Thursday, 27 April 2017

பிராண சகி



பிராண சகி
===========

அடியே அன்பு குந்தானி, நீ  எப்படி இருக்கிறாய் ம்ம்

இன்னும்
நீ எனக்கு எழுதும் எல்லாக் கடிதங்களில்,
என் விரல்களால்,
உன்  சிகைப் புணர்ந்த
மருதாணி சீகக்காய் வாசனையையும்,
அந்த மயில் பீலி
கொண்டையுள்ள,
உன் பேனா மை வாசனையையும் தான்  ஒர்க்கிறேன்

உனக்கு நினைவிருக்கும்,
அன்று நம் முதலிரவு,
உன் வீட்டில்,
எனக்கு எந்த அறையும்,
அவ்வளவு பரிட்சயமில்லைதான்,
நீ இருக்கும் அறைக்குள்,
தாமதித்தே வந்து சேர்ந்தேன்,

உனக்குத் தெரியும்,
நான் மறதிக் காரன்  என்று,
அந்த இரவு,
உனக்குகொடுக்கவென்றே
ஒரு மோதிரம் வாங்கியிருந்தேன்,
அறைக்குள் வந்துவிட்டு,
அதை வைத்த இடம் தெரியாமல் தேடுகிறேன்,
நீயும் ஏதுமறியாதே முழிக்கிறாய்,
அதுவா இதுவா என,
ஒவ்வொரு பொருளாய்
பெயர்  சொல்லிக்கொண்டு வருகிறாய்
கடைசியாய்,
நீ  சொல்லித்தான்  தெரியும்,
அது  இருந்த  இடம்,

அடுத்தமுறை  மறக்கும் முன்பு ,
இதை உன் விரலில்  கோர்த்துவிடுகிறேனே என்றேன்,
நன்றி கூறி,
பற்கள்  தெரியாதே சிரித்தவன்போல் ம்ம்,
நீயும் சிரித்தாய்,
அப்போது,  நான் அழகாய் இருப்பதாய்ச்சொன்னாய்,
உன் மோதிர  விரலோடு,
எல்லா விரல்களையும்  நீட்டிக்கொடுத்தாய்,
அதிகம்  வெட்கப்பட்டாய்,
அழகாகியிருந்தாய்,

அடுத்து நான் கேட்டேன்,
எப்போது வெட்கப்பட்டு முடிப்பாய் என,
முறுவலித்துக்கொண்டே
மோவாய் அசைத்தவள்,
ஏன் என்றாய்,
நீ முடிக்கும் இடத்திலிருந்து ,
நான் வெட்கப்படப்போகிறேன் என்றேன்,
ச்சீ என்றாய்,

பொட்டிட மறந்த உன் முன் நெற்றியில்,
பவள பொட்டுபோல்,
பதக்கம்  விழுந்திருந்தது,
ஆடை ஏதும் அகற்றாமல்,
அனுமதியின்றி எழுந்து நடந்து,
உப்பரிகை மாடம் வரை போகலாமா என்றாய்,
அந்த செய்கையும்,
அந்த பாணியும், பிடித்திருந்தது,
அங்கு போனதும்,
சுவரோடு சாய்ந்து நின்றாய்,
பாதி நிசி காற்றுத் தழுகி,
உன் பட்டாடை விலகி இருந்தது,

அற்பம் நடக்கலாமா என்றாய், அதே அனுமதியின்றி,
வெளியிடையில்,
தளிர் மரங்கள் இளகி,
சருகுதிர்ந்து,
உன் கைகளில் பட்டப்போது
உன் கண்ணாடி வளையல்கள், சிணுங்கின,

பொற்றாமரைப் படவில்,
அக்கரைக்கடந்து,
பூஞ்சோலைப்பார்க்கலாமா என்றாய்,
அதே அனுமதியின்றி ம்ம்,
பூஞ்சோலைப்படர்வில்,
உன் பாதச்சரம் பட்டதும் ,
பூக்களெல்லாம், சிரித்துக் குலுங்கின,

பாலொளி சந்திரிகையில்,
உன் மந்தகாசம் கண்டு நின்றபோது ,
தாமதமின்றி அணைக்கலாமா என்றது,
என் மெய்சிலிர்த்த, குளிர் ம்ம்,

"பூக்காரன் கவிதைகள்"

Tuesday, 25 April 2017

காதல் வரும்போது



காதல் 
=======

பருவம் தப்பிய காற்று, முதலில்  மென்மையா தழுவி, பின்பு சிலுக்கவைத்து,  ஜோன்னு மழைப்பேஞ்சு, தூறலாகி, தழுவத்திற்கு உள் நுழையும், நீர்த்த குளிருக்குப்பின்னான சூடு என, உறக்கத்தின் சலனம், உணர்வோடையின் சிணுங்கல் என,  இப்படி பல ஆகி ஆகி, துள்ளல் நின்ற மனசுக்குள் நிசப்தமாகும், 

காப்பி குடிக்குறதுக்கு முன்னாடி, அந்த ஆவி, மூக்கு நுகரும்போது, அந்த டேஸ்ட் ல மயங்கிருக்கும்போதே பருகும் முதல் துளிபோல சுவையா இருக்கும், அதே காஃபியுடைய கடைசித்துளிக்காக, கீழுதடும் மேலுதடும் போட்டிபோட்டு சண்டை போடுமே,  அப்படி இருக்கும்,
இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்பதைப்போல, 

400  மெகாவாட் மின் ஆலை, ஷாக்கடிச்சும், முதல் முதலா, இதமாகுமே,  அப்படி இருக்கும்,  

பிறந்த குழந்தையை முதல் முதலில் வெளிய கொண்டுபோகும்போது,  பல நிறங்களைப்பார்க்கும் போது , அது கண்கள், புளுக் புளுக் கென்று, முன்னும் பின்னும், ஏதும் புரியாததுபோல், சுத்தி சுத்தி பார்க்குமே அப்படி இருக்கும், 

ஒரு பூவோட முதல் முளைத்தலின் தருணம், அப்போது உண்டாகும் முதல் வாசனை மாதிரி, ஒரு முதல் வசந்தம் மாதிரி, தெரிஞ்சோ தெரியாமலோ யாரோ ஒருத்தியோட தாவணி,  முகம் தழுவும்போது, மயிலிறகு வருடின மாதிரி, இதம் வருமே,
அப்படி இருக்கும், 

எப்போதோ, என் கவிதையில் சொன்னதுபோல,  
காற்று நிரப்பிய இரப்பர்  பலூன் ஒன்று மேலே மேலே பறந்து பறந்து போகிறதைப்போல, காதல் நுழை மனசு, லேசாகி, அது  போகும் திசையறியாது மேலே மேலே பறந்து போகுமே, அந்த இடைவரிகள்,  அப்படி இருக்கும்

தென்றற்காற்று, தன் தலைமீது முதல் தொடுகையில், உயர்ந்த மரங்களெல்லாம் கர்வம் கொள்ளுமே, அப்படி இருக்கும் காதல்,

கடனில்லாதவனுடைய பரந்த மனசுப்போல, காதல் பூக்கிறவங்க மனசு,  சுயநலமே இல்லாம இருக்கும், 

நிழலுக்கே நிறம் கொடுக்கும், 
அருவருப்புகளே அதீதமாகும், அது வருகையில்,

காத்திருக்கும் பார்வைகளுக்கு முன்னால், ஏதும் உரிக்காத அடங்களுக்குமான, மௌன இடைவெளி அது,

சலங்கை ஒலியிலே, கமல் ஹாசன், ஜெயப்ரதாவை பிரியும் காட்சி ஒன்று வருமே, 

பிரிகையில், 
கையசைக்கும் நட்பைவிட, 
விழியசைக்கும் காதல்,
வரிகளால்,
விளக்கிட முடியா இருள் அது,  
விடைகொடுத்த விழிகளுக்கு மறைவில், 
விடியாத பாரம்போல, 
விளங்காத வலி போல, 
உயிர்வாழ்தல் ஏக்கமாகும் காதல்,. 
அவ்ளோதான்,,

சேரும்போது 
உணர்ச்சிகளுடைய கலவரம்போல, 
சேராதபோது 
உணர்வுகளுடைய விதவைப்போல 

இப்படி இப்படி தெரியுற, ரசிக்கிற, 
ஓரோரு விஷயத்திலும்,  
தெரியாத காதல், 
ஒளிஞ்சி, அடைஞ்சி, மூச்சுமுட்டி கிடக்கும்,

பூக்காரன் கவிதைகள்

Thursday, 20 April 2017

சரும குறிப்புகள்




சரும குறிப்புகள்
================

பிரயாண நிழலின் பல நிறங்கள் சொல்லும், எப்படிப்பட்ட இடத்திலும் கூடும் ஆள்கூட்டத்தில் யாரோ ஒருவர்
மரண வாடையோடு இருக்கிறார், அந்த புண்ணிலிருந்து கசியும் சீழ் அருவம் இங்கெங்கோதான், யாரிடமோ இருந்துதான் வெளிப்படுவதாய்  முன்கூட்டியே கருதிக்கொள்ளுங்கள்,  காலம் சிலப்போது அவர்களை நம்மிடம் அருக வைக்கும், சிலப்போது அவர்களை நம்மிடமிருந்து தூரே யாரென்றுத் தெரியாமலேயே அவர்களுடைய இஷ்டத்திற்கேற்ப  மாய்த்துக்கொள்ள உதவுவதாய்ச் சொல்லி சதியில் தள்ளும்.

அந்த மாதிரிகள், நம் அருகில் இருத்தப்பட்டிருக்கலாம், இல்லை நம் அப்போதைய அரைமணி நேர பார்வைக்கு பட்டுவிட்டு பின்னர் அவர்கள் ஒருநாளும் நம் ஓர்மையிலிருந்து அற்றுப்போயிருக்கலாம்.

இதுபோன்ற ஒரு சூழலை, நாம் எங்கிருக்கிறோமோ, நம்மை சுற்றி இருப்பவர்களிடம் ஒரு ஹெலோ சொல்வதன் மூலம், அவர்களுடைய வாழ்வு முடிவின் கந்தக உமிழ்விலிருந்து காத்துவிடமுடியும் என்பது கூட
வெறும் ஒரு நம்பிக்கை மட்டும்தான். நம் முன்னால்  ஏற்படப்போகும் ஒரு துர் சம்பவத்தின் நிமிடங்களை
நாம் சொல்லும் ஒரு ஹலோ அற்பநேரம் தள்ளிப்போடும், அந்த நிமிடங்களைக் கடந்தவர்களுக்கு மேலும்
இது மாதிரி எண்ணங்கள் வராமல் போகலாம் இல்லையேல், நம்முடனான அவர்களுடைய சமயம் கழிந்ததும்
அவர்கள் அந்த தைரியத்தை வேறு எங்கோ பிரகடனப்படுத்தி இருக்கலாம்,

எதுவாகினும் அதைச்  சொல்ல ஒருவருமின்மையை உணர்த்தும்  அழுத்தங்களே  முக்கிய  காரணம், ஆதலால் எல்லோரும், எங்கு கடக்கும்போதும் அந்த சூழலில் உள்ளவரிடம் ஒரு ஹலோ சொல்லிக்கொள்ளலாமா

1998 , உறவினன் ஒருவன், ரயிலில் சாடி தற்கொலை செய்யலாம் என போய்விட்டு, தெருநாய்களின்  குலைத்தல் கண்டு  பயந்து
வீட்டிற்குத்  திரும்பியிருந்தான்,
அங்கே தெருநாய்களின் ஹலோ, அவனுடைய முடிவை மாற்றவைத்திருக்கலாம்  

மரணம்

குழந்தைகள் முதல் பிராயமானவர்கள் வரை, யதார்த்த மரணம் முதல் துர்மரணம் வரை, பலருடைய பேரும்,
ஆதியமும் அவசனமாகியும் பத்தரத்தில் வருவது அவர்களுடைய மரணத்திற்குப் பின்னால் தான், கூட நான் எழுதும் இந்த நாலுவரிகளில் தீரும் ஒரு மனுஷனுடைய ஆயுள்

2003, இப்படித்தான் ஒருமுறை, திருவனந்தபுறம் டூ நிஜாமுதீன் எஸ்பிரஸில் ,, கோவையிலிருந்து நிஜாமுதீன் செல்லவேண்டுமாய் (பழைய டெல்லி) 43 மணித்தியாள பிரயாணம் ...நிஜாமுதீன் இதை அடுத்தே இந்தியா கேட், சாணாக்கிய புரி, சந்திர குப்த மார்க், எல்லா வெளிநாட்டுத் தூதரகங்கள் (Foreign Embassies) அங்கேதான் இருக்கின்றன,  சான்றிதழ் சான்றொப்பம் (Certificate Attestation)  பெற அங்கேதான் செல்லவேண்டும். நியூ டெல்லி  தனியாக இருக்கிறது.

ரயிலில், முதல்  வகுப்பு ஏசி அறையில் ரெண்டு  லோயர் பெர்த் ரெண்டு அப்பர் பெர்த் இருக்கும், அறையை அடைக்கும் வசதி உள்ளதால் மட்டுமே அது இரண்டாம் வகுப்பு ஏசி சீட்டுகளைவிட பிரதானப்படுகிறது, பெரும்பான்மை ஆட்கள் முதல் வகுப்பு ஏசியில் பயணிப்பதில்லை, அதிக கூட்டங்கள் என்பது வெகேஷன் சமயம், வடக்கிலிருந்து தெற்கில் வேலை செய்துக்கொண்டிருப்பவர்கள்  அவர்களுடைய  ஏதேனும் பண்டிகை சமயத்திலேயே முதல் வகுப்பு ஏசி அம்மாதிரி நிரம்பும்.  தனித்த  ரயில் பிரயாணங்களை நான் தவிர்ப்பதில்லை, பெரும்பாலான என் டைரியின் பக்கங்களை நிரம்பியவை அவைகள் தான் என்றும் போலில்லாமல், அம்முறை அடுத்திருக்கிற லோயர் பெர்த் பதிவாகியிருந்தது, (எப்போதும் இது சாத்தியமல்ல).

அவள் ஒரு பெண், அப்போது ஒரு 34 வயது காணும்,  பிரயாணங்களில் அடுத்திருப்பவர்களை யூகிக்கும் பழக்கம்   எனக்கு அலாதி, முதலில் கண்ட ஐந்து நிமிடங்கள், அவளை யூகிக்கமுடியுமா என்றது மூளையும் மனமும்,

சாந்தமாய், அன்பின் உருவாய், என்று இப்படி எல்லாம் பொய் சொல்லவிருப்பமில்லை, இந்த சந்தர்ப்பம் இனி எப்போதுமே வரப்போவது இல்லை, இதை எப்படியாவது பயன் படுத்திவிடவேண்டுமே என்கிற அன்றைய வயதை ஒத்த சராசரி ஆண் மனமும் இல்லை, ஆனால் ஆற அமர இருந்து அளவளாவிக் கொண்டு, சில பார்வை சாப்பிட்டு, அவள் சந்தர்பம் கொடுத்தால், அலைப்பேசி எண் வாங்கி, கொஞ்சநாள் கவிதை செய்யலாம், மேலும் நெருக்கமானால், அதைப்பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்ற யூகம், அவளிற்கு வந்த முதல் காலில்
சுக்குநூறாகியது பெங்காலியில் (Ami Okane Asbo, Tarpar Katha Bol Bo - நான் அங்குதான் வந்துகொண்டிருக்கிறேன், வந்து சேர்ந்ததும் பேசலாம் ) என  சொல்லிக்கொண்டிருந்தாள் " எனக்கும் பெங்காலி கொஞ்சம் பேசத்  தெரியும் " என்ற ஒரு ஆத்ம சமாதானம்,  kemon acho (எப்படி இருக்கிறாய்), என்று ஆரம்பிக்கலாமா என்பதற்கு முன், அடுத்தடுத்த மணிகள் ஒலித்துக்  கொண்டே இருந்தன அவள் அலைப்பேசியில் முடிந்தவரை இல்லை இல்லை
என்பதே அவளுடைய பதிலாக இருந்தது,  ஒரு மணி நேர அமைதிக்குப் பின்பு, அவள் அவளொரு விலைமகள் என்பதை அறிமுகப்படுத்த சிறிதும் தயங்கவில்லை, அழுதுக்கொண்டிருக்கிறாள், பதினான்கு மணித்தியாள பிரயாணம் முடிகையில் ராட்சத வேகத்தில்  ஆந்திராவை கடந்தேறிக் கொண்டிருந்தன வேகன்கள் .

இப்படி ஒரு பெண் அழுது கொண்டிருப்பதை அதுவும் பிரயாணத்தில் இப்போதுதான் பார்க்கிறேன், பொறுக்கமுடியாமல் அவளே கேட்கிறாள், உன்னருகே ஒருவள் இப்படி அழுகிறாளே, ஏன் என்று
கேட்கத் தோன்றவில்லையா, உன்னை சொல்லி என்ன இருக்கு, எல்லா வயது ஆண்களும் அப்படித்தான்
காமமோ கொலையோ, பெண்ணின் உயிர் உச்சம் தொடும்வரை விடுவதாய் இல்லை, இதிலிருந்து நீ மட்டும்
மாறுபடுவாயா என்ன என்கிறாள், நான் செய்வதறியாமல் எழுந்து அப்பர் பெர்த்திலிருந்த  பெட்டியைத் திறந்து
டைரி எடுக்கிறேன், மேலும் அவளிடம் நான்தான் பேசவேண்டும் என்பது அவசியமற்றது, நீ பேசுவதைக் கேட்டால் போதும்தானே பேசு கேட்கிறேன் என்றேன்,,,

பேசுவதற்கு முதலில், அவள் தன் ஆடைகளை அவிழ்த்து அவள் உடலிலுள்ள சரும குறிப்புகளை காண்பிக்கிறாள், ஒரு வளர்ந்த உலகம் இப்படி சிதைந்திருக்காது ஏது பூகம்பத்தாலும் கூட, அப்படி
சிதைக்கப்பட்டிருக்கிறாள், அவள் முன்னால் விதி ஒரு பூகம்பத்தை கொண்டுவரும்போது
நம்மைப்போன்று அவள் பயந்துகொண்டிருக்கமாட்டாள், அத்தனையையும் அவள் சருமத்தில்
கொண்டிருக்கிறாள், இதற்கிடையில் இவளைக்குறித்த அந்தரங்கம் தெறித்த சிலர் எங்கள் வேகனின்
கதவை தட்டி இம்சித்துக்கொண்டிருந்தார்கள், அவளும் இல்ல்லையென்ற பதிலோடே, வருகிறவர்கள்
அவளைப்பார்த்து கெஞ்சிவிட்டு அவள் முடியாது என்னும் பட்சத்தில் என்னையும் பார்த்து
முறைத்துச் செல்வதால், அந்த அறைக்கதவை இழுத்து மூடிவிட்டோம்,

அவளுடைய இப்பிரயாணம்  அவளை ஏற்க இருக்கும் அன்றைய "தற்போது காதலன்" வீட்டிற்குச் சென்று அவனிடம் சொல்லிவிட்டு மரணிப்பதில் இருந்தது

முதலில் யாரையோ காதலித்தாள் அவனால் ஏமாற்றப்பட்டாள், பிறந்து பதினாறை எட்டிய மகன்
அவளையே வியாபாரப் பொருளாக்கினான் "காலம் அவனை பண நோய்க்குள் தள்ளிய சாபமாய் இருக்கலாம்

ஹிந்தியிலும் பெங்காலியிலும் பாதிக்குங்கீழ் தெரிந்த மழலைத் தமிழிலும் என

அவளே பேசிக்கொண்டிருக்கிறாள், நான் குறித்துக்கொண்டிருக்கிறேன்,

Cut ,,,,,,,,,,,,,

""அவர்கள் மாறி மாறி என்னை நிரவதி தவணை பலாத்காரம் செய்தார்கள்
ஓரோரு முறையும் அவர்கள் கைக்கொட்டி சிரித்தார்கள்
என் புணர்புழையிலிருந்து தகர்ந்த இரத்தம்
அவர்களை போதையாக்கியது
அது போதாதென்று, ஒரு பெரிய கம்பிப்பாறையை
அவர்கள் குத்தி இறக்கினார்கள்
சுகமா இருக்கா சுகமா இருக்கா ன்னு
இடை இடைக்கு
அவர்கள்  என்னைக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்
""சுகமரணமாயிருந்தது ""

Cut ,,,,,,,,,,,,,

எத்தனைப்பேருடைய மரணத்தின் தணுப்பு
என் விரல்கள் ஏற்று வாங்கியிருக்குமோ ?? ,
சிலபோது அவை
என் இதயத்திற்குள் நெரித்தேறும் போல
எல்லா எழுத்தர்களுக்கும்
அவரவருடைய ஸ்ருஷ்டிகளை
மற்றவர்களுக்குக் காண்பிக்க
பயங்கர ஆசையிருக்கும்
என்றால் எனக்கு அப்படி இல்லை
அது அவர்களுடைய சுய வெளிப்பாடு எனினும்,
என்னுடையது
இறந்துகொண்டிருக்கும்
ஆத்மாக்களின் வெளிப்பாடு ஆகும்
ஒவ்வொரு
சரும குறிப்புகளை கேட்டெழுதும்போதும்
ஒவ்வொன்றாய்
கிழித்தெறியும் பேப்பர்களின்  மேல் தான்
கோபித்துக்கொள்கிறேன்

Cut,,,,,,,,,

நிஜாமுதீன் சென்றதும், பிளாட்பாரத்தில் இறங்கவேண்டும், அவளால் அவளின் உடமைகளை தூக்கிச்சுமக்க முடியவில்லை, என்னிடம் உதவி கேட்கிறாள்,

நான் பிளாட்பாரத்தில் இறக்கிக் கொடுக்கிறேன், அந்த பிரயாண நிறுத்தத்தில் இறங்கிய, அந்த அறையில் எங்களை கண்ட அனைவரும், Saala Ek ki  Aadhmi Mazha Kya Tha, Hum Lokh ka Ek ki  Mokka Bhi Nahi Dhya " (பாவிப்பயபுள்ள ஒருத்தன் வச்சு செஞ்சிட்டு வந்திருக்கான், நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பும் கூட கொடுக்காம) என்று தங்கள் வயிற்றெச்சிலை கொட்டியதற்கு அடுத்தும், அவள் என் முகம் பார்த்து வருந்தியபோதும்,
என்னிடம் உதவி கேட்கிறாள்,

ஜினக்பூர் வரை போக வேண்டும், ஒரு டேக்சி பிடித்து தரவேண்டும், கடப்புப்பாலத்தை கடந்தால், அங்கே டேக்சி கிடைக்கும், நிஜாமுத்தீனிலிருந்து எனக்கு சாணாக்கியா பூரி போக மிக எழுப்பம், ஆனால் அப்பெண்மணிக்கு
அங்கிருந்து ஜினக் பூர்  போக அதிக நேரமெடுக்கும் எப்படியோ அன்று அங்குதான் தங்கவேண்டும், என்னுடைய வேலையை முடிக்க ( காலை ஒன்பது மணி முதல் பகல் பன்னிரண்டு மணிவரை நேரமிருக்கு சான்றிதழைக் கொடுத்துவிட்டால் மூன்று மணிக்குச்சென்று பெற்றுக்கொள்ளலாம், தற்போது மணி காலை  6:15) அவளுடைய சுமையினையும் சுமந்து பாலம் கடந்துவிட்டு ஒரு டேக்சி எடுத்து, அவளுடன் நானுமாய் ஏறிக்கொண்டோம்,
ஜினக்பூர் சேரும்போது மணி ஏழைக் கடந்திருந்தது, அவளை அங்கே இறக்கிவிட்டு நானும் டேக்சியுமாய் திரும்பியபோது, மேலும் கைக்காட்டினாள், டேக்சியை ஸ்லொவ் செய்துக்கொண்டு, என்னங்க ஏதும் வேணுமா என்று கேட்கிறேன், அவள் ஏதும் வேண்டாமென்று தலையசைத்து செயகையால் பதில் கொடுக்கிறாள்,
ஒருமுறை கைய்யெடுத்து கும்பிட்டுவிட்டு, முதல் முறையாய் ஒரு ஆம்பளையைப் பார்க்கிறேன் என்றாள்,

நான் அவ்வளவு ஒன்றும் நல்லவனில்லைதான், ஆனாலும் சுயநலவாதியுமில்லை, அவளின் அந்த வார்த்தையில்  மனது லேசானது, வந்த வேலையும் நன்றாகவே முடிந்தது.

எனக்குத் தெரியவில்லை, அவள் இப்போது மரித்துவிட்டாளா என்று, ஆனால் என் நம்பிக்கை சொல்கிறது, அவள் எங்கோ நல்லவிதத்தில் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பாள் என்று,


நன்றி - பூக்காரன் கவிதைகள்

Tuesday, 18 April 2017

அவளும், நானும், அச்சமயமும்



அவளும், நானும், அச்சமயமும் 
============================

அவளைச்சுற்றிய ஓராளும் தராததை 
அவளுக்கு தருகிறேன்  
"சமயம்"

அச் சமயம் 
அவளைக் காணும்போது 
ஜொலிக்கின்றது போலும் அறிவதில்லை 
அத்தனை அழகு   

ஒரு பெண் 
ஏற்றும் அதிகம் சந்தோஷப்படுவது 
எப்போன்னு தெரியுமா 
ஆச்சர்யங்களை ஒருவரிடமிருந்து பெறும்போது 
புன்சிரிப்பு, 
சிறிய பரிசுகள், சிறிய வார்த்தைகள்
இஷ்டப்பட்ட ஆடையை  
உடுத்திறங்கி வரும்போது
நல்லா இருக்கு என்று 
சொல்லும் வார்த்தையின்போது 
அவன் அவளை 
தனைமறந்து  வாய்நோக்கும்போது
ஆள் கூட்டத்தில் 
யாருமறியாதே 
அவன் அவளுடைய கைப்பிடிக்கும்போது 
அவளறியாதே
அவளைக் கட்டிப்பிடிக்கும்போது 
பின்னே 
அவள் எதிர்பாராதிருக்கையில்  
ஒரு முத்தமிடும்போது 
அவள் அவளைக்குறித்து சிந்திக்காதே இருக்கும்போது 
அவனோடிருக்கும்  
அந்த  நிமிஷத்தைத் தவிர 
பாக்கி உள்ள நிமிஷங்களை மறந்துபோகும்போது 
பரிச்சயமில்லாத புதியொரு  வாசனை 
அவள் சரீரத்தில் 
பதிவாகும்போது 
தவறென்று தள்ளிவிட்டவைகளை 
தனித்திருக்கும்போது 
சரியென்று நினைக்கும்போது  
அவள்  காதலித்திருப்பாள் 

வேண்டுமென்று ஆக்கிரகமுள்ள 
பலதையும்   
வேண்டாமென்று ஒதுக்கிப் போகிற சக்தி
பெண்ணிடம் மட்டுமே 

பெண், 
மழையைப்போல,  
இடைக்கு பொழிவதும், 
பொழிந்து கொண்டிருக்குமிடைக்கு  
தூறுவதும் என  
அவளிடம்
நேடிய நிமிஷங்கள் தான் 
நேடாத நிமிஷங்களைவிட அழகு 
இந்த நிமிஷங்கள் தான் 
தயக்கங்களுடன்  
அவள் அவனை அனுமதிக்கிறேன் என்று 
சொல்லவும் செயகிறது  
ஏனோ வேனல் சில்லுகள் போல் மனமிருந்தாலும் 
அவன் மழையில் நனையாதே 
கொதியோடே ஒளியும் பார்வையுள்
தணல் போல் 
அணையாத காற்றுபோல்  
சிறுபூவினுள் தேங்கியே அவள் சமயம்    

"பூக்காரன் கவிதைகள்"

Sunday, 16 April 2017

ஒருமுறை



ஒருமுறை
==============
பருகிக்கொண்டிருக்கும்  கடைசித்துளி  காப்பியின் போது,
 அவள்  மேலுதடும்
கீழுதடும் சண்டை யிடும்,
அங்கிருந்து,
எனது உதடுகள் தொடங்கும் ஒருமுறை,

அவள் ,
ஒருநொடியில் புரிந்துகொள்ள முடியாத
ஒரு வரி ஹைக்கூ ஒருமுறை,

புகையிலை காட்டிற்கு அப்புறத்தில்,
சூரியன் மறைகின்ற
குட்டிக்காலத்தின்  பகல் விடுப்புகள்
நோகிக்கச்செய்யும் ஒருமுறை,
வாரமொதுக்கி
வீட்டுக்குப் போகின்ற  பள்ளித்தோழியை
வழியனுப்பி  திரும்பும்போது,
விடுதியில்,  ஜன்னல் தாண்டி,
மலையிடுக்கில் மறைந்துகொண்டிருக்கும் சூரியன்
நோகிக்கச்செய்தது ஒருமுறை,
பாதி எழுதிய வார்த்தைகள்,
வேத நிச்சலனம் ஆனபோது,
துறைமுகத்தில்,
ஓடமில்லாத  கடல் விளிம்பு ,
அனக்கமற்ற  ஜல நோவுகளைக்  காண,
சயனமாக்கியது ஒருமுறை,

முதலில், ஆகாயத்தில்,
நிறங்களால் சந்தோஷங்களை  நிரப்பியும்,
பின்பு,  இருளுடைய சாயம் பூசி,
மேகங்களை அக்னி ஆக்கி ,
கடலின் ஆழம்வரை இறங்கிப்போன  சூரியன்,
நெஞ்சில், கண்ணீருடைய பாரம் பரப்பியது ஒருமுறை ,

ஒரு டெலிபோன் சம்பாஷணை
முடியும் நேரம்,
அவளுடைய
கடைசி வார்த்தைகள் போலும் கழிந்த
போனின் நிசப்தம்,
உள்ளில், யாத்ராமொழிச் சொல்லி நோவித்து
மற்றொரு நாளின் சூரியன் கூடி
மறைந்து போனது ஒருமுறை,

சிநேக நிராசைகளுடைய சபை விருந்துகள் சேர்த்து,
ஒரு பகல் கூடி முடங்கும்போது,
எழுதி பூர்த்தியாக்கிய தாளில்,
காலம்,
கருத்த மசியாகிடும் விதியுடையக் கைகளில்
மீண்டும் ஒருமுறை,

பூக்காரன் கவிதைகள்

Thursday, 13 April 2017

சிரிக்கும் பூ



டைரியில், 
ஸ்பரிசிக்காத சில பக்கங்களை, 
விரல்கள் ஸ்பரிசிக்கின்றன , 
நடுவில் ஏதோ ஒருபக்கத்தில் மாத்திரம் 
ஒரு பூ  சிரித்திருக்கும், 
அதை ஸ்பரிசிக்கும்போதெல்லாம் 
கண்ணிலே சிறு திளக்கம், சிறு துடிப்பு,  
இந்தத் தனிமைக்கு, அதைத்தவிர  
யாருடைய துணையும் வேண்டாம்,  
எனக்கு வேணுமென்றால், 
அப்பக்கங்களை  வேக புரட்டிக் கடக்கலாம், 
அப்பக்கங்கள், என்னால் எழுதப்படவில்லை என்று 
என்னை நான், ஏமாற்றிக்கொள்ளலாம், 
அதின் நினைவுள்ள எல்லாப்பக்கங்களையும்  
கிழித்தெறிந்துவிட்டிருக்கலாம் தான், 
ஏனோ செய்யாமல் விட்டுவிட்டேன் , 
காற்றுப் பதனி கேடாகும் போதெல்லாம், 
பின் கழுத்து வியர்த்தரிக்கும், 
அப்போது,  அப்பக்கப் புரள்வுகளுடைய  
காற்று வேண்டுகிறேன், 
இல்லாமல் போனாலும், 
இப்படியொரு தனிமை சூழும் என்றுதான், 
இப்படியொரு தனிமைக்கு வேண்டிதான், 
சபிக்கப்பட்ட இவ்விரல்கள் கொண்டு
அப்பக்கங்கள் கிழித்தெறியப்படவில்லைபோல்  
ஸ்பரிசித்து மூடும் வேளையில், 
அப்பூவின்மேல் 
இதோ, காற்றினிமைத் திவலையின் 
ஒற்றைத்துளி,   

"பூக்காரன் கவிதைகள்"

Sunday, 9 April 2017

எங்கோ எப்போதோ ம்ம்


எங்கோ எப்போதோ ம்ம் 
======================

எழுதாத வரிகளுக்குள் தான் 
அந்த காதல் வாழ்ந்துகொண்டிருந்தது , 

சொல்லாத காதல்தான் எப்போதும் வாழும், 
அது நட்பாகவோ, 
இல்லை வேறு ஏதோ 
பெயரிடப்படாத உறவாகவோ ம்ம்  
அழகாக இருக்கும் , 
அது அப்படியே இருக்கட்டும், 

நீ அப்போது,  அதிகமான காதலில் திளைத்திருப்பாய்,  
சொல்லாமல் காதலிக்கும் 
உன் முகத்தை 
எப்போதும் பார்த்திருக்க 
நட்பைவிட  சிறந்த மருந்து  
வேறொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை,  
அதுதான், தொடக்கத்திலேயே 
உன்னை நட்பாக பார்த்துவிட்டேன் , 

ஆனாலும் காதலிக்கிறேன் 
இதுதான் உண்மை , 
காதல் வேண்டாம் என்று 
அன்று நான் உன்னிடம் சொன்னதை 
ஏற்கின்ற பக்குவாம் 
இன்று உனக்கு வந்திருக்கக்கூடும் 
மிதமாக நேசிக்கவும் 
இன்று உன்னால் முடியும்,  
உன்னால் உன்னை ஆளுமை செய்யவும் முடியும்,  
நம் நட்புக்கிடையிலும் 
இன்றும்  
ஒரு மென்காதல் இழையோடும், 
ஆனால் 
நட்பு மட்டுமே மிளிரும் , 

இவ்ளோதான் வெளிப்படும், 
கடந்து வந்ததில் 
வழி நெடுகே 
மலர்க்கிடக்கைக்கிடையில்  
எங்கோ  மறைந்துவிட்ட என்  காதல், 
இத்தனைதான்,   
இதில்தான் இதம்,   

காலம் தூரமாகிவிட்டது, 
குழந்தைகளின் கைப்பிடித்து கடக்கின்ற நீ, 
உன் பார்வை, 
உன் சிரிப்பு, 
என் உதடுகளை, 
சுண்டி இழுக்கும், உன் உதடுகள் என
எல்லாம் அகன்று   
சராசரியாகிவிட்டாய்,,   
""அப்போதுபோலவே 
இப்போதும் 
உன் அழகான கண்களால், 
என் கண்களை சந்திக்கமுடியவில்லை, 
அதையும் 
அன்றுமாதிரி 
இன்றும் தலைக்குனிந்தேதான் சொல்கிறாய்"", 
அன்றெல்லாம் முத்தமிடவேண்டுமாய்த்  தோன்றி
கஞ்சம் பிடித்து 
அடமாய்  
ஒளித்துவைத்த    
என் முத்தப்பூக்களில் இருந்து 
ஒரு முத்தப்பூ, 
என் தோழி உனக்கு இதோ, 

உன்னிடம் நடித்த என் அருகாமை,  
அப்போவே 
எனக்கு பிடித்திருந்தது, 
இப்போதும் அதே பிடித்தம் மாறாமல் 
புன்சிரிப்போடு போகிறேன் 

"பூக்காரன் கவிதைகள்"

பிடித்திருக்கிறதா சொல்



பிடித்திருக்கிறதா சொல்
=======================

உன்னைச் சுற்றியிருக்கும்,
நீ வெகுவாக
இரசிக்கும் விஷயங்களில்
நானும்  இருக்கிறேனா  சொல்,
அவைகளை
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
நீ  இரசிப்பாயானால்
என்னையும்  கண்டுக்கொள்வாய்தானே ,,

எப்போவாவதுதான்
பேசிக்கொள்கிறோம்
அன்றொருமுறை, நீ அழைத்தப்போது  
உன்னைப்
பிடித்திருப்பதாக சொல்லியிருந்தேன் ,,
தெரியுமென்பாய்,,,

அடுத்தடுத்த முறை அழைக்கும்போதெல்லாம்  
அதையே அழுந்த சொல்கிறேன்  ,,
ஐயோ என்று கூச்சலிட்டு
அதுதான் சொல்லிட்டியே,
இன்னும் எத்தனைமுறைதான் இதையே சொல்வாய்  என்பாய் ,,

ஏன் தெரியுமா ,,
என்றைக்காவது என்னை
உனக்குப் பிடிக்க  நேரிடலாம்  ,,
இல்லை இவ்வாயுள்  முழுவதும்
என்னை
உனக்கு பிடிக்காமலும் போய்விடலாம்  ,,
உனக்கென்னை பிடிக்கின்ற சமயம்  
நான் உன் அருகில்
இல்லாமலோ, பேசாமலோ,  தொலைந்துவிடலாம்

அப்போது  நீ  யோசிப்பாய்தானே  ,,
அடடே
அன்றே  அவன்  விருப்பத்தைச் சொன்னானே
இனி என்  விருப்பத்தை
எப்படித் தெரியப்படுத்துவது
இப்போதெங்கிலும்
அதைத் தெரிவித்தால் தான்
அவன் ஏற்றுக் கொள்ளுவானா  
என்னும்,  ஆழ்ந்த  தயக்கத்தில், நீ  நீந்திக் கிடக்கலாம்

காணும்போதெல்லாம்
அதனால்தானே  சொல்கிறேன்
உன்னைப் பிடித்திருக்கிறது என்று ம்ம்,,

உன் வார்த்தைகளால் மயங்கிக் கிடத்தினாய்,,    
அன்றெல்லாம்,
நீ சொல்வதுதான் வேதமாகிற்று  என்றாய் ,,  
ம்ம்ம் கொட்டியதன்
எண்ணிக்கை மறந்த உனக்கு ,,
என் எண் மட்டுமா
இனிமேல் நினைவிருக்கப் போகிறது  ,,

என்னிடம் எனக்குப் பிடித்தவை
இரண்டு விடயங்களாக  இருகின்றன ,,

ஒன்று
எல்லாவற்றையும்  
முழுவதுமாக  விழுங்கிக் கிடப்பது
இன்னொன்று
அவற்றையெல்லாம்
வெளியே  உமிழ்ந்து தொலைவது
இதில் எது உனக்கு
அதிகம்  பிடித்திருக்கிறது சொல்
அதையே  உனக்கு  வரமளிக்கிறேன் ம்ம்

எனக்கு,
நன்றாகப்  பழக்கப்பட்ட
ஒரு பூவின் வாசத்திலோ,,
ஒரு பாடி ஸ்ப்ரே யின் வாசத்திலோ
உன்னைப் பொருத்திக் கொள்கிறேன்
எப்போதும் நீ எனக்கு பிடிக்கவேண்டுமென்று  ஆம்
 
இன்றுவரை,
நான் இவ்வாசங்களை மறக்கவில்லை
மாற்றவுமில்லை ,,
உனக்கும் பிடித்திருக்கிறதா சொல் ,
இப்பொழுதே சொல்லாதே,
அன்றைய  நெருக்கத்தில் ,
சிலநேரம் உனக்கு ஜலதோஷம் பிடித்திருக்கலாம்,  
உன் நாசியில்,
சுவாசப்படர் அடைந்திருக்கலாம்,
அதனால் கூட,  
அன்று அந்த வாசம்,
உனக்குத் தெரியாமல் போயிருக்கலாம்,

இன்னொருமுறை,
நன்றாக  நுகர்ந்துகொள்
பிறகு சொல் பிடித்திருக்கிறதா என்று ,,

நீ மறைக்கும் உண்மைகளை  அடுக்குபவன்
என் சிரிப்பன்  தெரியுமா ...
உனக்கு பழக்கமில்லாத உன்  பொய்களில்,
உன்  படுக்கையறை சுவரதிர,
அதிக அளவு  வியாபிக்கிறான் அவ்வளவுதான் ம்ம்
   
இப்பொழுது போகிறேன்,  
இனி அழைக்கின்றபோது சொல்
பிடித்திருக்கிறதா,  இல்லையா என்று ம்ம்

"பூக்காரன்  கவிதைகள்"

Friday, 7 April 2017

ஆயிரம் பூக்காடுகள் அவள் ஒருத்தி மட்டும்



ஆயிரம் பூக்காடுகள் அவள்  ஒருத்தி மட்டும்
=====================================

ஆக்கிரமித்த உரிமையோடு 
"டீ" என்று அழைக்கிறபோதெல்லாம் 
தாமதித்த மழைக்காலங்களில் 
அவளோடு குடைபிடித்து நடப்பதாய்  நனவோடை  

காற்றொலிப்பான் சப்தம் 
காற்றோடு 
காதையும் அறைந்து உணர்த்தியிருந்தது 
ஆம் அவளை பிடிக்கும் 
அணைத்தலுக்கும் முத்தமிடலுக்கும் இடையிலான 
திரையிட்டக் கட்டுப்படுத்துதலின் 
தனிமையில்  
எதையும் சொல்லாமல் நேசித்திருக்க 

வெளியிடையில் 
மஞ்சுமூடியிருந்த கார்காலம் அது 
சாளரம் திறந்திருக்கிறது 
பனிக்காற்றில் 
அரும்புடை பூக்களின் பிறந்தவாசம் 
வயதை அழைக்கிறது 

தூங்கலையா 
என்ற அவள் ஆகாசவாணியில்
தளுவத்தை இறுக்கிக் கொண்டு ம்ம்
இல்லை இது உனக்கான கவிதை 
அழகா வரவேண்டாமா 
இதைப் பார்த்தாவது 
நீ என்னை தேடுவாய் தானே  
அப்படிப்பார்க்காதே 
உன் பார்வை நெருப்பா இருக்கு  
நீ நல்ல பொண்ணு  
உன் பார்வைக்கு முன்னால்
இந்த பொறிக்கி கண்கள்  
பயந்துதானே ஆகணும் என்றேன்

அவள் விம்பம் கரைந்திருக்கும் 
அந்த அறையின் 
நான்கு சுவர்களோடும் ,, 
உடமைகளோடும் ,,,,,,,,,,,, 
யாரும் பார்க்காத இடத்தில் 
அவளுடனான இலேசான தட்டுமுட்டுதலுக்கு 
இடம் தேடத்தான் செய்கிறேன் 

பண்டிகைநாள் நினைவுபோல் 
ஏதாவது சாகசம் செய்து 
அவளை பார்க்கும்படி செய்யலாம் 
என்ற கனவுகளின் 
ஒத்திகைகளுக்கு நடுவில் 
காலங்கள் கழிந்துகொண்டிருந்தன 
கருவளையங்கள் 
என் மேற்கன்னக்குழிகளை 
தீரா  இருட்டாக்கிக் கொண்டிருந்தன 

தெரியவில்லை ம்ம்ம் 
சர்கஸ் கோமாளி எனவும் 
செல்லப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் ம்ம்ம் 
நிலவின் கறைப்பட்டுத் ததும்பும் 
ஆம்பலின் தணுப்புபோல்
தூர நின்றே அவள் காட்சிகள் மறைந்தன 

நாடோடிக் காற்று தழுவவில்லை 
என்று தொடங்குகையில் 
என்ன என்று கேட்கும் விழிகள் 
பூங்கனல்போல் மின்மினிகளைப் பிரசிவிக்கும் 
இதயக்காரை கோடுவெடித்து  
ரோஜா மொட்டு நாணும் 
முட்களை மிதித்த மூங்கில் விதையாய் 
வார்த்தைகள் கரணமடித்து 
யானைக்காலில் மிதிப்படும் தருணமாகும் 
கந்தகத்தின்மேல்  நடமாடும் 
இரத்தச்சிவப்பழகி அவள் 
ஆயிரம் பூக்காடுகள் அவள்  ஒருத்தி மட்டும் 
அவள் பிடிக்காத 
அந்த மல்லிகைக் கொடியின் விரல்கள்
அவளை விடுவித்ததும்தான்  
ஆண் நெஞ்சுள் இடறிய வலியானாள் 

எண்ணத்தில் உதித்த அக்கண்ணாடி சீசாவின்மேல்
ஒருபுறம் அமிழ்ந்துகொண்டிருக்கும்  
மனக்கடிதங்கள் எல்லாம் 
ஏதும் பேசாமல்  
சேற்றுக்குழைவில் சிக்கிய 
மண் புழுவைப்போல்
அச்சுப் பிறழ்ந்து அழிந்து கொண்டிருந்தன 

"பூக்காரன் கவிதைகள்"

Monday, 3 April 2017

வாழ்ந்துபார்க்கலாம் வா



எல்லாம் அலுத்துப்போகிறவரைதான் என்று அவளும் ,, 
எல்லாம் ஆயுள்வரை என்று நானும், 

கோபம் பிணக்கம், பிடிவாதம் பிடித்து, 
சண்டையிட்டு, 
வாழாமல்  விட்டுவிட்ட நேற்றுகளுடைய நொடிகள் 
இனி வரப்போவதில்லை, 

வெறுமையுடன், 
புகைப்படங்களைப்பார்க்கும் உன் முகம் 
எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்கிறேன்,

இந்நொடிமுதல்,
 எதையும் விரையம் செய்யாதே பயணிக்கலாம் 
நிகழ்வுகளையடுத்து 
என்றாவது பிரிந்துவிடலாம் வா, 

வாடும் பூக்களைப் படம்பிடித்து, 
என்றாவது ரசிப்பதைப்போல,  ம்ம்திரும்பிப்பார்க்கும் போது, 
அலுத்துவிட்டவைகள் தான் அழகானவை தெரியுமா  ம்ம், 

வாழ்த்தாமல் விட்ட பிறந்தநாட்களின்  பின்னால்,, 
யாரும்   ஓடோடிப்போவதில் 
வயது குறைந்துவிடப்போவதில்லை, 
நரை இடுக்குகளில்  வாழும்படி 
இனிவரும் நம் பிறந்தநாட்களை கொண்டாடிவிட்டுப்  பிரிந்துவிடலாம் வா 

நாக்கூசாத  வார்த்தைகளினால், 
நம் உதடுகள் முத்தமிட்டும்,  
பின் நாவுகள் பின்னாமல் விட்டிருக்கலாம், 

இனி நீ பேசு, நான் மௌனமாகிறேன், 
நாட்கள் கொஞ்சம் போகட்டும், 
ஆபாசங்கள் அர்த்தம் பெறட்டும்,  
மீண்டும் நம் நாவுகளால்  பின்னிக்கொள்ளலாம், 

அரவங்கள் ரெண்டு,  கூடும் ஒளிர்நிசிபோலே 

"பூக்காரன் கவிதைகள்"