடிக்கிட்டிருக்கிற 
மியூசிக் பிளேயரை, 
உடனே அணைச்சிடணும்,
என்னோட உதவியில்லாமே,
எப்போவும் 
அவ புடவையே கட்டக் கூடாது, 
குறிப்பா, 
என்னோட உள்ளாடைகளை,  
அவளைவிட்டு,  
துவைக்கிறபடியா வைக்கக்கூடாது ம்ம், 
நா கட்டிப்புடிச்சுத் தூங்குற 
தலகாணி மேலே, 
அவ கோபப்படணும், 
அவ அழிச்சாட்டியம் பண்ணுறப்பொல்லாம்,
அவளத் திட்டிட்டு, 
நான் போயி 
தனியா உக்காந்து அழுதுகிட்டிருக்கணும், 
என்னோட  அன்பை,
அவகிட்ட,  சொல்லமட்டும் கூடாது, 
காட்டணும் ம்ம் ,
அவமேல  வெறுப்பைக்காமிக்கக் கூடாது, 
எதுவா இருந்தாலும், 
அவகிட்ட சொல்லணும், 
அதை உடனே, மறந்திடனும் நான், 
ராத்திரி தூங்கவிடக் கூடாது 
அதுபோலவே, காலையில, 
என் அணைப்பிலிருந்து, 
அவளை,
எழுந்திருக்கவே விடக் கூடாது  ம்ம்,
அவளோட 
எச்சில் ன்னு தெரிஞ்சே, 
அவ சொல்ல சொல்ல கேக்காமே, 
அவ பாதி குடிச்சிட்டு வச்ச 
காப்பி கப்பை, 
நா எடுத்து பருகணும்,
அதைப்பார்த்து அவ கிண்டல் பண்ணி 
சிரிக்கணும், 
அதை நான் கவிதை செய்யணும் ம்ம்,
அவளைத் தொடாமயே, 
இங்கே வான்னு கூப்பிட்டு,
பக்கத்துல  உக்காரவச்சு,
என்  பார்வையாலேயே  
அவ முகத்தை நாணிட வச்சு, 
"ச்ச என்னடா இவன், 
இப்படி விழுங்குற மாதிரி  பாக்கறானே" ன்னு 
அவ நினைக்கும்படி 
அவளை பெண் செய்யணும் ம்ம், 
காதலும், காமமும், 
வேறே வேறே இல்லன்னு, 
அவளுக்கு நான், 
ஒவ்வொரு நொடியும் புரியவச்சிக்கிட்டே 
இருக்கணும் ம்ம், 
அவகிட்ட தோற்கிற ஒவ்வொரு நிகழ்விலும் 
நான், அவமேல வச்சிருக்கிற  
காதல் ல, 
ஜெய்ச்சிக்கிட்டிருப்பேன், 
அத விட்டுட்டு, 
அவளை நா ஜெயிக்க நினைச்சேன்னா,, 
ஒரு காதலனா,  
தோத்துப்போயிடுவேன் ஆமா ம்ம், 
இதெதுவும் நடக்காமே, 
அவகிட்டே எப்போவுமே, 
என்னை தோத்துக்குடுக்கவே விரும்பறேன் ம்ம்ம்,

Yes, really, I wanna means a lot to her mmm <3

"பூக்காரன் கவிதைகள்"

Thursday, 4 May 2017

"கேம்பஸ்" - (கல்லூரி வளாகம்) - 1998 - 2002



"கேம்பஸ்" - (கல்லூரி வளாகம்) - 1998 - 2002 ======================================= ஆத்ம விசுவாசமும் ஆர்ப்பரிப்பும் திரையாடுகின்ற அந்த வர்ண ப்ரபஞ்சத்திற்குள் தான் பதறிய மனசுமாய் எத்தியிருக்கிறேன் கடந்த இரவு, அதீத தனிமையிலிருந்தபோது, அங்கோர் தனிமை, எனக்கு துணை இருந்தது, எதுவாகினும், மரணத்தைவிட அது ஆறுதலாகி இருந்தது இப்பொழுதும் நான் காதலன் தான் ஆனால், காதலி இல்லாத, ஒரு மகத்தான உணர்வு ம்ம், விரகத்தின் போதுதான் காதலித்தலின் தீவிரவாதம், தலை ஓங்குகிறது இசபெல்லா, ஜெரால்டிடம் சொல்லியதைப்போல "என்னால், எப்போதும் "உன் காதலற்று வாழ்ந்துவிட முடியும் ஆனால், என்னால், ஒருபோதும் வாழ்ந்துவிட முடியாது உன் நினைவுகளை நான், உட்கொண்டு விடுவேனானால்" தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ம்ம் யாரோ ஒருவருடைய இன்மைதான் , அவர்களுடைய இருப்பிடத்தை, நமக்கு நினைவுக்கூறும், இங்கு, இந்த இடைநாழியில், எத்தனைப்பேர், அவர்களுடைய பிரியப்பட்டவர்களை நோக்கி, இதயம், பெருமழை முழங்கி, காத்து நின்றிருப்பார்கள், சொல்லாமல் விட்டவைகளை மூடிவைத்து, பரஸ்பரம் அறியாதவர்களைப்போல, செண்பகத்தின் நிறங்களுமாய், மிளிர்ந்த விழிகளுமாய், நீண்டு வளர்ந்த, தரைத்தொடும் ஈருகளுமாய் தாழ்வாரங்களின் வழிநெடுகில், நடந்து போயிருப்பார்கள், அன்றைக்கு மறுநாள், என்னுடைய பிறந்தநாள் தினமாய் இருந்தது, பிறந்தநாள் ஆகோஷத்தின் நினைவுகளொன்றும் என்னுடைய மனசில் அதுவரை இல்லை, குட்டி காலத்தில் ஸ்கூல் விட்டப்பின்னால் அப்பாவோட விரல் நுனியைப் பிடித்து நடக்கும்போது, சிலதை ஆக்கிரகித்திருக்கிறேன், பின்னாளில் எல்லாம் எனக்கு வெறும் ஆக்கிரகங்களாகவே இருந்துபோயின எதுவும் நடக்கவில்லை, இப்போது நான், யாரோவுடைய அபையத்தின் தணலில் இருக்கிறேன், கல்லூரி கேம்பசும், முத்தச்சி மரமும், என்னை நேசிக்கும் அவளும், என் மேல், தணல் விரிக்கின்றதை, அறிகிறேன், வேறே கொண்டாட்டங்களொன்றும் இல்லாதே, நாங்கள் இருவரும், முத்தச்சி மரமும் இந்த பிறந்த நாளை ஆகோஷித்திருக்கிறோம், என்ன என்று, பெயர் இடாத அந்த உறவுக்குள் வாழ்ந்திருந்தோம், எங்களுக்குத் தெரியும், நாங்கள் இருவரும் இதற்குப்பின்னால், இரு வெவ்வேறு தனிவழியில் சென்றுவிடுவோம், இருப்பினும் ஒருவரையொருவர் காணும்போதும் எங்களுக்குள் எங்களை ஒருமிக்க சிரமிக்கும் போதும் ஏதும் பேசாதே சந்தித்ததைப்போலவே கைக்குலுக்கி, பிரிந்தும் விடுகிறோம் , அவள் சொன்னதுபோலே, கீட்ஸ், ஷெல்லி, இவர்களுடைய, கவிதைகளில் மாத்திரமே வாழும் , ஒரு ஸ்டுபிட் காதலர்கள் போல் ம்ம் இங்கு நின்றுதான், கன்னிகே, நிந்தன் கண்களில் நின்றுதான் ஆசையின் ஆதித்ய கிரணம் என் இதயத்தை முத்தமிட்டது, இங்கு நின்றுதான், ஒருவேளை சொர்கத்தின் பூத்தையல் ஆடைகள் எனக்குக்கிடைத்திருந்தால் உன் பாதங்களுக்கு முன், விரித்திருப்பேன், என்றதும், கன்னிகே, இதே கல் படவிலும், இதே மரத் தணலிலும் இன்னொருமுறை நீ கிடைப்பாயென்றால் ஒரு வேனல் முழுவதும் உதிரும் பூக்களால் உன்னையும் என்னையும் மூடிடுவேன், முடிவில், நானும் யாத்திரையாகிறேன், எனக்கு முன்பே கடந்து போனவர்களின் வழிகளூடே விடையில்லாத எத்தனை எத்தனையோ கேள்விகளை, சுயம் கேட்டுக்கொண்டு, இதோ, நானும் யாத்திரையாகிறேன், ம்ம் "பூக்காரன் கவிதைகள்"