சிறுமழை பெய்துக்கொண்டிருக்கிறது
ஸ்மோக்கிங் ஜோனில்
அவன் இஷ்ட்டத்தோடு புகைத்துக்கொண்டிருந்த
சிகரெட் துண்டை
மணற் நிரப்பிய தகர உருளையில்
வீசிவிட்டுப்போனான் ,,
பார்த்துக்கொண்டே நிற்கிறேன்
கூரை ஒடிசிலின் வழியே
சதா சிவிறிக் கொண்டிருக்கும் மழைத்துளிகளில் இருந்து
அப்புகையை அணைக்கப்போகிற
ஒருத் துளிக்காய்
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment