இன்று நீ வரவில்லை
=====================
அந்தக் கோயில் விளக்குகள்
அணைந்திருக்கின்றன
முன்வாசல் தீபமும்
அணைந்திருக்கிறது
உண்ணாத இரவும்
தீர்ந்துகொண்டிருக்கிறது
அரைக்கால் மண்டபமும்
இப்போது
அல்லலில் மூழ்கியிருக்கிறது
அதோ சற்று தூரே
நாகப்பிரதிம சிலைகளுக்கு அருகில்
நனைந்த கற்றறையில்
ஆடித்தளர்ந்த
காற்றின் கைகள்
ஆலிலை மெத்தை விரிக்கின்றன
இன்று நீ வரவில்லை
நீ எப்படியோ உறங்கிக்கொண்டிருக்கிறாய்
எல்லாவற்றையும்
மறக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாய்
இந்த இரவில்
நிலத்தில் விழுந்த பூக்கள் எல்லாம்
விரகக்கதைகள்
சொல்லிக்கொண்டிருக்கின்றன
கேட்டுக்கொண்டே
அதைப் புணரும் நிழல்கள்
காடு மடியில் இளைப்பாறுகின்றன
உன் மலர்விழிகள்
இமைமூடிய நேரம்போது
நாள் முழுவதும்
நீ செய்த
முகஜாலங்கள்
உன் கண்ணீரில் கரையக்காண்கிறேன்
ஆனால்,,,,,
இன்று நீ வரவில்லை
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment