Wednesday, 24 May 2017

தொலைந்து போனவைகளின் பட்டியலிலிருந்து

தொலைந்து போனவைகளின் பட்டியலிலிருந்து
==============================================

பேசும்போதெல்லாம் நிறைய ஆக்கிரகம் இருக்கும்,  
அதைப்பொருட் படுத்தாதே,  
ஒரு சமயம், 
தூரமாயிருந்து
ஒரு தொலைநோக்குப் பார்வை,
இன்னொரு சமயம்,  
கூர்மையான நகங்களுடைய 
உன் நீண்ட விரல்களை 
என் உள்ளங்கைக்கொண்டு 
யாரும் காணாதே ஒரு தழுவல், 
நல்லதொரு சந்தர்பம் கிடைத்தால் 
ஒரு அணைப்பு, 
நீ பயப்படுகிறாய், 
பக்கத்தில் வந்தால்
பின்மாறுகிறாய்,
பார்வையில் மோகாந்தம் தூறுகிறாய், 
அன்றொருநாள், 
உன் தோழியின் விசேஷநாளின் போது
ஆடம்பரமான 
புடவை  உடுத்தியிருந்தாய், 
விழிகளால் செய்கைக்காட்டி,
அழகாக இருக்கிறேனா என்று கேட்கிறாய், 
இல்லை என்று  தலை அசைத்தபோது,
முகம் சுளிக்கிறாய்,  
உன் நேர்த்தியான உடல் வாகிற்கும், 
உயரத்திற்கும், 
சுற்றும் முற்றும் சாலையும் காணாதே,   
நடந்துபோகும் 
உன் துரித நடையின் போதும், 
ஏதோ ஒரு தூணில் சாய்ந்து நிற்கும்போதும், 
உன்னோடு இணக்கமாய்  தெரிவது  
சிந்தெடிக் புடவைதான்,  
உள்ளாடைகளின் 
தடசமின்றி, 
இருவரும், அதற்குள்ளேயே கிடக்கலாம், 
ஆம் 
அதில் மட்டும்தான்,  
நீ எல்லோரையும் ஈர்ப்பாய் 
எல்லோரும், 
உன்னையே பார்த்திருக்கும்படி திகழ்வாய், 
இழுத்துக்கட்டாமல்,   
தளர்வாக விட்டிருக்கும்  
தூரிகைப்போன்ற,  இறகுவெட்டு செய்த முடி,  
உன்னை விரட்டிப்பிடிக்க எத்தனிக்கும் 
விரல்களிடமிருந்து  
தப்பி ஓடவேண்டும் நம் முதலிரவில்,   
அசலாகவே,  
சற்று  குறுகலோடு  இருக்கும் 
உன்  இதழ்களைக் கடக்க நேரிடுகையில், 
உதடு வன்முறைக்கு அழைக்க மாட்டாயா 
என்றிருக்கும் ம்ம், 
முதல் முறை, 
உன்னை பார்க்கணும்போல இருக்கு,  
வீட்டுக்கு வரட்டுமா என்றேன்,
சுற்றிலும் காவல், 
திறந்துவைக்கப்பட்ட,  
ஜன்னல் கதவுகளும், காவல் என்றாய், 
சரி மாயாவி போல  வந்துவிடுகிறேனே என்றேன், 
நடப்பதை யோசி என்கிறாய், 
சரி, உன்னை கரெக்ட் பண்றது எப்படி  
நீயே சொல்  என்றால், 
எதற்குமே பிடிகொடுக்காமல் இருந்துவிட்டு
வாய்மூடி  சிரிக்கிறாய், 
ஒரு முறை சுதாரித்து,  மறுமுறை  சரிந்து என
என் சத்திய சந்ததை எல்லாம்,  
பிடிமானம் விட்டு விட்ட  
திருகு சுருள் போல் 
உன்னை சந்தித்து போனபிறகு 
தொலைந்து போனவைகளின் பட்டியலில் 
இடம் சேர்த்துவிட்டேன்,

"பூக்காரன் கவிதைகள்"



Wednesday, 10 May 2017

நேசிக்கிறவளுக்காக ம்ம்


நேசிக்கிறவளுக்காக ம்ம் 
=======================

வீட்ல யாருமில்லாதப்போ, 
அவளும் நானும் தனியா இருக்கும்போது, 
யாராவது 
காலிங் பெல் அடிச்சா, 
அவளை எந்திரிக்க விடாமே, 
நான் போயி பார்க்கணும், 
என்னை மாதிரி ஒவ்வொருத்தனும், 
நேசிக்கிறவளுக்காக, 
பார்த்து பார்த்து செய்யணும் ம்ம், 
ஆனா என்னைக்கும் 
அதை சொல்லி காமிச்சிடக் கூடாது, 
எனக்கு எங்கம்மான்னா 
ரொம்ப பிடிக்கும் 
எல்லோருக்கும்தான் ம்ம்ம் 
அதுக்காக அவங்களை 
கல்யாணம் பண்ணிக்க முடியாது, 
அதுக்காகத்தான், 
என்னோட வாழ்க்கையில, 
என்னை நேசிக்க, அவள் அனுப்பப்பட்டிருக்கா  ம்ம், 
என்னைப்பொறுத்தவரை, 
கட்டில் ல மட்டுந்தான், 
அவ என்னை  தங்கணும் ம்ம், 
கட்டில விட்டு இறங்கிட்ட நிமிஷம் முதல், 
காலம் பூரா,
அவளை, நான்தான் தங்கணும்,  
அவளுக்காக, 
என்ன வேணும்னாலும் பண்ணலாம்,   
எந்த எல்லைவரைக்கும் கூட, 
போலாம்,  
ஒரு நிபந்தனையில்லா அன்பு ம்ம், 
அது அவளுக்காகத்தான்,  
ராத்திரி ரெண்டு மணிக்கு எந்திரிச்சி, 
முத்தம் கேட்டாலும், 
உடனே அவளுக்குக் குடுத்திடணும் ம்ம்ம், 
பல்லு விளக்கலேன்னாக் கூட 
பரவால்ல, 
கோச்சிக்கிட்டு, ஒரு நாள் பூரா,
அவ என்கிட்டே  
பேசாம இருந்தாலும், 
காலையில எழுந்து பார்க்கும்போது, 
அவள் அறியாதேயே நான், 
அவளை கட்டிப்பிடிச்சு படுத்திருக்கணும், 
வழக்கமா இல்லாமே, 
எதுவும் வாங்கத் தெரியாம, 
புதுசா ஏதாவது ப்ராண்ட் ல நாப்கின் 
வாங்கிட்டுப்போனா கூட, 
அத அவ கையில  
சும்மா குடுத்துட்டுப் போகாமே, 
அது அவளுக்கு காயமுண்டாக்காமே  
மென்மையா இருக்குமான்னு,
திறந்து, தொட்டுப்பார்த்து குடுத்துட்டு போகணும் ம்ம் 
அவளுக்கு நா 
லவ் சொன்ன நாளையோ, 
அவளை கைப்பிடிச்ச நாளையோ, 
ஒருவேளை 
மறந்துட்டேன்னா,  
அத இனிமே மறக்காத மாதிரி இருக்க
அவ எனக்கு,  
பயங்கரமான, 
பனிஷ்மென்ட் ஒண்ணு கொடுக்கணும் ம்ம், 
காருல போகும்போது, 
அவ என் தோள் சாஞ்சு 
தூங்கிட்டா, 
அவளுக்கு தொந்தரவாகாததப்போல, 
ஓடிக்கிட்டிருக்கிற 
மியூசிக் பிளேயரை, 
உடனே அணைச்சிடணும்,
என்னோட உதவியில்லாமே,
எப்போவும் 
அவ புடவையே கட்டக் கூடாது, 
குறிப்பா, 
என்னோட உள்ளாடைகளை,  
அவளைவிட்டு,  
துவைக்கிறபடியா வைக்கக்கூடாது ம்ம், 
நா கட்டிப்புடிச்சுத் தூங்குற 
தலகாணி மேலே, 
அவ கோபப்படணும், 
அவ அழிச்சாட்டியம் பண்ணுறப்பொல்லாம்,
அவளத் திட்டிட்டு, 
நான் போயி 
தனியா உக்காந்து அழுதுகிட்டிருக்கணும், 
என்னோட  அன்பை,
அவகிட்ட,  சொல்லமட்டும் கூடாது, 
காட்டணும் ம்ம் ,
அவமேல  வெறுப்பைக்காமிக்கக் கூடாது, 
எதுவா இருந்தாலும், 
அவகிட்ட சொல்லணும், 
அதை உடனே, மறந்திடனும் நான், 
ராத்திரி தூங்கவிடக் கூடாது 
அதுபோலவே, காலையில, 
என் அணைப்பிலிருந்து, 
அவளை,
எழுந்திருக்கவே விடக் கூடாது  ம்ம்,
அவளோட 
எச்சில் ன்னு தெரிஞ்சே, 
அவ சொல்ல சொல்ல கேக்காமே, 
அவ பாதி குடிச்சிட்டு வச்ச 
காப்பி கப்பை, 
நா எடுத்து பருகணும்,
அதைப்பார்த்து அவ கிண்டல் பண்ணி 
சிரிக்கணும், 
அதை நான் கவிதை செய்யணும் ம்ம்,
அவளைத் தொடாமயே, 
இங்கே வான்னு கூப்பிட்டு,
பக்கத்துல  உக்காரவச்சு,
என்  பார்வையாலேயே  
அவ முகத்தை நாணிட வச்சு, 
"ச்ச என்னடா இவன், 
இப்படி விழுங்குற மாதிரி  பாக்கறானே" ன்னு 
அவ நினைக்கும்படி 
அவளை பெண் செய்யணும் ம்ம், 
காதலும், காமமும், 
வேறே வேறே இல்லன்னு, 
அவளுக்கு நான், 
ஒவ்வொரு நொடியும் புரியவச்சிக்கிட்டே 
இருக்கணும் ம்ம், 
அவகிட்ட தோற்கிற ஒவ்வொரு நிகழ்விலும் 
நான், அவமேல வச்சிருக்கிற  
காதல் ல, 
ஜெய்ச்சிக்கிட்டிருப்பேன், 
அத விட்டுட்டு, 
அவளை நா ஜெயிக்க நினைச்சேன்னா,, 
ஒரு காதலனா,  
தோத்துப்போயிடுவேன் ஆமா ம்ம், 
இதெதுவும் நடக்காமே, 
அவகிட்டே எப்போவுமே, 
என்னை தோத்துக்குடுக்கவே விரும்பறேன் ம்ம்ம்,

Yes, really, I wanna means a lot to her mmm <3

"பூக்காரன் கவிதைகள்"

Thursday, 4 May 2017

"கேம்பஸ்" - (கல்லூரி வளாகம்) - 1998 - 2002



"கேம்பஸ்" - (கல்லூரி வளாகம்) - 1998 - 2002 ======================================= ஆத்ம விசுவாசமும் ஆர்ப்பரிப்பும் திரையாடுகின்ற அந்த வர்ண ப்ரபஞ்சத்திற்குள் தான் பதறிய மனசுமாய் எத்தியிருக்கிறேன் கடந்த இரவு, அதீத தனிமையிலிருந்தபோது, அங்கோர் தனிமை, எனக்கு துணை இருந்தது, எதுவாகினும், மரணத்தைவிட அது ஆறுதலாகி இருந்தது இப்பொழுதும் நான் காதலன் தான் ஆனால், காதலி இல்லாத, ஒரு மகத்தான உணர்வு ம்ம், விரகத்தின் போதுதான் காதலித்தலின் தீவிரவாதம், தலை ஓங்குகிறது இசபெல்லா, ஜெரால்டிடம் சொல்லியதைப்போல "என்னால், எப்போதும் "உன் காதலற்று வாழ்ந்துவிட முடியும் ஆனால், என்னால், ஒருபோதும் வாழ்ந்துவிட முடியாது உன் நினைவுகளை நான், உட்கொண்டு விடுவேனானால்" தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ம்ம் யாரோ ஒருவருடைய இன்மைதான் , அவர்களுடைய இருப்பிடத்தை, நமக்கு நினைவுக்கூறும், இங்கு, இந்த இடைநாழியில், எத்தனைப்பேர், அவர்களுடைய பிரியப்பட்டவர்களை நோக்கி, இதயம், பெருமழை முழங்கி, காத்து நின்றிருப்பார்கள், சொல்லாமல் விட்டவைகளை மூடிவைத்து, பரஸ்பரம் அறியாதவர்களைப்போல, செண்பகத்தின் நிறங்களுமாய், மிளிர்ந்த விழிகளுமாய், நீண்டு வளர்ந்த, தரைத்தொடும் ஈருகளுமாய் தாழ்வாரங்களின் வழிநெடுகில், நடந்து போயிருப்பார்கள், அன்றைக்கு மறுநாள், என்னுடைய பிறந்தநாள் தினமாய் இருந்தது, பிறந்தநாள் ஆகோஷத்தின் நினைவுகளொன்றும் என்னுடைய மனசில் அதுவரை இல்லை, குட்டி காலத்தில் ஸ்கூல் விட்டப்பின்னால் அப்பாவோட விரல் நுனியைப் பிடித்து நடக்கும்போது, சிலதை ஆக்கிரகித்திருக்கிறேன், பின்னாளில் எல்லாம் எனக்கு வெறும் ஆக்கிரகங்களாகவே இருந்துபோயின எதுவும் நடக்கவில்லை, இப்போது நான், யாரோவுடைய அபையத்தின் தணலில் இருக்கிறேன், கல்லூரி கேம்பசும், முத்தச்சி மரமும், என்னை நேசிக்கும் அவளும், என் மேல், தணல் விரிக்கின்றதை, அறிகிறேன், வேறே கொண்டாட்டங்களொன்றும் இல்லாதே, நாங்கள் இருவரும், முத்தச்சி மரமும் இந்த பிறந்த நாளை ஆகோஷித்திருக்கிறோம், என்ன என்று, பெயர் இடாத அந்த உறவுக்குள் வாழ்ந்திருந்தோம், எங்களுக்குத் தெரியும், நாங்கள் இருவரும் இதற்குப்பின்னால், இரு வெவ்வேறு தனிவழியில் சென்றுவிடுவோம், இருப்பினும் ஒருவரையொருவர் காணும்போதும் எங்களுக்குள் எங்களை ஒருமிக்க சிரமிக்கும் போதும் ஏதும் பேசாதே சந்தித்ததைப்போலவே கைக்குலுக்கி, பிரிந்தும் விடுகிறோம் , அவள் சொன்னதுபோலே, கீட்ஸ், ஷெல்லி, இவர்களுடைய, கவிதைகளில் மாத்திரமே வாழும் , ஒரு ஸ்டுபிட் காதலர்கள் போல் ம்ம் இங்கு நின்றுதான், கன்னிகே, நிந்தன் கண்களில் நின்றுதான் ஆசையின் ஆதித்ய கிரணம் என் இதயத்தை முத்தமிட்டது, இங்கு நின்றுதான், ஒருவேளை சொர்கத்தின் பூத்தையல் ஆடைகள் எனக்குக்கிடைத்திருந்தால் உன் பாதங்களுக்கு முன், விரித்திருப்பேன், என்றதும், கன்னிகே, இதே கல் படவிலும், இதே மரத் தணலிலும் இன்னொருமுறை நீ கிடைப்பாயென்றால் ஒரு வேனல் முழுவதும் உதிரும் பூக்களால் உன்னையும் என்னையும் மூடிடுவேன், முடிவில், நானும் யாத்திரையாகிறேன், எனக்கு முன்பே கடந்து போனவர்களின் வழிகளூடே விடையில்லாத எத்தனை எத்தனையோ கேள்விகளை, சுயம் கேட்டுக்கொண்டு, இதோ, நானும் யாத்திரையாகிறேன், ம்ம் "பூக்காரன் கவிதைகள்"

Thursday, 27 April 2017

பிராண சகி



பிராண சகி
===========

அடியே அன்பு குந்தானி, நீ  எப்படி இருக்கிறாய் ம்ம்

இன்னும்
நீ எனக்கு எழுதும் எல்லாக் கடிதங்களில்,
என் விரல்களால்,
உன்  சிகைப் புணர்ந்த
மருதாணி சீகக்காய் வாசனையையும்,
அந்த மயில் பீலி
கொண்டையுள்ள,
உன் பேனா மை வாசனையையும் தான்  ஒர்க்கிறேன்

உனக்கு நினைவிருக்கும்,
அன்று நம் முதலிரவு,
உன் வீட்டில்,
எனக்கு எந்த அறையும்,
அவ்வளவு பரிட்சயமில்லைதான்,
நீ இருக்கும் அறைக்குள்,
தாமதித்தே வந்து சேர்ந்தேன்,

உனக்குத் தெரியும்,
நான் மறதிக் காரன்  என்று,
அந்த இரவு,
உனக்குகொடுக்கவென்றே
ஒரு மோதிரம் வாங்கியிருந்தேன்,
அறைக்குள் வந்துவிட்டு,
அதை வைத்த இடம் தெரியாமல் தேடுகிறேன்,
நீயும் ஏதுமறியாதே முழிக்கிறாய்,
அதுவா இதுவா என,
ஒவ்வொரு பொருளாய்
பெயர்  சொல்லிக்கொண்டு வருகிறாய்
கடைசியாய்,
நீ  சொல்லித்தான்  தெரியும்,
அது  இருந்த  இடம்,

அடுத்தமுறை  மறக்கும் முன்பு ,
இதை உன் விரலில்  கோர்த்துவிடுகிறேனே என்றேன்,
நன்றி கூறி,
பற்கள்  தெரியாதே சிரித்தவன்போல் ம்ம்,
நீயும் சிரித்தாய்,
அப்போது,  நான் அழகாய் இருப்பதாய்ச்சொன்னாய்,
உன் மோதிர  விரலோடு,
எல்லா விரல்களையும்  நீட்டிக்கொடுத்தாய்,
அதிகம்  வெட்கப்பட்டாய்,
அழகாகியிருந்தாய்,

அடுத்து நான் கேட்டேன்,
எப்போது வெட்கப்பட்டு முடிப்பாய் என,
முறுவலித்துக்கொண்டே
மோவாய் அசைத்தவள்,
ஏன் என்றாய்,
நீ முடிக்கும் இடத்திலிருந்து ,
நான் வெட்கப்படப்போகிறேன் என்றேன்,
ச்சீ என்றாய்,

பொட்டிட மறந்த உன் முன் நெற்றியில்,
பவள பொட்டுபோல்,
பதக்கம்  விழுந்திருந்தது,
ஆடை ஏதும் அகற்றாமல்,
அனுமதியின்றி எழுந்து நடந்து,
உப்பரிகை மாடம் வரை போகலாமா என்றாய்,
அந்த செய்கையும்,
அந்த பாணியும், பிடித்திருந்தது,
அங்கு போனதும்,
சுவரோடு சாய்ந்து நின்றாய்,
பாதி நிசி காற்றுத் தழுகி,
உன் பட்டாடை விலகி இருந்தது,

அற்பம் நடக்கலாமா என்றாய், அதே அனுமதியின்றி,
வெளியிடையில்,
தளிர் மரங்கள் இளகி,
சருகுதிர்ந்து,
உன் கைகளில் பட்டப்போது
உன் கண்ணாடி வளையல்கள், சிணுங்கின,

பொற்றாமரைப் படவில்,
அக்கரைக்கடந்து,
பூஞ்சோலைப்பார்க்கலாமா என்றாய்,
அதே அனுமதியின்றி ம்ம்,
பூஞ்சோலைப்படர்வில்,
உன் பாதச்சரம் பட்டதும் ,
பூக்களெல்லாம், சிரித்துக் குலுங்கின,

பாலொளி சந்திரிகையில்,
உன் மந்தகாசம் கண்டு நின்றபோது ,
தாமதமின்றி அணைக்கலாமா என்றது,
என் மெய்சிலிர்த்த, குளிர் ம்ம்,

"பூக்காரன் கவிதைகள்"

Tuesday, 25 April 2017

காதல் வரும்போது



காதல் 
=======

பருவம் தப்பிய காற்று, முதலில்  மென்மையா தழுவி, பின்பு சிலுக்கவைத்து,  ஜோன்னு மழைப்பேஞ்சு, தூறலாகி, தழுவத்திற்கு உள் நுழையும், நீர்த்த குளிருக்குப்பின்னான சூடு என, உறக்கத்தின் சலனம், உணர்வோடையின் சிணுங்கல் என,  இப்படி பல ஆகி ஆகி, துள்ளல் நின்ற மனசுக்குள் நிசப்தமாகும், 

காப்பி குடிக்குறதுக்கு முன்னாடி, அந்த ஆவி, மூக்கு நுகரும்போது, அந்த டேஸ்ட் ல மயங்கிருக்கும்போதே பருகும் முதல் துளிபோல சுவையா இருக்கும், அதே காஃபியுடைய கடைசித்துளிக்காக, கீழுதடும் மேலுதடும் போட்டிபோட்டு சண்டை போடுமே,  அப்படி இருக்கும்,
இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்பதைப்போல, 

400  மெகாவாட் மின் ஆலை, ஷாக்கடிச்சும், முதல் முதலா, இதமாகுமே,  அப்படி இருக்கும்,  

பிறந்த குழந்தையை முதல் முதலில் வெளிய கொண்டுபோகும்போது,  பல நிறங்களைப்பார்க்கும் போது , அது கண்கள், புளுக் புளுக் கென்று, முன்னும் பின்னும், ஏதும் புரியாததுபோல், சுத்தி சுத்தி பார்க்குமே அப்படி இருக்கும், 

ஒரு பூவோட முதல் முளைத்தலின் தருணம், அப்போது உண்டாகும் முதல் வாசனை மாதிரி, ஒரு முதல் வசந்தம் மாதிரி, தெரிஞ்சோ தெரியாமலோ யாரோ ஒருத்தியோட தாவணி,  முகம் தழுவும்போது, மயிலிறகு வருடின மாதிரி, இதம் வருமே,
அப்படி இருக்கும், 

எப்போதோ, என் கவிதையில் சொன்னதுபோல,  
காற்று நிரப்பிய இரப்பர்  பலூன் ஒன்று மேலே மேலே பறந்து பறந்து போகிறதைப்போல, காதல் நுழை மனசு, லேசாகி, அது  போகும் திசையறியாது மேலே மேலே பறந்து போகுமே, அந்த இடைவரிகள்,  அப்படி இருக்கும்

தென்றற்காற்று, தன் தலைமீது முதல் தொடுகையில், உயர்ந்த மரங்களெல்லாம் கர்வம் கொள்ளுமே, அப்படி இருக்கும் காதல்,

கடனில்லாதவனுடைய பரந்த மனசுப்போல, காதல் பூக்கிறவங்க மனசு,  சுயநலமே இல்லாம இருக்கும், 

நிழலுக்கே நிறம் கொடுக்கும், 
அருவருப்புகளே அதீதமாகும், அது வருகையில்,

காத்திருக்கும் பார்வைகளுக்கு முன்னால், ஏதும் உரிக்காத அடங்களுக்குமான, மௌன இடைவெளி அது,

சலங்கை ஒலியிலே, கமல் ஹாசன், ஜெயப்ரதாவை பிரியும் காட்சி ஒன்று வருமே, 

பிரிகையில், 
கையசைக்கும் நட்பைவிட, 
விழியசைக்கும் காதல்,
வரிகளால்,
விளக்கிட முடியா இருள் அது,  
விடைகொடுத்த விழிகளுக்கு மறைவில், 
விடியாத பாரம்போல, 
விளங்காத வலி போல, 
உயிர்வாழ்தல் ஏக்கமாகும் காதல்,. 
அவ்ளோதான்,,

சேரும்போது 
உணர்ச்சிகளுடைய கலவரம்போல, 
சேராதபோது 
உணர்வுகளுடைய விதவைப்போல 

இப்படி இப்படி தெரியுற, ரசிக்கிற, 
ஓரோரு விஷயத்திலும்,  
தெரியாத காதல், 
ஒளிஞ்சி, அடைஞ்சி, மூச்சுமுட்டி கிடக்கும்,

பூக்காரன் கவிதைகள்

Thursday, 20 April 2017

சரும குறிப்புகள்




சரும குறிப்புகள்
================

பிரயாண நிழலின் பல நிறங்கள் சொல்லும், எப்படிப்பட்ட இடத்திலும் கூடும் ஆள்கூட்டத்தில் யாரோ ஒருவர்
மரண வாடையோடு இருக்கிறார், அந்த புண்ணிலிருந்து கசியும் சீழ் அருவம் இங்கெங்கோதான், யாரிடமோ இருந்துதான் வெளிப்படுவதாய்  முன்கூட்டியே கருதிக்கொள்ளுங்கள்,  காலம் சிலப்போது அவர்களை நம்மிடம் அருக வைக்கும், சிலப்போது அவர்களை நம்மிடமிருந்து தூரே யாரென்றுத் தெரியாமலேயே அவர்களுடைய இஷ்டத்திற்கேற்ப  மாய்த்துக்கொள்ள உதவுவதாய்ச் சொல்லி சதியில் தள்ளும்.

அந்த மாதிரிகள், நம் அருகில் இருத்தப்பட்டிருக்கலாம், இல்லை நம் அப்போதைய அரைமணி நேர பார்வைக்கு பட்டுவிட்டு பின்னர் அவர்கள் ஒருநாளும் நம் ஓர்மையிலிருந்து அற்றுப்போயிருக்கலாம்.

இதுபோன்ற ஒரு சூழலை, நாம் எங்கிருக்கிறோமோ, நம்மை சுற்றி இருப்பவர்களிடம் ஒரு ஹெலோ சொல்வதன் மூலம், அவர்களுடைய வாழ்வு முடிவின் கந்தக உமிழ்விலிருந்து காத்துவிடமுடியும் என்பது கூட
வெறும் ஒரு நம்பிக்கை மட்டும்தான். நம் முன்னால்  ஏற்படப்போகும் ஒரு துர் சம்பவத்தின் நிமிடங்களை
நாம் சொல்லும் ஒரு ஹலோ அற்பநேரம் தள்ளிப்போடும், அந்த நிமிடங்களைக் கடந்தவர்களுக்கு மேலும்
இது மாதிரி எண்ணங்கள் வராமல் போகலாம் இல்லையேல், நம்முடனான அவர்களுடைய சமயம் கழிந்ததும்
அவர்கள் அந்த தைரியத்தை வேறு எங்கோ பிரகடனப்படுத்தி இருக்கலாம்,

எதுவாகினும் அதைச்  சொல்ல ஒருவருமின்மையை உணர்த்தும்  அழுத்தங்களே  முக்கிய  காரணம், ஆதலால் எல்லோரும், எங்கு கடக்கும்போதும் அந்த சூழலில் உள்ளவரிடம் ஒரு ஹலோ சொல்லிக்கொள்ளலாமா

1998 , உறவினன் ஒருவன், ரயிலில் சாடி தற்கொலை செய்யலாம் என போய்விட்டு, தெருநாய்களின்  குலைத்தல் கண்டு  பயந்து
வீட்டிற்குத்  திரும்பியிருந்தான்,
அங்கே தெருநாய்களின் ஹலோ, அவனுடைய முடிவை மாற்றவைத்திருக்கலாம்  

மரணம்

குழந்தைகள் முதல் பிராயமானவர்கள் வரை, யதார்த்த மரணம் முதல் துர்மரணம் வரை, பலருடைய பேரும்,
ஆதியமும் அவசனமாகியும் பத்தரத்தில் வருவது அவர்களுடைய மரணத்திற்குப் பின்னால் தான், கூட நான் எழுதும் இந்த நாலுவரிகளில் தீரும் ஒரு மனுஷனுடைய ஆயுள்

2003, இப்படித்தான் ஒருமுறை, திருவனந்தபுறம் டூ நிஜாமுதீன் எஸ்பிரஸில் ,, கோவையிலிருந்து நிஜாமுதீன் செல்லவேண்டுமாய் (பழைய டெல்லி) 43 மணித்தியாள பிரயாணம் ...நிஜாமுதீன் இதை அடுத்தே இந்தியா கேட், சாணாக்கிய புரி, சந்திர குப்த மார்க், எல்லா வெளிநாட்டுத் தூதரகங்கள் (Foreign Embassies) அங்கேதான் இருக்கின்றன,  சான்றிதழ் சான்றொப்பம் (Certificate Attestation)  பெற அங்கேதான் செல்லவேண்டும். நியூ டெல்லி  தனியாக இருக்கிறது.

ரயிலில், முதல்  வகுப்பு ஏசி அறையில் ரெண்டு  லோயர் பெர்த் ரெண்டு அப்பர் பெர்த் இருக்கும், அறையை அடைக்கும் வசதி உள்ளதால் மட்டுமே அது இரண்டாம் வகுப்பு ஏசி சீட்டுகளைவிட பிரதானப்படுகிறது, பெரும்பான்மை ஆட்கள் முதல் வகுப்பு ஏசியில் பயணிப்பதில்லை, அதிக கூட்டங்கள் என்பது வெகேஷன் சமயம், வடக்கிலிருந்து தெற்கில் வேலை செய்துக்கொண்டிருப்பவர்கள்  அவர்களுடைய  ஏதேனும் பண்டிகை சமயத்திலேயே முதல் வகுப்பு ஏசி அம்மாதிரி நிரம்பும்.  தனித்த  ரயில் பிரயாணங்களை நான் தவிர்ப்பதில்லை, பெரும்பாலான என் டைரியின் பக்கங்களை நிரம்பியவை அவைகள் தான் என்றும் போலில்லாமல், அம்முறை அடுத்திருக்கிற லோயர் பெர்த் பதிவாகியிருந்தது, (எப்போதும் இது சாத்தியமல்ல).

அவள் ஒரு பெண், அப்போது ஒரு 34 வயது காணும்,  பிரயாணங்களில் அடுத்திருப்பவர்களை யூகிக்கும் பழக்கம்   எனக்கு அலாதி, முதலில் கண்ட ஐந்து நிமிடங்கள், அவளை யூகிக்கமுடியுமா என்றது மூளையும் மனமும்,

சாந்தமாய், அன்பின் உருவாய், என்று இப்படி எல்லாம் பொய் சொல்லவிருப்பமில்லை, இந்த சந்தர்ப்பம் இனி எப்போதுமே வரப்போவது இல்லை, இதை எப்படியாவது பயன் படுத்திவிடவேண்டுமே என்கிற அன்றைய வயதை ஒத்த சராசரி ஆண் மனமும் இல்லை, ஆனால் ஆற அமர இருந்து அளவளாவிக் கொண்டு, சில பார்வை சாப்பிட்டு, அவள் சந்தர்பம் கொடுத்தால், அலைப்பேசி எண் வாங்கி, கொஞ்சநாள் கவிதை செய்யலாம், மேலும் நெருக்கமானால், அதைப்பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்ற யூகம், அவளிற்கு வந்த முதல் காலில்
சுக்குநூறாகியது பெங்காலியில் (Ami Okane Asbo, Tarpar Katha Bol Bo - நான் அங்குதான் வந்துகொண்டிருக்கிறேன், வந்து சேர்ந்ததும் பேசலாம் ) என  சொல்லிக்கொண்டிருந்தாள் " எனக்கும் பெங்காலி கொஞ்சம் பேசத்  தெரியும் " என்ற ஒரு ஆத்ம சமாதானம்,  kemon acho (எப்படி இருக்கிறாய்), என்று ஆரம்பிக்கலாமா என்பதற்கு முன், அடுத்தடுத்த மணிகள் ஒலித்துக்  கொண்டே இருந்தன அவள் அலைப்பேசியில் முடிந்தவரை இல்லை இல்லை
என்பதே அவளுடைய பதிலாக இருந்தது,  ஒரு மணி நேர அமைதிக்குப் பின்பு, அவள் அவளொரு விலைமகள் என்பதை அறிமுகப்படுத்த சிறிதும் தயங்கவில்லை, அழுதுக்கொண்டிருக்கிறாள், பதினான்கு மணித்தியாள பிரயாணம் முடிகையில் ராட்சத வேகத்தில்  ஆந்திராவை கடந்தேறிக் கொண்டிருந்தன வேகன்கள் .

இப்படி ஒரு பெண் அழுது கொண்டிருப்பதை அதுவும் பிரயாணத்தில் இப்போதுதான் பார்க்கிறேன், பொறுக்கமுடியாமல் அவளே கேட்கிறாள், உன்னருகே ஒருவள் இப்படி அழுகிறாளே, ஏன் என்று
கேட்கத் தோன்றவில்லையா, உன்னை சொல்லி என்ன இருக்கு, எல்லா வயது ஆண்களும் அப்படித்தான்
காமமோ கொலையோ, பெண்ணின் உயிர் உச்சம் தொடும்வரை விடுவதாய் இல்லை, இதிலிருந்து நீ மட்டும்
மாறுபடுவாயா என்ன என்கிறாள், நான் செய்வதறியாமல் எழுந்து அப்பர் பெர்த்திலிருந்த  பெட்டியைத் திறந்து
டைரி எடுக்கிறேன், மேலும் அவளிடம் நான்தான் பேசவேண்டும் என்பது அவசியமற்றது, நீ பேசுவதைக் கேட்டால் போதும்தானே பேசு கேட்கிறேன் என்றேன்,,,

பேசுவதற்கு முதலில், அவள் தன் ஆடைகளை அவிழ்த்து அவள் உடலிலுள்ள சரும குறிப்புகளை காண்பிக்கிறாள், ஒரு வளர்ந்த உலகம் இப்படி சிதைந்திருக்காது ஏது பூகம்பத்தாலும் கூட, அப்படி
சிதைக்கப்பட்டிருக்கிறாள், அவள் முன்னால் விதி ஒரு பூகம்பத்தை கொண்டுவரும்போது
நம்மைப்போன்று அவள் பயந்துகொண்டிருக்கமாட்டாள், அத்தனையையும் அவள் சருமத்தில்
கொண்டிருக்கிறாள், இதற்கிடையில் இவளைக்குறித்த அந்தரங்கம் தெறித்த சிலர் எங்கள் வேகனின்
கதவை தட்டி இம்சித்துக்கொண்டிருந்தார்கள், அவளும் இல்ல்லையென்ற பதிலோடே, வருகிறவர்கள்
அவளைப்பார்த்து கெஞ்சிவிட்டு அவள் முடியாது என்னும் பட்சத்தில் என்னையும் பார்த்து
முறைத்துச் செல்வதால், அந்த அறைக்கதவை இழுத்து மூடிவிட்டோம்,

அவளுடைய இப்பிரயாணம்  அவளை ஏற்க இருக்கும் அன்றைய "தற்போது காதலன்" வீட்டிற்குச் சென்று அவனிடம் சொல்லிவிட்டு மரணிப்பதில் இருந்தது

முதலில் யாரையோ காதலித்தாள் அவனால் ஏமாற்றப்பட்டாள், பிறந்து பதினாறை எட்டிய மகன்
அவளையே வியாபாரப் பொருளாக்கினான் "காலம் அவனை பண நோய்க்குள் தள்ளிய சாபமாய் இருக்கலாம்

ஹிந்தியிலும் பெங்காலியிலும் பாதிக்குங்கீழ் தெரிந்த மழலைத் தமிழிலும் என

அவளே பேசிக்கொண்டிருக்கிறாள், நான் குறித்துக்கொண்டிருக்கிறேன்,

Cut ,,,,,,,,,,,,,

""அவர்கள் மாறி மாறி என்னை நிரவதி தவணை பலாத்காரம் செய்தார்கள்
ஓரோரு முறையும் அவர்கள் கைக்கொட்டி சிரித்தார்கள்
என் புணர்புழையிலிருந்து தகர்ந்த இரத்தம்
அவர்களை போதையாக்கியது
அது போதாதென்று, ஒரு பெரிய கம்பிப்பாறையை
அவர்கள் குத்தி இறக்கினார்கள்
சுகமா இருக்கா சுகமா இருக்கா ன்னு
இடை இடைக்கு
அவர்கள்  என்னைக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்
""சுகமரணமாயிருந்தது ""

Cut ,,,,,,,,,,,,,

எத்தனைப்பேருடைய மரணத்தின் தணுப்பு
என் விரல்கள் ஏற்று வாங்கியிருக்குமோ ?? ,
சிலபோது அவை
என் இதயத்திற்குள் நெரித்தேறும் போல
எல்லா எழுத்தர்களுக்கும்
அவரவருடைய ஸ்ருஷ்டிகளை
மற்றவர்களுக்குக் காண்பிக்க
பயங்கர ஆசையிருக்கும்
என்றால் எனக்கு அப்படி இல்லை
அது அவர்களுடைய சுய வெளிப்பாடு எனினும்,
என்னுடையது
இறந்துகொண்டிருக்கும்
ஆத்மாக்களின் வெளிப்பாடு ஆகும்
ஒவ்வொரு
சரும குறிப்புகளை கேட்டெழுதும்போதும்
ஒவ்வொன்றாய்
கிழித்தெறியும் பேப்பர்களின்  மேல் தான்
கோபித்துக்கொள்கிறேன்

Cut,,,,,,,,,

நிஜாமுதீன் சென்றதும், பிளாட்பாரத்தில் இறங்கவேண்டும், அவளால் அவளின் உடமைகளை தூக்கிச்சுமக்க முடியவில்லை, என்னிடம் உதவி கேட்கிறாள்,

நான் பிளாட்பாரத்தில் இறக்கிக் கொடுக்கிறேன், அந்த பிரயாண நிறுத்தத்தில் இறங்கிய, அந்த அறையில் எங்களை கண்ட அனைவரும், Saala Ek ki  Aadhmi Mazha Kya Tha, Hum Lokh ka Ek ki  Mokka Bhi Nahi Dhya " (பாவிப்பயபுள்ள ஒருத்தன் வச்சு செஞ்சிட்டு வந்திருக்கான், நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பும் கூட கொடுக்காம) என்று தங்கள் வயிற்றெச்சிலை கொட்டியதற்கு அடுத்தும், அவள் என் முகம் பார்த்து வருந்தியபோதும்,
என்னிடம் உதவி கேட்கிறாள்,

ஜினக்பூர் வரை போக வேண்டும், ஒரு டேக்சி பிடித்து தரவேண்டும், கடப்புப்பாலத்தை கடந்தால், அங்கே டேக்சி கிடைக்கும், நிஜாமுத்தீனிலிருந்து எனக்கு சாணாக்கியா பூரி போக மிக எழுப்பம், ஆனால் அப்பெண்மணிக்கு
அங்கிருந்து ஜினக் பூர்  போக அதிக நேரமெடுக்கும் எப்படியோ அன்று அங்குதான் தங்கவேண்டும், என்னுடைய வேலையை முடிக்க ( காலை ஒன்பது மணி முதல் பகல் பன்னிரண்டு மணிவரை நேரமிருக்கு சான்றிதழைக் கொடுத்துவிட்டால் மூன்று மணிக்குச்சென்று பெற்றுக்கொள்ளலாம், தற்போது மணி காலை  6:15) அவளுடைய சுமையினையும் சுமந்து பாலம் கடந்துவிட்டு ஒரு டேக்சி எடுத்து, அவளுடன் நானுமாய் ஏறிக்கொண்டோம்,
ஜினக்பூர் சேரும்போது மணி ஏழைக் கடந்திருந்தது, அவளை அங்கே இறக்கிவிட்டு நானும் டேக்சியுமாய் திரும்பியபோது, மேலும் கைக்காட்டினாள், டேக்சியை ஸ்லொவ் செய்துக்கொண்டு, என்னங்க ஏதும் வேணுமா என்று கேட்கிறேன், அவள் ஏதும் வேண்டாமென்று தலையசைத்து செயகையால் பதில் கொடுக்கிறாள்,
ஒருமுறை கைய்யெடுத்து கும்பிட்டுவிட்டு, முதல் முறையாய் ஒரு ஆம்பளையைப் பார்க்கிறேன் என்றாள்,

நான் அவ்வளவு ஒன்றும் நல்லவனில்லைதான், ஆனாலும் சுயநலவாதியுமில்லை, அவளின் அந்த வார்த்தையில்  மனது லேசானது, வந்த வேலையும் நன்றாகவே முடிந்தது.

எனக்குத் தெரியவில்லை, அவள் இப்போது மரித்துவிட்டாளா என்று, ஆனால் என் நம்பிக்கை சொல்கிறது, அவள் எங்கோ நல்லவிதத்தில் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பாள் என்று,


நன்றி - பூக்காரன் கவிதைகள்

Tuesday, 18 April 2017

அவளும், நானும், அச்சமயமும்



அவளும், நானும், அச்சமயமும் 
============================

அவளைச்சுற்றிய ஓராளும் தராததை 
அவளுக்கு தருகிறேன்  
"சமயம்"

அச் சமயம் 
அவளைக் காணும்போது 
ஜொலிக்கின்றது போலும் அறிவதில்லை 
அத்தனை அழகு   

ஒரு பெண் 
ஏற்றும் அதிகம் சந்தோஷப்படுவது 
எப்போன்னு தெரியுமா 
ஆச்சர்யங்களை ஒருவரிடமிருந்து பெறும்போது 
புன்சிரிப்பு, 
சிறிய பரிசுகள், சிறிய வார்த்தைகள்
இஷ்டப்பட்ட ஆடையை  
உடுத்திறங்கி வரும்போது
நல்லா இருக்கு என்று 
சொல்லும் வார்த்தையின்போது 
அவன் அவளை 
தனைமறந்து  வாய்நோக்கும்போது
ஆள் கூட்டத்தில் 
யாருமறியாதே 
அவன் அவளுடைய கைப்பிடிக்கும்போது 
அவளறியாதே
அவளைக் கட்டிப்பிடிக்கும்போது 
பின்னே 
அவள் எதிர்பாராதிருக்கையில்  
ஒரு முத்தமிடும்போது 
அவள் அவளைக்குறித்து சிந்திக்காதே இருக்கும்போது 
அவனோடிருக்கும்  
அந்த  நிமிஷத்தைத் தவிர 
பாக்கி உள்ள நிமிஷங்களை மறந்துபோகும்போது 
பரிச்சயமில்லாத புதியொரு  வாசனை 
அவள் சரீரத்தில் 
பதிவாகும்போது 
தவறென்று தள்ளிவிட்டவைகளை 
தனித்திருக்கும்போது 
சரியென்று நினைக்கும்போது  
அவள்  காதலித்திருப்பாள் 

வேண்டுமென்று ஆக்கிரகமுள்ள 
பலதையும்   
வேண்டாமென்று ஒதுக்கிப் போகிற சக்தி
பெண்ணிடம் மட்டுமே 

பெண், 
மழையைப்போல,  
இடைக்கு பொழிவதும், 
பொழிந்து கொண்டிருக்குமிடைக்கு  
தூறுவதும் என  
அவளிடம்
நேடிய நிமிஷங்கள் தான் 
நேடாத நிமிஷங்களைவிட அழகு 
இந்த நிமிஷங்கள் தான் 
தயக்கங்களுடன்  
அவள் அவனை அனுமதிக்கிறேன் என்று 
சொல்லவும் செயகிறது  
ஏனோ வேனல் சில்லுகள் போல் மனமிருந்தாலும் 
அவன் மழையில் நனையாதே 
கொதியோடே ஒளியும் பார்வையுள்
தணல் போல் 
அணையாத காற்றுபோல்  
சிறுபூவினுள் தேங்கியே அவள் சமயம்    

"பூக்காரன் கவிதைகள்"

Sunday, 16 April 2017

ஒருமுறை



ஒருமுறை
==============
பருகிக்கொண்டிருக்கும்  கடைசித்துளி  காப்பியின் போது,
 அவள்  மேலுதடும்
கீழுதடும் சண்டை யிடும்,
அங்கிருந்து,
எனது உதடுகள் தொடங்கும் ஒருமுறை,

அவள் ,
ஒருநொடியில் புரிந்துகொள்ள முடியாத
ஒரு வரி ஹைக்கூ ஒருமுறை,

புகையிலை காட்டிற்கு அப்புறத்தில்,
சூரியன் மறைகின்ற
குட்டிக்காலத்தின்  பகல் விடுப்புகள்
நோகிக்கச்செய்யும் ஒருமுறை,
வாரமொதுக்கி
வீட்டுக்குப் போகின்ற  பள்ளித்தோழியை
வழியனுப்பி  திரும்பும்போது,
விடுதியில்,  ஜன்னல் தாண்டி,
மலையிடுக்கில் மறைந்துகொண்டிருக்கும் சூரியன்
நோகிக்கச்செய்தது ஒருமுறை,
பாதி எழுதிய வார்த்தைகள்,
வேத நிச்சலனம் ஆனபோது,
துறைமுகத்தில்,
ஓடமில்லாத  கடல் விளிம்பு ,
அனக்கமற்ற  ஜல நோவுகளைக்  காண,
சயனமாக்கியது ஒருமுறை,

முதலில், ஆகாயத்தில்,
நிறங்களால் சந்தோஷங்களை  நிரப்பியும்,
பின்பு,  இருளுடைய சாயம் பூசி,
மேகங்களை அக்னி ஆக்கி ,
கடலின் ஆழம்வரை இறங்கிப்போன  சூரியன்,
நெஞ்சில், கண்ணீருடைய பாரம் பரப்பியது ஒருமுறை ,

ஒரு டெலிபோன் சம்பாஷணை
முடியும் நேரம்,
அவளுடைய
கடைசி வார்த்தைகள் போலும் கழிந்த
போனின் நிசப்தம்,
உள்ளில், யாத்ராமொழிச் சொல்லி நோவித்து
மற்றொரு நாளின் சூரியன் கூடி
மறைந்து போனது ஒருமுறை,

சிநேக நிராசைகளுடைய சபை விருந்துகள் சேர்த்து,
ஒரு பகல் கூடி முடங்கும்போது,
எழுதி பூர்த்தியாக்கிய தாளில்,
காலம்,
கருத்த மசியாகிடும் விதியுடையக் கைகளில்
மீண்டும் ஒருமுறை,

பூக்காரன் கவிதைகள்

Thursday, 13 April 2017

சிரிக்கும் பூ



டைரியில், 
ஸ்பரிசிக்காத சில பக்கங்களை, 
விரல்கள் ஸ்பரிசிக்கின்றன , 
நடுவில் ஏதோ ஒருபக்கத்தில் மாத்திரம் 
ஒரு பூ  சிரித்திருக்கும், 
அதை ஸ்பரிசிக்கும்போதெல்லாம் 
கண்ணிலே சிறு திளக்கம், சிறு துடிப்பு,  
இந்தத் தனிமைக்கு, அதைத்தவிர  
யாருடைய துணையும் வேண்டாம்,  
எனக்கு வேணுமென்றால், 
அப்பக்கங்களை  வேக புரட்டிக் கடக்கலாம், 
அப்பக்கங்கள், என்னால் எழுதப்படவில்லை என்று 
என்னை நான், ஏமாற்றிக்கொள்ளலாம், 
அதின் நினைவுள்ள எல்லாப்பக்கங்களையும்  
கிழித்தெறிந்துவிட்டிருக்கலாம் தான், 
ஏனோ செய்யாமல் விட்டுவிட்டேன் , 
காற்றுப் பதனி கேடாகும் போதெல்லாம், 
பின் கழுத்து வியர்த்தரிக்கும், 
அப்போது,  அப்பக்கப் புரள்வுகளுடைய  
காற்று வேண்டுகிறேன், 
இல்லாமல் போனாலும், 
இப்படியொரு தனிமை சூழும் என்றுதான், 
இப்படியொரு தனிமைக்கு வேண்டிதான், 
சபிக்கப்பட்ட இவ்விரல்கள் கொண்டு
அப்பக்கங்கள் கிழித்தெறியப்படவில்லைபோல்  
ஸ்பரிசித்து மூடும் வேளையில், 
அப்பூவின்மேல் 
இதோ, காற்றினிமைத் திவலையின் 
ஒற்றைத்துளி,   

"பூக்காரன் கவிதைகள்"

Sunday, 9 April 2017

எங்கோ எப்போதோ ம்ம்


எங்கோ எப்போதோ ம்ம் 
======================

எழுதாத வரிகளுக்குள் தான் 
அந்த காதல் வாழ்ந்துகொண்டிருந்தது , 

சொல்லாத காதல்தான் எப்போதும் வாழும், 
அது நட்பாகவோ, 
இல்லை வேறு ஏதோ 
பெயரிடப்படாத உறவாகவோ ம்ம்  
அழகாக இருக்கும் , 
அது அப்படியே இருக்கட்டும், 

நீ அப்போது,  அதிகமான காதலில் திளைத்திருப்பாய்,  
சொல்லாமல் காதலிக்கும் 
உன் முகத்தை 
எப்போதும் பார்த்திருக்க 
நட்பைவிட  சிறந்த மருந்து  
வேறொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை,  
அதுதான், தொடக்கத்திலேயே 
உன்னை நட்பாக பார்த்துவிட்டேன் , 

ஆனாலும் காதலிக்கிறேன் 
இதுதான் உண்மை , 
காதல் வேண்டாம் என்று 
அன்று நான் உன்னிடம் சொன்னதை 
ஏற்கின்ற பக்குவாம் 
இன்று உனக்கு வந்திருக்கக்கூடும் 
மிதமாக நேசிக்கவும் 
இன்று உன்னால் முடியும்,  
உன்னால் உன்னை ஆளுமை செய்யவும் முடியும்,  
நம் நட்புக்கிடையிலும் 
இன்றும்  
ஒரு மென்காதல் இழையோடும், 
ஆனால் 
நட்பு மட்டுமே மிளிரும் , 

இவ்ளோதான் வெளிப்படும், 
கடந்து வந்ததில் 
வழி நெடுகே 
மலர்க்கிடக்கைக்கிடையில்  
எங்கோ  மறைந்துவிட்ட என்  காதல், 
இத்தனைதான்,   
இதில்தான் இதம்,   

காலம் தூரமாகிவிட்டது, 
குழந்தைகளின் கைப்பிடித்து கடக்கின்ற நீ, 
உன் பார்வை, 
உன் சிரிப்பு, 
என் உதடுகளை, 
சுண்டி இழுக்கும், உன் உதடுகள் என
எல்லாம் அகன்று   
சராசரியாகிவிட்டாய்,,   
""அப்போதுபோலவே 
இப்போதும் 
உன் அழகான கண்களால், 
என் கண்களை சந்திக்கமுடியவில்லை, 
அதையும் 
அன்றுமாதிரி 
இன்றும் தலைக்குனிந்தேதான் சொல்கிறாய்"", 
அன்றெல்லாம் முத்தமிடவேண்டுமாய்த்  தோன்றி
கஞ்சம் பிடித்து 
அடமாய்  
ஒளித்துவைத்த    
என் முத்தப்பூக்களில் இருந்து 
ஒரு முத்தப்பூ, 
என் தோழி உனக்கு இதோ, 

உன்னிடம் நடித்த என் அருகாமை,  
அப்போவே 
எனக்கு பிடித்திருந்தது, 
இப்போதும் அதே பிடித்தம் மாறாமல் 
புன்சிரிப்போடு போகிறேன் 

"பூக்காரன் கவிதைகள்"

பிடித்திருக்கிறதா சொல்



பிடித்திருக்கிறதா சொல்
=======================

உன்னைச் சுற்றியிருக்கும்,
நீ வெகுவாக
இரசிக்கும் விஷயங்களில்
நானும்  இருக்கிறேனா  சொல்,
அவைகளை
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
நீ  இரசிப்பாயானால்
என்னையும்  கண்டுக்கொள்வாய்தானே ,,

எப்போவாவதுதான்
பேசிக்கொள்கிறோம்
அன்றொருமுறை, நீ அழைத்தப்போது  
உன்னைப்
பிடித்திருப்பதாக சொல்லியிருந்தேன் ,,
தெரியுமென்பாய்,,,

அடுத்தடுத்த முறை அழைக்கும்போதெல்லாம்  
அதையே அழுந்த சொல்கிறேன்  ,,
ஐயோ என்று கூச்சலிட்டு
அதுதான் சொல்லிட்டியே,
இன்னும் எத்தனைமுறைதான் இதையே சொல்வாய்  என்பாய் ,,

ஏன் தெரியுமா ,,
என்றைக்காவது என்னை
உனக்குப் பிடிக்க  நேரிடலாம்  ,,
இல்லை இவ்வாயுள்  முழுவதும்
என்னை
உனக்கு பிடிக்காமலும் போய்விடலாம்  ,,
உனக்கென்னை பிடிக்கின்ற சமயம்  
நான் உன் அருகில்
இல்லாமலோ, பேசாமலோ,  தொலைந்துவிடலாம்

அப்போது  நீ  யோசிப்பாய்தானே  ,,
அடடே
அன்றே  அவன்  விருப்பத்தைச் சொன்னானே
இனி என்  விருப்பத்தை
எப்படித் தெரியப்படுத்துவது
இப்போதெங்கிலும்
அதைத் தெரிவித்தால் தான்
அவன் ஏற்றுக் கொள்ளுவானா  
என்னும்,  ஆழ்ந்த  தயக்கத்தில், நீ  நீந்திக் கிடக்கலாம்

காணும்போதெல்லாம்
அதனால்தானே  சொல்கிறேன்
உன்னைப் பிடித்திருக்கிறது என்று ம்ம்,,

உன் வார்த்தைகளால் மயங்கிக் கிடத்தினாய்,,    
அன்றெல்லாம்,
நீ சொல்வதுதான் வேதமாகிற்று  என்றாய் ,,  
ம்ம்ம் கொட்டியதன்
எண்ணிக்கை மறந்த உனக்கு ,,
என் எண் மட்டுமா
இனிமேல் நினைவிருக்கப் போகிறது  ,,

என்னிடம் எனக்குப் பிடித்தவை
இரண்டு விடயங்களாக  இருகின்றன ,,

ஒன்று
எல்லாவற்றையும்  
முழுவதுமாக  விழுங்கிக் கிடப்பது
இன்னொன்று
அவற்றையெல்லாம்
வெளியே  உமிழ்ந்து தொலைவது
இதில் எது உனக்கு
அதிகம்  பிடித்திருக்கிறது சொல்
அதையே  உனக்கு  வரமளிக்கிறேன் ம்ம்

எனக்கு,
நன்றாகப்  பழக்கப்பட்ட
ஒரு பூவின் வாசத்திலோ,,
ஒரு பாடி ஸ்ப்ரே யின் வாசத்திலோ
உன்னைப் பொருத்திக் கொள்கிறேன்
எப்போதும் நீ எனக்கு பிடிக்கவேண்டுமென்று  ஆம்
 
இன்றுவரை,
நான் இவ்வாசங்களை மறக்கவில்லை
மாற்றவுமில்லை ,,
உனக்கும் பிடித்திருக்கிறதா சொல் ,
இப்பொழுதே சொல்லாதே,
அன்றைய  நெருக்கத்தில் ,
சிலநேரம் உனக்கு ஜலதோஷம் பிடித்திருக்கலாம்,  
உன் நாசியில்,
சுவாசப்படர் அடைந்திருக்கலாம்,
அதனால் கூட,  
அன்று அந்த வாசம்,
உனக்குத் தெரியாமல் போயிருக்கலாம்,

இன்னொருமுறை,
நன்றாக  நுகர்ந்துகொள்
பிறகு சொல் பிடித்திருக்கிறதா என்று ,,

நீ மறைக்கும் உண்மைகளை  அடுக்குபவன்
என் சிரிப்பன்  தெரியுமா ...
உனக்கு பழக்கமில்லாத உன்  பொய்களில்,
உன்  படுக்கையறை சுவரதிர,
அதிக அளவு  வியாபிக்கிறான் அவ்வளவுதான் ம்ம்
   
இப்பொழுது போகிறேன்,  
இனி அழைக்கின்றபோது சொல்
பிடித்திருக்கிறதா,  இல்லையா என்று ம்ம்

"பூக்காரன்  கவிதைகள்"

Friday, 7 April 2017

ஆயிரம் பூக்காடுகள் அவள் ஒருத்தி மட்டும்



ஆயிரம் பூக்காடுகள் அவள்  ஒருத்தி மட்டும்
=====================================

ஆக்கிரமித்த உரிமையோடு 
"டீ" என்று அழைக்கிறபோதெல்லாம் 
தாமதித்த மழைக்காலங்களில் 
அவளோடு குடைபிடித்து நடப்பதாய்  நனவோடை  

காற்றொலிப்பான் சப்தம் 
காற்றோடு 
காதையும் அறைந்து உணர்த்தியிருந்தது 
ஆம் அவளை பிடிக்கும் 
அணைத்தலுக்கும் முத்தமிடலுக்கும் இடையிலான 
திரையிட்டக் கட்டுப்படுத்துதலின் 
தனிமையில்  
எதையும் சொல்லாமல் நேசித்திருக்க 

வெளியிடையில் 
மஞ்சுமூடியிருந்த கார்காலம் அது 
சாளரம் திறந்திருக்கிறது 
பனிக்காற்றில் 
அரும்புடை பூக்களின் பிறந்தவாசம் 
வயதை அழைக்கிறது 

தூங்கலையா 
என்ற அவள் ஆகாசவாணியில்
தளுவத்தை இறுக்கிக் கொண்டு ம்ம்
இல்லை இது உனக்கான கவிதை 
அழகா வரவேண்டாமா 
இதைப் பார்த்தாவது 
நீ என்னை தேடுவாய் தானே  
அப்படிப்பார்க்காதே 
உன் பார்வை நெருப்பா இருக்கு  
நீ நல்ல பொண்ணு  
உன் பார்வைக்கு முன்னால்
இந்த பொறிக்கி கண்கள்  
பயந்துதானே ஆகணும் என்றேன்

அவள் விம்பம் கரைந்திருக்கும் 
அந்த அறையின் 
நான்கு சுவர்களோடும் ,, 
உடமைகளோடும் ,,,,,,,,,,,, 
யாரும் பார்க்காத இடத்தில் 
அவளுடனான இலேசான தட்டுமுட்டுதலுக்கு 
இடம் தேடத்தான் செய்கிறேன் 

பண்டிகைநாள் நினைவுபோல் 
ஏதாவது சாகசம் செய்து 
அவளை பார்க்கும்படி செய்யலாம் 
என்ற கனவுகளின் 
ஒத்திகைகளுக்கு நடுவில் 
காலங்கள் கழிந்துகொண்டிருந்தன 
கருவளையங்கள் 
என் மேற்கன்னக்குழிகளை 
தீரா  இருட்டாக்கிக் கொண்டிருந்தன 

தெரியவில்லை ம்ம்ம் 
சர்கஸ் கோமாளி எனவும் 
செல்லப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் ம்ம்ம் 
நிலவின் கறைப்பட்டுத் ததும்பும் 
ஆம்பலின் தணுப்புபோல்
தூர நின்றே அவள் காட்சிகள் மறைந்தன 

நாடோடிக் காற்று தழுவவில்லை 
என்று தொடங்குகையில் 
என்ன என்று கேட்கும் விழிகள் 
பூங்கனல்போல் மின்மினிகளைப் பிரசிவிக்கும் 
இதயக்காரை கோடுவெடித்து  
ரோஜா மொட்டு நாணும் 
முட்களை மிதித்த மூங்கில் விதையாய் 
வார்த்தைகள் கரணமடித்து 
யானைக்காலில் மிதிப்படும் தருணமாகும் 
கந்தகத்தின்மேல்  நடமாடும் 
இரத்தச்சிவப்பழகி அவள் 
ஆயிரம் பூக்காடுகள் அவள்  ஒருத்தி மட்டும் 
அவள் பிடிக்காத 
அந்த மல்லிகைக் கொடியின் விரல்கள்
அவளை விடுவித்ததும்தான்  
ஆண் நெஞ்சுள் இடறிய வலியானாள் 

எண்ணத்தில் உதித்த அக்கண்ணாடி சீசாவின்மேல்
ஒருபுறம் அமிழ்ந்துகொண்டிருக்கும்  
மனக்கடிதங்கள் எல்லாம் 
ஏதும் பேசாமல்  
சேற்றுக்குழைவில் சிக்கிய 
மண் புழுவைப்போல்
அச்சுப் பிறழ்ந்து அழிந்து கொண்டிருந்தன 

"பூக்காரன் கவிதைகள்"

Monday, 3 April 2017

வாழ்ந்துபார்க்கலாம் வா



எல்லாம் அலுத்துப்போகிறவரைதான் என்று அவளும் ,, 
எல்லாம் ஆயுள்வரை என்று நானும், 

கோபம் பிணக்கம், பிடிவாதம் பிடித்து, 
சண்டையிட்டு, 
வாழாமல்  விட்டுவிட்ட நேற்றுகளுடைய நொடிகள் 
இனி வரப்போவதில்லை, 

வெறுமையுடன், 
புகைப்படங்களைப்பார்க்கும் உன் முகம் 
எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்கிறேன்,

இந்நொடிமுதல்,
 எதையும் விரையம் செய்யாதே பயணிக்கலாம் 
நிகழ்வுகளையடுத்து 
என்றாவது பிரிந்துவிடலாம் வா, 

வாடும் பூக்களைப் படம்பிடித்து, 
என்றாவது ரசிப்பதைப்போல,  ம்ம்திரும்பிப்பார்க்கும் போது, 
அலுத்துவிட்டவைகள் தான் அழகானவை தெரியுமா  ம்ம், 

வாழ்த்தாமல் விட்ட பிறந்தநாட்களின்  பின்னால்,, 
யாரும்   ஓடோடிப்போவதில் 
வயது குறைந்துவிடப்போவதில்லை, 
நரை இடுக்குகளில்  வாழும்படி 
இனிவரும் நம் பிறந்தநாட்களை கொண்டாடிவிட்டுப்  பிரிந்துவிடலாம் வா 

நாக்கூசாத  வார்த்தைகளினால், 
நம் உதடுகள் முத்தமிட்டும்,  
பின் நாவுகள் பின்னாமல் விட்டிருக்கலாம், 

இனி நீ பேசு, நான் மௌனமாகிறேன், 
நாட்கள் கொஞ்சம் போகட்டும், 
ஆபாசங்கள் அர்த்தம் பெறட்டும்,  
மீண்டும் நம் நாவுகளால்  பின்னிக்கொள்ளலாம், 

அரவங்கள் ரெண்டு,  கூடும் ஒளிர்நிசிபோலே 

"பூக்காரன் கவிதைகள்"

Friday, 31 March 2017

வசந்தமா, அடர்மழையா



என்கிட்டே பேசணும்னா நீயே வந்திடுவ, அப்போ பேசிப்பேன், அப்போ தவிர்க்கமாட்டேன், ஏன்னா ,,, வசந்தமும்,, அடர்மழையும் வருடமொருமுறை, எப்போதாவதுதான் வரும், இப்பருவம் உன்மேல், ஓயாமல் சிவிறிக் கொண்டிருக்கும் என்னைப்பார்த்து, நான் வசந்தமா, நீ அடர்மழையா, எனக் கேட்காதே ,, சட்டென்று ஆமாம் சொல்லிடுவேன் ம்ம்,, அடர்மழையில்லாமல் வசந்தமில்லை ஆதலால் ம்ம் பேசிப்பேசி நமக்குள் நாம் அலுத்துவிடவேண்டாம் யாருடனேயாவது பேசிப்பேசி அலுத்துவிட்டு பின் என்னிடம் வா ... அதுவரை, உன் கண்களைப்பார்த்து புதிது புதிதாய் கதைகள் சொல்ல கற்றுவைக்கிறேன் மெதுவாக அலையெனத் தொடங்கிய இந்த இதயத்திற்கு ,, வேகமும் அழுத்தமும் காதலும் காமமும் ரொம்ப அதிகம் ,,, வச்சுக்கோ அடுத்தமுறை நீ என்கூட பேசவரும்வரை ❤ ம்ம் "பூக்காரன் கவிதைகள்"

Wednesday, 29 March 2017

காதல் டாபிக்


காதல் டாபிக் 
=============

கயிறறுந்த நாணலாய் 
என் உயிர்  
உன் ஆராதனைகளின் பின்னால் 
தொடர்ந்துகொண்டுதான் 
இருக்கிறது.
உன்னை நினைக்கும்போதெல்லாம் 
என்னுள் நான் 
மீண்டும் ஒருமுறை பிறந்துவிடுகிறேன் 
உன் கை என்னில்பட்ட 
அந்த முதற்தருணமே 
பரிசுத்தமடைந்துவிட்டேன்  நான் 
மதியலை மிதக்கும் 
நனவோடைக் கீற்றுகளால்
தட்டாமாலை ஆடினேன் ம்ம்

மென்சோகம் இழையோட, 
யுகங்களின் அழகில் 
மிளிர்ந்த 
உன்முகமும், 
விரல்கள் பூத்தொடுக்க வழிந்த
உன் குரலின் 
வசீகரமும்
என்னை  
உன்வசம் சரியச்செய்கின்றது
நீ அடிக்கடி 
நம் உரையாடலின் நடுவே
சொல்லிக்கொள்ளும்  "ஆமாவா" 
என்னும் சொல்
என்னை முற்றிலுமாய் கிறங்கவைக்கிறது

உன் பெயரெழுதப்பட்ட 
நீல நிறமைய்யையும்
முதல் முறையாக 
நேசிக்கத்தொடங்கிவிட்டேன் நான்,,,
நீலநிறமைய்யின் 
இழையோடிய எழுத்துகளின்மேல் 
ஒரு பிறைநிலா,,!!
இதுவரை நிமிர்ந்துநாணாத நிறைநிலா,,!!
இருளும் ஒளியும் அற்ற 
என் உலகில் 
இரவும்பகலுமாக 
நான் ஏந்தி தடம் காட்டபோகும் 
தனிநிலா என்னில் நீ ,,,,!!

"பூக்காரன் கவிதைகள்" 

Monday, 27 March 2017

பூக்கள் பூக்கும் தருணம் - சிறுகதை



பூக்கள் பூக்கும் தருணம் - சிறுகதை
=================================

கோவை காந்திபுரம் முன்ன இருந்த ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி டவர் ,  இப்போ கணபதி சில்க்ஸ் இருக்குங்க தோழர் , காந்திபுரம் டவுன்  பஸ் ஸ்டான்ட்  க்கு எதிர்த்தாப்புல சிம்ம சொப்பனமா  இருக்குமுங்க  தோழர்,  
இந்த இடத்தைப்பத்தி ஏன் இப்போ சொல்றேன் தெரியுங்களா தோழர்.

காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டான்ட்

விற்ற, விற்பனை செய்யப்படாத மல்லிகை முழங்களுக்குள் மறைந்த காதல், கோபம், பிடிவாதங்கள், தலைமுறைகளாக, கேலிகள் சுமந்த கற்களாலான இருப்பிடங்கள், தள்ளுவண்டிக்காளான்  கடைகள்,
என்றோ சுவரில் கிறுக்கப்பட்ட, அடையாளம் தொலைத்த,  பழைய அலைப்பேசி எண்கள், தவறவிட்டவைகளை தேடிக்கொண்டிருக்கும் பழைய சிலர், பேருந்திற்காக காத்திருக்கும் சுமதலைகள், அப்போதுதான் சேரப்போகும், கடைசியாகப் பிரியப்போகும், காதல், நட்புடைய லாண்ட்மார்க், பார்த்து பழக்கப்பட்ட பெயர்த் தெரியாத முகங்கள், திறக்கப்படாத இதயங்களின் ஆவிகள் (நினைவுகள்), யாரோவுடைய தொலைந்துபோன பார்வைக்கென தேடித்திரியும் பார்வைகள், சில்லரைத் தட்டின் சப்தங்கள்,  டிரான்சிஸ்டர்களின், அலைவரிசை ஊசலாடும் திறக்கப்பட்ட பெட்டிக்கடைகள், அன்றைய எங்களை நினைவுப்படுத்தும் புதிய நாங்கள் யாரோ,

காலேஜ் முடிச்சிட்டு பிரெண்ட்ஸ் கூட சுத்திக்கிட்டிருப்பேன் தோழர் , அடுத்து வேலைக்குப்போலாமா இல்லை மேலே படிக்கப்போலாமா என்னும் குழப்பத்திற்கிடையில், சான்றிதழ்களை கலரில் நகலெடுக்க ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி டவருக்குள் நுழைகிறேன், 1996  கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப்பின் டவரின் ஒரு பகுதி காலியாகிக்கிடந்தது, இன்னொருப் பகுதியில்  

ஸ்டார் செராக்ஸ், கருப்புவெள்ளை அச்சு எடுக்கும் பிரிவு, வண்ண நகல் பிரதி மேலும் அச்செடுக்கும் பிரிவு, விசிட்டிங் கார்ட், இன்விடேஷன், பிரௌச்சர், புத்தகங்கள், வடிவமைக்கும் பிரிவு, செய்தித்தாள் போஸ்டர் என வடிவமைத்து அச்சிடும் பிரிவு, பெரிய பெரிய வரைபடங்கள் வரையும் பிரிவு என ஏராளம் பிரிவுகள் இருக்கின்றன. அந்த இடம்,  அங்கே பணி புரியும்  இளம் ஆண்களும் பெண்களும் திருமணமானவர்களும் என கலகலத்துக் கொண்டிருக்கும் அவ்விடைத்தையொத்த சூழல் டவர் அருகே உள்ள டீக்கடை, சுப்பு மெஸ்  என  அந்த இடம்  லெகுவாக என்னை கவர்ந்திருந்தது தோழர்

நகலெடுக்க அற்பசமயம் காத்திருக்க வேண்டியிருந்ததால், வெளிப்புற சுவர்களில் பதியப்பட்ட வண்ணப்படங்களின்மேல் இலயிக்கலாமே என பார்வையை ஓடவிட்டேன் தோழர்  

A4 அளவைவிட சிறிய அளவிலான தாளில் ஆட்கள் தேவை என்ற, ஸ்டார் செராக்சின் விளம்பரம், பில்டிங் வரைப்படம் மேலும் பொதுப்பணித் துறையின் மேப் வரைப்படம் கம்பியூட்டரில் வரைய ,, கணக்கீடு செய்யம் பணிக்கான விளம்பரம் அது தோழர்

பார்ட் டைமில் வேலைக்கு சேர்ந்தால் என்ன என்று தோணிற்று அன்று அதன் உரிமையாளரை சந்திக்க முடியவில்லை , மறுநாள் காலை நேரத்தே எழுந்து என் காரில் வந்து பார்த்தபோதுதான் உணர்கிறேன்
அங்கு டவருக்கான பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை என்று

நூறடி ரோட்டில்,  இடம்பார்த்து காரை பார்க் செய்துவிட்டு, ஒரு ஆட்டோ ரிஃஷாவில் போய் இறங்கினேன்
உரிமையாளரைப்பற்றி விசாரிக்கும்போது, இரண்டாம் தளத்தில் அலுவலகத்தில் இருப்பது தெரிந்து
நேரிட்டுக் காணச் சென்றேன்.

அற்பம் காத்திருக்க நேர்ந்தது தோழர் , மோசமில்லை அவரைக்கண்டு பேசி விண்ணப்பத்தை அளித்ததும், ஒரு மூன்று நாட்கள் சமயம் கேட்டிருந்தார், ஆனால் அடுத்த நாளே கூப்பிட்டு வேலைக்கு சேரலாம் என சொன்னது
மனதுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது தோழர்  

சிறுவயது முதல் தனியாகவே இருந்துவிட்டு எனக்கு, நெரிசலில் புழங்குவதும், நெரிசலில் பயணிப்பதும் புதிது எனினும்  அதிகம் விருப்பப்படுகிறேன் ஆம் தோழர்

காலையில் டவுன் பஸ்ஸில் பயணம், சீட்டு சிலபோது கிடைப்பது கடினம் இருந்தாலும் வேலைக்குப் போகிறவர்கள் மத்தியில் விழும் பேச்சு கேலி இவைகளினூடே பயணிப்பதுவும் அலாதிதான் தோழர்

காலத்தோடு வேகமாக விரைந்து கொண்டிருக்கிறேன் தோழர், ஸ்டார் செராக்சில் எல்லோரும் ஏறத்தாழ நண்பர்களாகியிருந்தோம் ஆண் பெண் என பேதமில்லாது, சுப்பு மெஸ்ஸில் ஒரு சாப்பாடு ஆர்டர் செய்தால் ஆறு பேர் சாப்பிடலாம் 18 ரூபாய் சாப்பாடு,, ( பீசில்லாத மீன் குழம்பு, கோழி குழம்பு , கறிக்குழம்பு சாம்பார் ரசம் , மோர், நிறைய சோறு, அப்பளம் என பெரிய பார்சல்) ஒன்றாக சாப்பிடுவோம் பங்கிடுதலிலும் பேதமில்லை அங்கே. தோழர்

ஜெனெரல் ஷிப்ட் முடிந்தால் எல்லோரும் ஒன்றாக பஸ் ஸ்டான்ட் போவோம் தோழர்  , நிறைய நேரமிருந்தால் வஉசி பார்க்  போயிட்டு திரும்ப நேரத்துக்கு பஸ் ஸ்டான்ட் இல் வந்து,, கட்டிட இருக்கையில் சாய்ந்து இருந்து மொக்கைப்போடுவோம், அதில் சிலர் காதலித்துக் கொண்டிருந்தார்கள், சிலர் அவர்களுக்குள்ளாரே சண்டையிட்டுவிட்டு  பேசாமல் இருந்தார்கள், சிலர் புரளி பேசிக்கொண்டிருந்தார்கள் சிலர் அரசியல் சிலர் நகைச்சுவை என  இப்படி ஒன்று கூடும் பஞ்சாயத்தெல்லாம் அப்பொழுதுதான் வெளிவரும், ஒவ்வொருத்தருக்கான பஸ்  வரும்போது விடைபெற்று போவோம் தோழர் ,,, நண்பர்களின் திருமணம் என்றால் கூட்டத்தோடு போயி கும்மியடித்துவிட்டு  ஒன்றாக படம் பிடித்து பின் பணிக்குத் திரும்புவோம், அந்த வாழ்க்கை  இன்று  யாரோ அன்றைய எங்களுக்கு பதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் போல தோழர், பிடித்த பெண்களுக்கு பிடித்த ஆண்கள் வாங்கித்தரும் மல்லிகைப்பூவிற்கு பிரத்யேக வாசமிருக்கும் , பரிசு பொருட்களுக்கு அதன் மதிப்பிற்கும் அங்கே .... இப்படி அழகாகக் கடந்துகொண்டிருந்தேன் வாழ்நாளின் என் நடு பக்கங்களில் நான் தோழர்

அப்போதுதான் தோழர், சுற்றும் முற்றும் பார்க்காமல்  வேகக்கடக்கும் என் வாழ்க்கை வீதியில் ஒரு ஹாரன் சத்தம் போல, காலைப்  பூக்கள் சட்டென்று பூக்கும்போது சன்னமாய்  புறப்படும் மீயொலி போல, அவள் மொழி மென்மை,  அப்பேருந்து நெரிசலின் சலசலப்பைக் கடந்து முதல் நாள் என் செவி   கிழித்தது தோழர், "பர்ஸ் காணோம் என்ற மொழி" ஆம் அவளைப் படைத்தவனின் குரூரம் முழுவதும்  என்னிடம் திரும்புகிறதை என்ன சொல்லுவேன்  தோழர், பேயாது நின்ற ஆயிரம் காலத்து அடைமழை ஒன்றாக ஒருநாளில் என் மேல் பொழிவதைப்போல, அதுநாள் அடைத்துவைத்த புதிய  இசையை அன்றுதான் பூமிக்கு அனுப்பிவைத்தானோ இறைவன் என்பதைப்போல, சுற்றி என்னை சொர்கமாக்கினாள் நிமிடம் தோழர்,

அன்றிலிருந்து அப்பேருந்து பிரவேசம் என்னில் புதிய  பிராரப்தம் என்பேன் தோழர் , அவள் இருக்கைக்கு நெருக்கமாகச் சென்று நிற்பேன், எப்போதும் பயணிக்கும் ராஜி அக்காபாக்கத்தில் அன்று அவளிருந்தாள்,
இயற்கையை சபிக்கும்படி கட்டளைக்கு ஆளாக்கப்பட்டேன் அவள் பார்வையற்றவள் என்று அறிந்த அந்த நிமிடம், காணாது போயினும், மீண்டும் காணும்படி கண்களைப் பிறாண்டும்  மிளிர்ந்த விழிகள், காற்று அவள்
கூந்தலை அழகாய் அலைக்கழிக்கிறது, அவள் கன்னக்குழிகளைக் கணவாவது, அவளை மீண்டும் சிரிக்கவைக்கலாமா என்று தோன்றும் அழகு தோழர்,

ராஜி அக்கா, சகப்பயணி, பஸ் ஏறும்போது பார்த்து சிரிப்பார், மேலும் பஸ்ஸில் கூட்டம் அதிகமாகும்போது
என் கைய்யிருக்கும் சோற்றுப்பையை வாங்குவார்கள், கொஞ்சமே பேசுவார்கள், அதைத்தவிர
அவர்களைக்குறித்து எனக்கு அவ்வளவு தெரியாதுங்க தோழர், அன்றுதான் ஆரம்பித்தோம், ஒருமணிநேரம் நிறைய தரிப்புகளை பேருந்து கடந்து செல்வதால் மிகையான சலிப்பிலிருந்து கடக்க அந்தாக்ஷரி ஆரம்பிக்கலாமா என்று,

அதற்கு அடுத்த நாளிலிருந்து முன்பாகவேச் சென்று பஸ்ஸில் முன்பக்கமாக ஏறி அவள் முகம் காணும்படி ஒரு இடம்பிடித்து எதிரிலுள்ள கம்பியில் சாய்ந்து நின்றிடுவேன், அன்றுதான் ராஜி அக்கா, அவளிடம்
என்னையும் என்னைச் சுற்றிய சிலரையும் அவளுக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள், பின்பு எல்ல்லோரிடமும்
இவள் மலர்விழி என்று ராஜி அக்கா சொன்னபோது, மலர்ந்த அவள் இதழ்கள், அந்த நொடிக்குள் விழுந்து
திருடிக் கொண்டிருக்கிறேன் சுயநலம் தோழர், நிறைய நேரம் அந்த அழகைத் திருடிக் கொண்டிருப்பதை
எது உணர்த்தியதோ தெரியவில்லைத் தோழர், தானே உணர்கிறாள் போல தலைகுனிந்தாள் தோழர்,

அந்தாக்ஷரியும் அவளும் நானும் ராஜி அக்காவும் இன்னும் சிலரும் என இருந்த அந்த அழகான பயணத்தில்,
நான் மலர்விழியிடம் சாய்ந்து கொண்டிருக்கிறேன்  நிமித்தங்களை, ராஜி அக்கா ப்புரிந்து கொண்டார்கள் தோழர்,  ராஜி அக்கா என்னை புரிந்துகொண்டார்களே அன்றி அதை அவளிடம் சொல்லிருக்கமாட்டார்கள் என்பதில் என்னில் தெளிவிருந்தது தோழர், நானும் அவள் எங்கு போய்விடுவாள் மெதுவாக ஒரு நல்லவேலை கிடைக்கும்போது எல்லோருக்கும் இனிப்பு வழங்குவதைப்போல தொடங்கி அவளுக்கும் கொடுத்து   மனதை சொல்லிவிடலாம்  என தாமதித்திருந்தேன் தோழர், அவளுக்குத் தருவதாய் எண்ணி அவளைக்கண்ட அந்தநாளில்  கிறுக்கிய கவிதையொன்றை இதுநாள் வரையும் எத்தனை உடுப்புகள் மாறியபோதும், அதை  அன்று  இடும் உடுப்பின் சட்டைப்பையில் மாற்றிவைக்க மறக்கவில்லைத் தோழர்,

கயிறறுந்த நாணலாய்
என் உயிர்
உன் ஆராதனைகளின் பின்னால்
தொடர்ந்துகொண்டுதான்
இருக்கிறது.
உன்னை நினைக்கும்போதெல்லாம்
என்னுள் நான்
மீண்டும் ஒருமுறை பிறந்துவிடுகிறேன்
உன் கை என்னில்பட்ட
அந்த முதற்தருணமே
பரிசுத்தமடைந்துவிட்டேன்  நான்
மதியலை மிதக்கும்
நனவோடைக் கீற்றுகளால்
தட்டாமாலை ஆடினேன் ம்ம்

மென்சோகம் இழையோட,
யுகங்களின் அழகில்
மிளிர்ந்த
உன்முகமும்,
விரல்கள் பூத்தொடுக்க வழிந்த
உன் குரலின்
வசீகரமும்
என்னை
உன்வசம் சரியச்செய்கின்றது
நீ அடிக்கடி
நம் உரையாடலின் நடுவே
சொல்லிக்கொள்ளும்  "ஆமாவா"
என்னும் சொல்
என்னை முற்றிலுமாய் கிறங்கவைக்கிறது

உன் பெயரெழுதப்பட்ட
நீல நிறமைய்யையும்
முதல் முறை
நேசிக்கத்தொடங்கிவிட்டேன் நான்,,,
நீலநிறமைய்யின்
இழையோடிய எழுத்துகளின்மேல்
ஒரு பிறைநிலா,,!!
இதுவரை நிமிர்ந்துநாணாத நிறைநிலா,,!!
இருளும் ஒளியும் அற்ற
என் உலகில்
இரவும்பகலுமாக
நான் ஏந்தி தடம் காட்டபோகும்
தனிநிலா என்னில் நீ ,,,,!!

சொல்லிக் கொள்ளலாம் நேரங்களில் தோழர்,  பெங்களூரில் ஒரு பெரிய அடுக்ககம் கட்டும் நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்விற்கு அழைத்திருந்தார்கள், எப்படியோ அந்த வேலை எனக்குக்கிடைத்துவிடும், மலர்விழியுடைய  மலர்விழிகளாக கிடைத்த இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளவேண்டுமாய்
அதையே ஒரு இலட்சியம் செய்துக்கொண்டேன்  தோழர், யாரிடம் போலும் சொல்லாது ராஜி அக்காவிடமும் சொல்லாது, பெங்களூர் சென்றுவிட்டேன், நெடும்பயணத்தில் எப்போது இந்த நேர்முகத்தேர்வு முடியும், முடிந்ததும் என்னைச்சுற்றி பின்னால் சிறகுகள் முளைக்கச்செய்து உடனே பறந்து சென்று  அவளைப்
பார்த்துவிடவேண்டுமாய், அடக்கிவைத்தவைகளை பொட்டித் தெறிக்கவேண்டுமாய் துள்ளிக்கொண்டிருந்தன  என் ஆவல்கள் தோழர்,

நேர்முகத்தேர்வு முடிந்து, திரும்ப வந்த அந்த இரவை கடக்க அப்பப்பா எத்தனை போர்க்களம் போல தோழர்
விடிந்தும் விடியாத நேரத்திலேயே கிளம்பி பேருந்து தரிப்பில்  புறப்பட்டுப்போய் நின்றுவிட்டேன் தோழர்
அன்று எல்லோரும் வந்திருந்தார்கள், மலர்விழியும் வந்திருந்தாள், இனிப்புகளுடன் சென்ற என்னிடம்
நான் முந்தும் முன்பு ராஜி அக்கா இனிப்புகளுடன் முந்திக்  கொண்டார்கள் தோழர், விஷயம் எட்டாமல்
வியப்பிற்குள் விழ இருந்த நேரம் தோழர், ராஜி அக்காவே அவர்கள் குரலுயர்த்தி, என்னை முழுநாள் ஊமையாக்கும் செய்தி ஒன்றை சொன்னபோது என்னை அறியாமலேயே நான் வீழும் கண்ணீரை விழாமல் விழுங்க இடம் தேடினேன் தோழர்,

ஆம், மலர்விழி மருது  என்ற இருவரின் பெயரிட்ட அவர்களுடைய புகைப்படம் பதிந்த  அந்த திருமணவோலையை, ராஜி அக்கா என் முன்னால் நீட்டியபோது, அவளும் அவளைப்போன்றே
ஒரு பார்வை அற்றவரை  திருமணம் செய்யப்போகிறாள்  என்னும்போது, இதயம் கருகும் ஓசையால் செவியடைத்துப்போகிறேன் தோழர். வாழ்த்துவதைத் தவிர வேறென்ன செய்யப்போகிறேன் சொல்லுங்கள் தோழர்,

நன்றி - பூக்காரன் கவிதைகள்

Sunday, 26 March 2017

மொட்டு முளைத்தநாள் வாழ்த்து டியர்



With Pavithra Ethiraj

முகநூல், நிறைய நல்ல நண்பர்களைக் கொடுத்திருக்கு எனக்கு, எங்கும் சரி,, சிலராலே மட்டுமே எல்லாரையும்
சந்தோஷப்படுத்திக்கடக்க முடியும்,,அதுக்கு ஆதர்ஷமான  ஒரு குழந்தைத்தனம் வேணும்,, நம் கிண்டல் கேலிகளைத்தாண்டி, இப்படி ஒரு நட்பிருக்குன்னு சொல்ல,, ஒரு உரிமை வேணும்

உனக்கு  இத்தனை வயசு ஆனப்புறமும்,, உன்னை ஒரு குழந்தையாதான், என்னாலே பாவிக்க முடியுது பவித்ரா ,,

எந்த கள்ளக்கபடமும் இல்லாத, மறைவில்லாத உன் பேச்சு, உன் பதிவைக்கடக்குறப்போ ஏற்படும் நகைப்பு, நாலு வார்த்தை பேசும்போது கிடைக்கும், ஆசுவாசம் என எல்லாமாய் ஒரு தோழி ரூபத்தில் இருக்கிறாய்
அதற்கு முதலிடம் க்ருஷ்ண லக்ஷ்மி  தான், அவதான் இப்படிப்பட்ட குணாதிசயங்களோட எங்கிருந்தோ வந்து பூமியில் குதிச்ச தேவதையல்லாத   முதல் பிறவி ன்னு தீர்க்கமா சொல்லமுடியும், இப்போ நீயும் பவித்ரா,

நம் பிறவிக்கு அடையாளம், மனதுக்குள் கட்டிக்கிடக்கும் எத்தனையோ சுமை வார்ப்புகளுக்கப்பால்
நம்மால் யார் சந்தோஷப்படுகிறார்கள் என்பதாகத்தான் இருக்கும்,, அப்படித்தான் நான், ஆனால்
என்னுடைய சந்தோஷங்களை திரும்பப் பெற்றுத் தந்தவர்கள் நீங்க ரெண்டு பேராத்தான் இருக்கமுடியும்
(விளக்கங்கள் இல்லை)

"யாருமில்லாத தனிமை, அப்பொழுது தோன்றும் நிலா, உயர்ந்த மரங்கள் தொட்டு, பூக்கள் குளித்து வாசம் ஒழுகி, களவி (திருடி) மெய்சிலிர்க்கச் செய்யும் மென் காற்று, என் இருள் ஒளிக்கும் பின்னிரவு, தரைத்துள்ளும் சன்னப்பின்ன மழை, இதயம் போல விசாலமாக திறந்திருக்கிற ஜன்னல், சட்டென்று உண்டான வசந்தம், அதில் பூத்த ரோஜா, க்ருஷ்ண லக்ஷ்மி,  இப்போது நீ,  பனித்துளி,  ஏன் உன்னை முதலில் வருடவில்லை என்பதில், என் எத்தனை எத்தனைக் கற்பனைக்கப்பாலும், இயற்கையின்மீது முடியாத   முரண் தான் எனக்கு... பிடித்த வாசனை, நம்  நரம்புகளை, நாசியை புடைக்கச் செய்யும்போது, முகம் சிவந்து, கண்கள் இறுகி, நுதல் சுருங்கி அழகாவதைப்போல, அழகாகிறேன் உள்ளம்,,, உன்னோடு  தோழமைக்கொண்ட உள்ளம்

உனைப்புரிந்த உன் மாம்ஸ் க்கு எப்போதும் போல, உன்  வயசு கூட கூட குழந்தையாகத்தான் இருப்பாய்,
மேலும் கிருஷ்ண பிரசாத் வளர வளர அவனுக்கு நீ அக்காவா என்று பிறர்க்கேட்கும் படி, அழகாகவே மாறிக்கொண்டிருப்பாய்,,,,,

பூக்காரன் கவிதைகளின்
மொட்டு முளைத்தநாள் வாழ்த்து டியர் ஃபிரென்ட் :)

Thursday, 23 March 2017



அணைப்புக்கு அடுத்த பட்சமாய்
=============================

என் அறியாமை விரிசலை உன் கண் கூர் சீவுகிறது
தாவணி  அலைவரிசையில்
மாறி மாறி புலப்படும்
ப்ரிண்டட் பூக்களுடைய லோகம்
ஒரு புகைப்படத்திற்குள்
பல நிறங்களாக மாறுகிறாய் ஒப்பனை

சண்டை  முடிவில்
முத்தமிடுவேன் என்பதால் தானே
அவ்வப்போது  
சண்டைப்போட அழைக்கிறாய்
பயப்படாதே
இன்றோ நாளையோ மாறிவிடும்
ஒரு சுழற்சி மூச்சால்
சூடு பட்ட என்  சில்லென்றவைகள்

உன்னில் எத்தனையாவது நீ  தொடர்கிறாய்
திறக்கும் குழிகளை
திறப்பதும் மூடுவதுமாய்

வாசிப்பு நிறுத்தத்தின்
சிறு அசதியில்
வளர்க் குரல் சிரிப்பு விசிறி பின்
விசிட்டிங் கார்ட் தொலைத்த கனத்த ரயில் பயணம், தடதடத்த இதயம்,

பார்வை முடிவிலிப் பெய்தலின் தினசரி கலைக்கண்,
பருவக்காடு மேவும்
ஆண் கனவு,

அலசலில்,
இடம் எங்கே எனும் இன்னும் சற்று நேரத்தில்
கடினநாணல் அவிழும்
காணாமல் போய்விடுவாய்,
ஆர்ப்பரிப்புகளை ஒளித்துவிட்டு
அளவு மிஞ்சாத சினிமா  நடிகன் போல
நொடிகளின் காலாவதிக்குள்
திருடுபோய்க்கொண்டிருக்கிறேன் தொடக்கம்  

மொழி தெரியுமோ தெரியாதோ,
கவிதை சொல்லிக்கொடுக்கும் மௌனம் கொல்லுதே,
எங்கோ புதைந்துகிடக்கும்
புதையலொன்றின்
தேடல் போல
விரல்களுக்குத் தட்டுப்படாத  இதமாகும்  அரிப்பாகுதே

இணை சேராத
காந்த துருவம்போல
காற்றிலே அணைப்புக்கு அடுத்த பட்சமாய்
வெட்கங்களிரண்டும்
வெவ்வேறு கோணத்தில்  திசை மாறுதே

கடையாணி அறைகிறாய் கால வெள்ளை க்ரூரத்தில்
கரும்புள்ளி ஆகிறேன் மனசு சுவரப்படம்  

"பூக்காரன் கவிதைகள்"

Tuesday, 21 March 2017

அம்பாலிகா - சிற்றுண்டி சிறுகதை



அம்பாலிகா  - சிற்றுண்டி சிறுகதை
=================================

மூன்றாம் யாமத்துக் கனவில்
அந்த புறங்கடையில் இறங்கி
தடவுகளை ஒதுக்கி
சற்றே நடந்தால் ஒரு குளமிருக்கு
தேவதைக்குளம்
அவனோடுள்ள
நிறைய சண்டைகளுக்குப்பின்னால்
அம்பாலிகா
தேவதைக் குளத்து பரதேவதைக்கு
விளக்கேற்ற சென்றிருந்தாள்
அப்போது
நிறைய இறகுள்ள
ஒரு மயில்
அவளைச்சுற்றி  பறந்து வந்து
முன்புள்ள  நிலவிளக்கின்மேல்  நின்றது
அது  அம்பாலிகையை நோக்கி
வட்டமிட்டு  வட்டமிட்டு
ஓரோரு பீலியாய்  
உதிர்த்துக்கொண்டிருந்தது ,
காடு முழுதும் பீலிகள் நிறைந்துகொண்டிருப்பதை
அங்கிருந்தவர்கள் கண்டபோது
அந்தரீக்ஷத்தில்
பறந்துகிடக்கின்ற
பீலித்தும்புகளுக்கு இடையினூடே
அம்பாலிகையைக்
கைப்பிடித்து நடந்துபோகின்ற
தேஜஸ்கள் நிரம்பிய  ஒரு தேவகந்தர்வன் அவன்
அதுவரை,
யாரும் காணாத தேவகந்தர்வன்
அம்பாலிகையை
கண்முன்னில் நிறுத்தி
நேரே அக்குளத்திற்குள்  மூழ்கிவிட்டிருந்தான்
பின்பொருக்கிலும் திரும்பி வரவில்லை
அங்கிருந்தவர்கள்
குளம் முழுவதும் வற்றச்செய்து
எத்தனைத்  தேடியும்,  காணவில்லை

Cut.......................

அன்றொருநாள்,எதுவுமே இருக்கவில்லை,
நம் சந்தோஷங்களைத் தவிர.
நிலவொளியும் ஓயும் பாடில்லை,
இந்த இரவு, முடியும்பாடில்லை,
மரணித்த தோளில்
முகப்பூ சாய்ந்திருக்கிறாள்  நினைவுகள்

"பூக்காரன் கவிதைகள்"

Friday, 17 March 2017

டைம்பாஸ் டைம்பாஸ்

டைம்பாஸ் டைம்பாஸ் 
======================

காலம் தப்பிய மழை என்பதால் 
கம்பியில்லாத ஈயச்சட்டங்களைத் திறந்துவிட்டு 
வெளியே நடக்கலாமா வேண்டாமா என 
யோசித்துக்கொண்டிருக்கிறேன் 
தெலுங்குப்படத்தில் வருவது போல 
சம்பந்தமில்லாத 
உடைகளை அணிந்துவிட்டு கண்ணு சிவக்க 
நண்பர்களோடு 
வசனம் பேசிக்கொண்டிருக்க இஷ்டமில்லை 
சரி, டீவீ  சேனலை மாத்தலாமுன்னு முடிவு பண்ணி 
ரிமோட் கண்ட்ரோலை 
நோண்டி நோண்டி ரிப்பேர் பண்ணிட்டேன் 
பேஸ்புக் பாத்தா 
எல்லோரும் சுத்தமா மொக்கைய போட்டு வச்சிருக்கானுங்க 
என்ன பாக்குற 
ஹோ, உன்னைப்போலவே 
யாருமில்லாம தானே பேசிக்கிட்டிருக்கானே 
இவன் யாருன்னு பாக்குறியா ??

""போன் ரொம்ப நேரமா அமைதியா இருக்கு 
உன்னைப்போலவே தான் நானும், 
ரேகைகளுக்குள் சத்தியம் ஒளிக்கிறவன்
உன் நடையின்  வேகம், 
எப்போதும்போல, என்னைப் பின் தள்ளிக்கொண்டிருக்கிறது
என் கைவிரல்களை, 
உன் அருகிலேயே வைத்திருக்கிறேன்   
உன் உறக்கத்தினோடே 
எப்போதும் நீ அணைத்திருக்க துணையாய் ம்ம் 
வெளியில்
மழைக்கு முன்னாலுள்ள காற்று  
பூவிதழ்களின் ஆயுள் பறித்துக்கொண்டிருக்கிறது  
நினைவுகளைத் தவிர, 
இங்கு சகலமும் மாறிவிட்டன 
சரி, போரடிக்குது  
காய்ந்துபோன சருகொன்றை எடுத்து 
நிறைய மையிருக்கிற பேனாவால்  
சும்மாங்காட்டி குத்திக்கொண்டிருக்கலாமா "" 

ஐயோ 
இந்த தெலுகு ரீமேக் டூயட் பாட்டு உயிரை எடுக்குது 
ஒட்டுக்கேக்கற மாதிரி 
அக்கம்பக்கத்து ரகசியமெல்லாம் 
அவ்வளவு சுவாரஸ்யமா இல்ல 
பிரெண்ட்ஸ் யாரையாவது கூப்புட்டு வச்சு பேசலாம்னா 
சரக்கடிச்சிருப்பானுங்க 
பேசுனதையே பேசி சாவடிப்பானுங்க  
ஷாப்பிங் மால் போயி பராக்கு பாக்கலாமா ம்ம் 
பொண்ணுங்கள சைட் அடிக்கிறதெல்லாம் 
அக்கப்போரு ம்ம்ம்கூம்ம் 
பிரகாஷ் ராஜுக்கும் 
அவன் கடத்திட்டு வந்த அந்த நொன்னை 
பத்திரிக்கைக்காரனுக்கும் 
டயலாக் போயிக்கிருக்கு உலக மொக்கையான 
பிரகாஷ் ராஜ்ஜோட டயலாக் 
இந்த படத்துலதான்  இருக்கும்போல 
வேறே என்னதான் செய்ய 
ஆஹ், இரு வாறன் ஒரு டீ போட்டு எடுத்துட்டுவாரேன் 
எதுனாச்சும் ஐடியா கிடைக்கும் ம்ம் 

ரமீச வரச்சொல்லி 
கொஞ்சநேரம் வெளிய எங்குட்டாச்சும் போயிருக்கலாம் 
திருவனந்தபுரம் மலையாளம் 
செம்மயா பேசுவானே, டயம் செம்மயா போகுமே  ம்ம் 
நேத்து க்ரீன் கேட் 
சாப்பாட்டைப்பத்தி பேசி 
அவனுக்கு கொதியேத்தி விட்டுட்டேன் 
அதே ஞாபகமா சுத்திக்கிருப்பான் 
சரி விடு, அப்புறமா கூப்புட்டு, டீ டைம் பார்க்கிங் ல போயி 
காருக்குள்ள இருந்து 
ஆர்டரைச் சொல்லிட்டு அவன் கொண்டாரவரை 
அவங்கூட மொக்கைப்போடலாம் 
இதுவும் சுகமாத்தா இருக்கும்ல ம்ம்ம் 
ஆமா அவன்தான் இன்னைக்கு இளிச்சவாயன் 
வாங்கிக்கொடுக்குற 
ஹார்லிக்ஸ் க்கு மேலேயே ஜாலியா பேசுவான் ஆங் 
இன்னைக்கு வெள்ளிக்கிழமை 
முடிஞ்சா சரி ஹாஹ் ஹாஹ் ஹாஹ் ஹாஹ் 

பூக்காரன் கவிதைகள்