Wednesday, 18 January 2017

இளவரசத்தருணம்

இளவரசத்தருணம்
================

அது ஒரு மழைக்காலம் மூடி
பசுமை நனைத்த
காற்று வீசும் வேளை தெரியுமா ம்ம்ம்    
வன்மரங்களுக்கு நடுவே
நீர்வாசம் பரந்து காணும் வெள்ளிக்குளத்தில்
நீலத்தாமரை பிறப்பெடுக்கும்
இடைவெளிக் கரைகளுக்கிடையிலான
கனவுகளோடு
கரைந்துகொண்டிருக்கும் ஒரு மனசு
அங்கே போகவேண்டுமாய் அடம் ம்ம்ம் !!!!

வா எனக்குள்ளே ,,
உனக்கான  வசியக் கிடப்புகளைச்சுற்றிய
சதைவெளியில்
மல்லிகை முல்லை ரோஜா மலர்களும்,,
காலைமாலை பூக்களும்
மரிக்கொழுந்தும்
மாதுளம்பூக்களும்
நடு நடுவே  இதுவரையிலும்
கண்டுட்டுமில்லாத
குஞ்சு செவ்வந்திப்பூக்களும் வளர்க்கலாமா !!

என் கல்லீரல் பொத்துக்குள்
கம்பிக்கூடமைத்து
பாதரசக் கண்ணாடியால்
தனக்கென்றொரு அறைசெய்தவள்
குளிக்கச்செல்லும் முன்னும் பின்னும்
அவளை கண்டும் காணாமலும்
இதரப் பெட்டைகளின்
அரும்படர் மேலே
அடையாள இறகுதிர்த்து பறந்துபோகும்
கள்ளச்சேவலின்
தெம்மாரிக்கண்களை
சிறைசெய்யும் மடிப்புள்ளதா
என இடைவளைத்து நலிகிறாள்!!!!

இதை மறந்தாயா
பகலினை முகில் கீறும் நிழல் ஜாலங்களில்
இதுவரை பிடிபடாத
பல வர்ணங்கள் உண்ட மழைவில்திருடன் நான்
நாண ஊற்று ஒழுக
காணாத உன் பெண்மையின் நிறங் காணும்
அந்த நாட்களில்
நீ அறைகூவல் விடுத்துச் சொன்னது !!! ம்ம்ம்
எங்கே தைரியமிருந்தால்
என்னிடமிருந்து
பெயர்சொல்லும் ஏதேனும் ஒன்றை
திருடிப்போயேன் பார்க்கலாம் என்றதும்
இதோ கன்னமிட்டுப்போனது
உன் இடைக்கொலுசோடு
இடைமடிப்புகளையும்  
என் அடர்க்கற்றைமீசையின் அந்த இளவரசத்தருணம்!!!

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment