Saturday, 11 February 2017

ஆனைக்கள்ளன்


ஆனைக்கள்ளன் 
===============
(என்றோ எப்போதோ கேட்டவைகளும் சொல்லியவைகளும்)

அவள்

எனக்கு தோன்றியது ஒன்று, 
என்னை வீழ்த்திடவா நீ இங்கு வந்தாய்  ம்ம், 
உன்னால் அது கழிந்தபோது 
அ்தியாசமாகிட்டு,   
பின்னே கள்ளக்கதைகள் சொல்லி 
கூத்து களித்ததைக் கண்டபோது  
சர்க்கஸிலே 
பஃபூனினோடு உள்ளதுபோல் ஒரு ரசம்,,,
பாலையில் 
பூக்களின் வாசனைப்போல , 
நிலா ஒழுகும்
பனி இரவுகள் போல 
பின் எப்போது இது இஷ்டமாகி மாறியது ம்ம்,, 

அன்று நீ போனப்போ ,, 
திரும்பி வரும்வரை  
என் அறையின் சுவரிலே 
யாருமில்லாததைப்போல பார்த்து  இருந்தேன்  . 
அந்த சுழற்சிகள் 
இனியும் வேகமாய் சுழலணும்
நான் ஆக்கிரத்திருந்தேன்,,,  
அப்போதுதான்  
என் மனசு சொன்னது   
உன்னை எனக்கு இஷ்டம் என்று 

எல்லோரும் 
மியூசியத்திற்கு வருவது  
சரித்திரத்தை திரும்பிப்பார்க்க 

நேரம் வைக்கவில்லை 
உன் பின்னால்தான் இருக்கிறேன் 
கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாமே ம்ம், 

உன்னிடம் நான் 
சொல்லிக்கொண்டிருப்பதையும்  
என்னிடம் நீ 
சொல்ல இருப்பதையும்  
நாமே சொல்லிக்கொள்ளலாம் 

அல்லாது 

இதெல்லாம்  
சொல்லமுடியாமல் போனாலோ 
என்று  பயந்துதான் 
எழுதலாம் என இருந்தேன் ,, 
நிறைய எழுதிப்பார்க்கிறேன்   
எதுவும் சரியாக வரவில்லை,, 
எல்லாத்தையுமே  
சுருட்டிக்கசக்கிக்கூட்டி எறிந்துவிட்டேன் ,,

எப்போதோ ஏற்ற முறிவின் சுவடுகள் 
இப்போது இப்போதுதான் 
மாய்ந்து வருகின்றன    
மீண்டும் அது சம்பவிக்குமோ 
என்ற அவசியமில்லாத ஒரு பயம்  
என் மனதில் இருக்கு ,,
அதனால் தான் 
இத்தனை ஒரு நீண்ட முகவரைச் சொல்கிறேன் .. 
ஒரே ஒரு வார்த்தையே 
அக்கடிதத்தில் உள்ளது ,, 
அது உனக்குத் தெரிந்ததும் கூட

அவன்  

ஐந்து காசுக்கு கதியில்லாதவன்  
ஆனைக்கு 
விலைச்சொன்னதுபோல
உன்னிடத்தில் 
நாடகம் விடுத்த ஆனைக்கள்ளன் நான் ,, 

மனதில் ஏதுமில்லாதபோது 
ஆகாயம் உருண்டு 
கீழே  என் தலையில் விழுந்தாலும் 
தாங்கிவிடலாம் என்ற 
தைரியம் இருந்தது என்னிடம் அதுவரை  

காரணம் 
நஷ்டப்படவேண்டி காத்திருக்கும் 
விலைமதிப்புடைய  எதுவும்  
எனக்கென்று   இல்லை , 

ஆனால் 
உன்னைவிட்டு வந்திட்ட இப்போது  
எதையோ நஷ்டப்பட 
போகிறேன்போல் 
என்ற தோணல் மட்டுமாய் நகர்கிறேன், 

பெரிய மிடுக்கன் நானென்று 
எப்போதும் 
சுயத்தம்பட்டையிலிருந்தேன்   

இப்போதே என் மனசு சொல்லிற்று, 
நாம் நமக்கு என்று   
முடிவெடுக்கமுடியாத சிலவை  
நம்மிடமே எங்கோ இருக்கின்றன...  
அங்கே புத்திக்கும் சூத்திரத்திற்கு ஏதும் இடமில்லை, 

ஒளிவாட்டங்களுக்கிடையில் 
அறியாதே சொல்லாதே  
எப்படி எப்படியோ 
உன்னை இஷ்டப்பட்டுவிட்டேன்  , 

எத்தனையோ ஊசிகளில் நுழையும் 
ஒருக்கண்டு நூற்போல ,   
ஒரு பொய்யிலிருந்து தப்பிக்க 
இன்னொரு பொய்யில் நுழைந்து நுழைந்து 
முடிவில் எல்லார் முன்னிலும் 
குற்றவாளியைப்போல நின்றபோது  
உனக்கும் எனக்குமிடையில் 
அகண்ட தூரமே நிறையக் காண்கிறேன், 

உயிர் 
சுவாசமிழந்தைப்போல்  
எதுவுமே விழித்திரைக்குமுன்னால் 
வசப்படாமல் 
ஒரு மௌனியாகியிருந்தேன் , 

அங்கே அன்று 
யாருக்கு நேரே  நான் இமை அடைப்பது ,, 
இனி யாரோடு அங்கே 
குட்டிகுட்டிப்பொய்களைச் சொல்லி 
சிரிக்கவைப்பது,  
விலையில்லாதவன் ஆகிவிட்டேன், 

ஒரு தீர்மானம் எடுக்கும் கழிவில் இல்லை,  
ஆனால் 
யாரும் என்றும் எல்லோரையும்   
 சந்தோஷப்படுத்திக்கொண்டு  
என்றென்றைக்கும் அந்த யாரோ 
அவர்களுடைய சுயம் சதித்துக்கொண்டு  
வாழவும் முடியாதுதானே, 

என்றால் 
என்னால் முடியும்,  
வாழ்ந்துவிட்டுப்போகிறேன்    

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment