இடைமுதல் இம்சைவரை ஓர் இதழ்ப்பிரயாணம்
==============================================
(கூந்தலிசம்)
என் நிலவுக்கு தேய்ப்பிறையாம்
இந்த மூன்று நாட்களுக்கு ம்ம்,,,
ஆசை தோசை அப்பளம் வடை என்கிறாள்
சடைப்பின்னாத விரிகூந்தல் போலே
இடர்வாராய் கார்முகிலே
அற்பம் இடமொதுக்கித் தந்தாயானால்
இதழ்ப்பதித்தாவது தேற்றிக்கொள்கிறேனே
கொஞ்சமேனும்,,,
அவ்வெண்பிறையின் பின்கழுத்தோரம்
அடரும் துவேச பனிப்புகாருக்குக் கீழே
இமை மூழ்கடிப்பு நடக்கிறது
கட்டவிழ்ந்த
முட்டுதல்களுக்குள்ளே
முத்தொன்றை விதைத்துவிடவே
உன் இதழ்விதைத் தூதுவிடு
உறைவிட்டப் பெண் "பாலில்" நொதியூட்டும் தொடக்கமே
முத்தங்கள் தானே
இடையேது கடையேது இதற்கு
அட கணக்கு வழக்குகளில் கரார்தான் ஏது
நீ தொடரு என்றாள்
எல்லாம் முடிந்தப்பின்னாலும்
முடியாமல் இருக்கட்டும் இப்பதிவுகள்
இரவு விடியல்களேது
இருக்கின்றவரைப் பதிய கன்னங்களும்
உடனில்லா நேரங்களில்
தொலைப்பேசி ரிசீவரும்
எத்தனைமுறையானாலும்
வேண்டாமென்றே சொல்வதாயில்லை
இவைகளாலேயே
நீராட்டித்துடைத்து சிகையுடுத்தி
பசிப்போக்கிவிடுவாயா என்றபோது
"ச்சீ" என்று வெட்கிக்கிறாள் முகம் நாணி
பதியப்போவது
கையெழுத்தா கை நாட்டா என்றவளிடம்
பிரயாணம் தவிர்க்கும்
என் ஒற்றைவிரல் அமிழ்த்தி
துடைத்தவன்
ரேகைகள் பதியா இதழ்நாட்டு இவைகள் என்றேன்
அப்படியா அப்படியென்றால்
வந்த வழி மாறாமல் இருக்க
அடையாளங்களை
ஊன்றிச்செல் என்று விடுகதை வைக்கிறாள் கிறுக்கி
ஈரம் காயா பிரதேசம் ஒன்றை
பெற்றுத்தா முதலில்
காற்றுத் தொட்டு தணல் மூட்டும் இடங்களில்
இதழ்"கள்" ஒட்ட மறுக்கிறது தெரியுமா
என்றதும்
என் மீதும் அவள்மீதும்
அவ்விரிந்த மேகக்கற்றைக் கூந்தலை சுருட்டி
சுரங்கப்பாதை நெய்தவள்
ஈறு தெரியாத குறும்புன்னகைத் துளிர்ப்பினால்
இது போதுமா என்றாள் கள்ளி
கண்களை இருமுறை சிமிட்டியவள் ம்ம்ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment