ஆயிடையில், அவளும் நானும், அழகாகியே இருந்தோம்
==========================================================
அவள் கூந்தல் வரைந்தேன் காற்று அலைக்கழித்தது
ஒரு சிறிய தாளில் மேகம் வரைந்தேன்
விண்ணில் எறிந்து ஓடினேன்
எத்தனையோ மேகக்கூட்டங்கள்
என் பின்னாலோடின
உறவுக்காரன் சல்லியத்தில்
ஆசையோடு வளர்த்த
தத்தையும் நானும் திண்ணையிலாயிருந்தோம்
ஆற்றில் குளித்துவிட்டு
தலைத்துவட்ட பிரியப்படாத நான்
இரவு நட்சத்திரங்களுடைய
பெரும் ரசிகன்
தலைமை ஆசிரியரிடம்
வெள்ளையடித்த பள்ளிக்கூட சுவர்களில்
வர்ணம் பூசியதாக
வழக்கில் பட்டிருந்தேன்
உள்ளங்கைகளில்
தேய்த்த பிரம்பால் பதம்பார்த்திருந்தார்கள்
ஆறாத ஐந்தாறு குரு
முதல் பரிசானது
காலம்
தடசமாகவில்லை
இப்போதெல்லாம்
அந்த ஆற்றங்கரையில்
ஈர்த்த கூந்தல்காரியின் புழக்கமில்லை
எப்போதாவது
என் இருப்பின்போதோ இன்மையின்போதோ
தத்தைகளோடு
விளையாடிச்செல்வாள்
ஒருநாள்
அப்படித்தான் அன்று அவள் வருகையிருந்தது
பூக்கள் எல்லாம் ஆராதித்தன
கிழக்கிலிருந்து உருவான வெப்பக்காற்று
தூரே இருந்து அருகே வர வர
மெல்லக்குளிர்ந்து
பனிப்பொழியத் தொடங்கியது
கிளைமேய்ந்த நிறக்குருவிகள்
அவற்றின் சின்னஞ்சிறு சிறகுகள் படபடத்து
கூடடைய
ஆயத்தமாயின
நீர்த்த சாலை
உதிரிமரங்களுக்கு நடுவில் திரைக்கட்டியது
தத்தைக்கூடு வழியே
அக்காட்சிகளில் லயித்திருந்தேன்
வழியெங்கும் அடர்ந்த
பனிமூட்டங்களை கிழித்து
மென் காற்றின் ஊடே
ஒரு வெளுத்த துப்பாட்டாவின் சரிகைகள் மின்ன
ஆயிரம் நிலவுகள்போல்
பின்னிருந்து அவள்
பனிக்குமிழிகளைத் தப்பி தப்பி
சொர்க்கத்திலிருந்து வழித்தப்பி இறங்கிய
அப்சரஸ்போல்
அவள் நெருங்கிக்கொண்டிருந்தாள்
பூமியில், புற்கள் நிறைந்த மலைவெட்டுகளில்
மேய்ப்பாரில்லாத
கட்டவிழ்த்துவிட்ட ஆடுபோல்
மனம்
பிறவி மறந்த நிர்வாணமாகி
துள்ளிக்கொண்டிருந்தேன்
அவள் கண்களின் ஒளிக்கொண்டு காடு பூத்தன
குழி மாடங்களில் புதர் முளைத்தன
தத்தையின்
ஓரோரு பச்சை இறகுகள்
பிடிவிட்டவண்ணம் பறத்தலாகின
இருள் பரவி வானம் மூடிக்கொண்டிருந்தது
அன்றைய நட்சத்திரங்களுக்கு
வஞ்சனை அதிகந்தான் என்பேன்
ஒன்றொன்றாய்
உறக்கம்விழித்து
எல்லாமெழுந்து கண்கள் சிமிட்டி சிமிட்டி
அவள் அதற்குள்
தொகைந்து கொண்டிருந்தாள்
பாதை நீண்டுக்கொண்டே இருந்தது
சூரியன் பிறக்க நேரம் பாக்கியில்லை
ஆர்ப்பரித்த நிலாக்கள்
ஆயிரம் நூறாகி
நூறு ஒன்றாகி
தூரே தூரே அகன்று
அதோ ஒளிர்ந்த புள்ளிபோல்
நட்சத்திரமாகிவிட்டாள்
இன்றும்
காலங்களின் வேகத்திற்கு
தடசமில்லைதான்
பள்ளிகாலத்தின்
காலாவதி விளிம்பில்
நான் நின்றுக்கொண்டிருந்தேன்
இவ்வழியை
என்றாவது அவள் திரும்பிப் பார்க்கக்கூடும்
பாதி இறகுகளோடிருக்கும்
தத்தையை விட்டுப்போகிறேன்
ஓர்மைகளின் கூட்டத்தொடரிலிருந்து
அவள் தவறிவிட்ட
குட்டிக்காலங்களை
அப்போது அவள் ப்ரதீக்ஷிக்கக்கூடும்
விட்டுப்போனவன்
இனி என்றாவது தேடி வருவானா எனறு
தெரியவில்லை
நினைவு வரும்போதெல்லாம்
இப்போதுபோல்
யாருமில்லாத இடம் பெயர்ந்துவிட்டு
நெஞ்சறையும்
மௌனத்தால் உருகி
அவளை அமிழ்த்திக்கொள்வேன்போல்
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment