கடந்த காலங்களைச் சொல்லிதான்
இணையவேண்டுமென்பதோ பிரியவேண்டுமென்பதோ இல்லை
தொட்டுப்போகும் பூக்களோடு
காற்று தன் தனிமையை
மென்மையாகத்தான் சொல்லிப் போகிறது
காதல்
நேற்றுப்பெய்த மழைப்போல
அடுத்த கணம் நின்று போயிருக்கலாம்
பருவம் சேரும்போது
அதே மழை
திரும்பப்பெய்வதில் அதிசயமில்லாததைப்போல
போன காதல்
என்றாவது வந்து சேர்ந்துவிடும்
மழையே வா
என்று கேட்காதிரு மனமே <3 :)
No comments:
Post a Comment