காதல் டாபிக்
=============
கயிறறுந்த நாணலாய்
என் உயிர்
உன் ஆராதனைகளின் பின்னால்
தொடர்ந்துகொண்டுதான்
இருக்கிறது.
உன்னை நினைக்கும்போதெல்லாம்
என்னுள் நான்
மீண்டும் ஒருமுறை பிறந்துவிடுகிறேன்
உன் கை என்னில்பட்ட
அந்த முதற்தருணமே
பரிசுத்தமடைந்துவிட்டேன் நான்
மதியலை மிதக்கும்
நனவோடைக் கீற்றுகளால்
தட்டாமாலை ஆடினேன் ம்ம்
மென்சோகம் இழையோட,
யுகங்களின் அழகில்
மிளிர்ந்த
உன்முகமும்,
விரல்கள் பூத்தொடுக்க வழிந்த
உன் குரலின்
வசீகரமும்
என்னை
உன்வசம் சரியச்செய்கின்றது
நீ அடிக்கடி
நம் உரையாடலின் நடுவே
சொல்லிக்கொள்ளும் "ஆமாவா"
என்னும் சொல்
என்னை முற்றிலுமாய் கிறங்கவைக்கிறது
உன் பெயரெழுதப்பட்ட
நீல நிறமைய்யையும்
முதல் முறையாக
நேசிக்கத்தொடங்கிவிட்டேன் நான்,,,
நீலநிறமைய்யின்
இழையோடிய எழுத்துகளின்மேல்
ஒரு பிறைநிலா,,!!
இதுவரை நிமிர்ந்துநாணாத நிறைநிலா,,!!
இருளும் ஒளியும் அற்ற
என் உலகில்
இரவும்பகலுமாக
நான் ஏந்தி தடம் காட்டபோகும்
தனிநிலா என்னில் நீ ,,,,!!
"பூக்காரன் கவிதைகள்"
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment