Friday, 31 March 2017

வசந்தமா, அடர்மழையா



என்கிட்டே பேசணும்னா நீயே வந்திடுவ, அப்போ பேசிப்பேன், அப்போ தவிர்க்கமாட்டேன், ஏன்னா ,,, வசந்தமும்,, அடர்மழையும் வருடமொருமுறை, எப்போதாவதுதான் வரும், இப்பருவம் உன்மேல், ஓயாமல் சிவிறிக் கொண்டிருக்கும் என்னைப்பார்த்து, நான் வசந்தமா, நீ அடர்மழையா, எனக் கேட்காதே ,, சட்டென்று ஆமாம் சொல்லிடுவேன் ம்ம்,, அடர்மழையில்லாமல் வசந்தமில்லை ஆதலால் ம்ம் பேசிப்பேசி நமக்குள் நாம் அலுத்துவிடவேண்டாம் யாருடனேயாவது பேசிப்பேசி அலுத்துவிட்டு பின் என்னிடம் வா ... அதுவரை, உன் கண்களைப்பார்த்து புதிது புதிதாய் கதைகள் சொல்ல கற்றுவைக்கிறேன் மெதுவாக அலையெனத் தொடங்கிய இந்த இதயத்திற்கு ,, வேகமும் அழுத்தமும் காதலும் காமமும் ரொம்ப அதிகம் ,,, வச்சுக்கோ அடுத்தமுறை நீ என்கூட பேசவரும்வரை ❤ ம்ம் "பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment