Tuesday, 7 February 2017

விழித்திருந்தவனின் கனவு - கடிதப்பதிவு


விழித்திருந்தவனின் கனவு - கடிதப்பதிவு 
=======================================

யதார்த்தமாய்தான்  ஒருமுறைக்கண்டது  
அந்த ஸ்வரம் கேட்டது 
மீண்டும் கண்டுமுட்டியபோது 
கூடுதலாய் அடுத்து 
உன்னை அறிந்ததும் கூட  
சிருஷ்டியை வாசிக்கிறேன்  
என் ஆராதனையைத் தெரிவிக்கிறேன் 
இயற்கையோடு சொல்லி 
விமர்சிக்க விருப்பமில்லை உன்னை  
ஆதலால்தான் 
எனக்குள் மாத்திரம் ஆராதிக்கிறேன் ம்ம்  
என்னுடைய முதல் கடிதம் 
உனக்குள்
எதோ ஒரு கோணத்தில் 
எனக்காய் ஒரு ஸ்தானம் 
ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம் என்ற 
நம்பிக்கையில் 
அவ் அதிகாரத்தில் 
இரண்டாம் கடிதம் எழுதுகிறேன் 
இப்போ 
எனக்கு நினைவில் வருவது  
நிறைந்த ஜனக்கூட்டத்தின்  மத்தியில் 
கரகோஷங்களுடைய நிழலில்  
புன்சிரியுடை நிலாவுமாய் 
அபூர்ணமான வரிகளில் 
ஞாழற்பூவின்  
சுகந்தம் உதிரிய  பாவனையோடு 
உனக்குக்கொடுத்த 
நிமிடங்களை 
அழகாக்கிக் கொண்டிருந்தாய் 
காடினை,,, 
நிறுத்தம் படிப்பித்தது 
மழைதான் என்ற சங்கல்பமும்  
காற்று,,  
திடீர் கந்தர்வனாய் வந்து 
தன் வேகத்தை மடியொதுக்கி 
முத்தமிட்டுப்போகும் தோரணையும்   
தூலிகையாகி
அதினின்று விழுந்த 
இவ் அச்சரங்களின் யதார்த்தங்களே 
மூடியிருந்த என் கண்களை 
மெல்ல எழுப்பின 
அது யாருடைய சிருஷ்டி 
என்றறியாதே 
அந்த வார்த்தைகளிலே திருத்தம் குறிக்கிறேன் 
என்ற அறிவில்லாய்மையை 
அன்று நான் செய்துப்போய்விட்டேன்
ஆனாலும்  
அது கவியாத்திரிகைக்கு 
இஷ்டமாகியிருந்தது என்னும் நிதர்சனம் 
என்னுள்  தீராத 
ஒரு அனுபோதையாகியிருந்தது ம்ம் 
அதுதான்   
என் வாழ்வின்  
அனர்க்க நிமிஷங்களில் ஒன்றாகியிருந்தது 
இனி டைரியை மூடிக்கொள்கிறேனே

,,,"ஆராதகன்",,,  

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment