Tuesday, 21 February 2017

ஒரு ஏகாந்ததை யாசிக்கிறேன்

ஏகாந்ததையின் கனவுகள் ஊடே அத்திரையோடிக்கொண்டிருக்கும் ரோஜாக்காடுகளில்  நடந்து செல்கிறேன், சுகந்தங்களை நினைவுக்கூறும் தருணம்போல இடைவேளையில் மேனித் தழுவிய காற்று  ஏகாந்தம் முறித்து என்னுடன் வருவதில் விரோதமில்லைதான் ம்ம்..நிறைந்த பச்சையங்களூடே சொந்தமென்று அவகாசப்படும் தனிமையை  நெஞ்சோடுச் சேர்த்தணைத்து  ஒருபோதும் முடிவில்லாத யாத்திரை, காய்க்கனிகள் புசித்து, அருவிகளிலே தெளிநீர்க் குளித்து, வழிக்கூடுகளில் அந்தி உறங்கி, காடும் மலைகளும் நதியும் குன்றும் என எல்லாம் தாண்டி அங்ஙனம் நடந்து நடந்து போய்க்கொண்டே இருக்க யாசிக்கிறேன். யாருடையத்தனிமையிலும் இனி
தானேச்சென்று விழவேண்டாம் தானே ம்ம் :)

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment