Monday, 2 January 2017

பூக்களைவிட மென்மையானவளுக்கு பூக்காரனின் (கற்பனைக்கடிதப்பதிவு)




பூக்களைவிட மென்மையானவளுக்கு
===================================
பூக்காரனின்  (கற்பனைக்கடிதப்பதிவு)

உன்னைப் பின் தொடர்வது
உனக்கொரு பெருத்த இடைத்தாங்கல் தான்
அறிவேன்
யாரோடும் இதுவரை  தனித்து பேசவிரும்பாதவன்
இருந்தும் உன்னைப் பின் தொடர்கிறேன்
முதல் பார்வையிலேயே
உன்னிடம் சொல்லிவிடவேண்டும் போல்
தோன்றியது
"நிறைகுடத்தில் அவிரும் விளக்கின் ஒளிபோலே
யாருக்கும் தெரியாமல் இருக்கிறாய்
இத்தனை அழகா நீ ம்ம்ம்
ஒருபாடு சுற்றிவிட்டு
அணையாத அகலினைப்போல
பறந்துகொண்டிருக்கையில்
தழைத்தட்டி விழுந்த மின்மினியைப்போலே
எப்படி என் முன்னால் வந்து விழுந்தாய்
ஏதாவது ஒரு பதில் கிடைக்கலாம்
என்று நினைத்தேன்
ஏதுமில்லை என்றாலும்
ஒரு திட்டாவது கிடைக்கும் என்றுதான்
எதிர்பார்த்தேன்
ஏனோ நீ மௌனமாகிவிட்டாய்
வேறு வழியேயில்லை
உன்னை ஆராதிக்க
வார்த்தைகளில் ஜாலம் ஏதும் இல்லாத
கவிதைதான்
எழுதவேண்டும்போலிருக்கிறது  
அத்தனை அழகாய் இருக்கிறாய் நீ ம்ம்
அதுதான் ம்ம்
அந்த நாலுவார்த்தைகளும்
என் மனசிலிருந்து
தெரிந்தோ தெரியாமலோ
உனக்கு முன்னால் வந்து விழுந்துவிட்டது
இது சரியா தவறா என்று
ஆராய விருப்பமில்லை  ம்ம்ம்

""பூக்களுக்கப்பால் ஒளிந்திருக்கும்  
உன் முகம் கண்டபோது
ஏதோ ஒரு பெயர்த்தெரியாத
புதுப்பூவின் வாசனை நுகர்கிறேன்
உன் பின்னாலுள்ள
என் தொடர்தலை
இத்துடன் அவசானிக்கிறேன்
ஆனால் ,,
யாராலேயும்
எழுப்பத்தில் நுழையமுடியாத
என் டைரிக்குள்
உனக்கான ஒரு பக்கத்தில்
நீ மௌனமாய் இருக்கிறாய்
மைக்கறைப் படாத ஒரு மயில் பீலிப்போல
எப்போதது கவிதையாகும்
தெரியவில்லை""""
இப்படிக்கு,,,,,,,,,,, ஆராதகன் ,,,
உன்னிடமிருந்து
எதையும் எதிர்ப்பாராத
வெறுமொரு ,,,,,ஆராதகன்

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment