Wednesday, 18 January 2017

அவளும் அர்த்தங்களும்

அவளும் அர்த்தங்களும்
========================

ஒரே மண்ணில்
நீயும் நானும் சிருஷ்டிக்கப்பட்டிருந்தோம்
பிராயம் பற்றிய நாள் முதல்
நம்முடைய ரத்தம்
ஒரு பிஞ்சு அருவியைப்போல
ஒருமித்து ஓடியது
நம்முடைய பட்டங்கள்
ஒரே உயரத்தில் பறந்தன
காகிதக்களி வள்ளங்கள்
சாலை மழைநீரில்
ஒரே வேகத்தில் பயணித்தன
நாம் வேகமாக
வளர்ந்துவிட்டோமாம்
கடுதாசி கத்துகள் சொல்லின ம்ம்
குட்டிக்காலம்
அதிக தூரத்தில் போனது
இளமைக்கால ஏகாந்தத்தில், மனதில்
சட்டென்று
வெளிச்சம் அகன்ற ஒருநாள்
நான் உன் கைக்கொண்ட
ஒரு கண்ணாடி வளைவியை உடைத்தேன்
அந்த வளைபட்டு
அறுபட்டது உன் கைநரம்பு  
பின் நாம் இருவரும்
தண்ணீர் தேங்கிய மடுவொன்றில்
பொற்றாமரை நாளங்களுடைய
கொடி சிக்கல்களின்மேலே
தஞ்சம் கொண்டிருந்தோம்
நீ அறிவாயா ம்ம்ம்ம் ,,, அப்பொழுது
உனக்குப்பிடித்த
மழலைப்படங்கள் நிறைந்த
செருகேட்டிற்குள்ளே  
நீ ஒளித்து வைத்த இரவல் மயில்பீலி    
மூன்று சிற்றிறகுகளை பிரசவித்திருப்பதை

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment