Monday, 30 January 2017

அவன் - சிறுகதை

அவன் - சிறுகதை ================ எல்லோரும்போல நா ஒண்ணும் அவ்ளோ அழகா இல்லை,, ஸ்காலர்ஷிப் ல ஒரு பெரிய காலேஜ் ல எனக்கு இடம் கிடைச்சது ... நான் நல்லா படிக்கணும் இது என்னுடைய ஆசை ,, நான் நல்லா வரணும் இது எங்கம்மா உடைய ஆசை,,, முதல் நாள் க்லாஸ்லயே 49 பேரு வந்திருந்தோம் க்ளாஸ் ல ஐம்பது பேருன்னு சொன்னாங்க,, கடந்த ரெண்டு வாரமா இல்லாத புயல் பெங்களூர் கடந்திருக்கிறதாக ரேடியோல சொன்னாங்க ... அவ அன்னைக்குத்தான் அவளோட முகமல் மென்பட்டுக்குரலாலே "மே ஐ கமின் சார்" அப்படின்னு ரொம்ப தாமதமா உள்ளே வந்தா ,, மணி அப்போ பகல் பதினொண்ணு ... பெங்களூர் கடந்த புயல் ஊரைத் தாக்கிச்சோ இல்லையோ இந்த புயல் என்னை சாச்சிடுச்சு,, இது என் முதலாம் கட்ட புயலின் தாக்கம்,,, வாத்தியார் உட்பட எல்லோரும் என்னை என் தோற்றத்தைக் கேவலமாத்தான் சித்தரிப்பாங்க ,, அதெல்லாம் கூட வலிக்கலை அதில் அவளும் அப்படித்தான் பார்த்தா,,, எவ்ளவோ அவமானங்களுக்கு மத்தியில் ,, சோறு மூஞ்சியில விட்டெறிய சாப்பிட்டிருப்பேன் ,, படிக்க புஸ்தகம் இல்லாமே தெளிவில்லாத கார்பன் அச்சு எடுத்து படிச்சிருப்பேன் ,,, என் பிறவியை நினைச்சு ஒருநாள் கூட நான் வருந்தியது இல்லை,,, வீட்டில கரண்ட் இருக்காது,, அம்மாவோட வெற்றுவயிற்றைக் கட்டிக்கொண்டு தூங்கும் நான் ,,, கேட்பேன்,, அம்மா நான் ரொம்ப அசிங்கமா இருக்கேனாம்மா,, யார் சொன்னா என் பிள்ளைக்கென்ன குறை ,, ராசாமாதிரி வருவ ,, என்று எப்போதும் சொல்லும் ஒதெல்லோ டெஸ்டிமோனா கதை சொல்லுவாள் ,,, நான் பொறந்தப்போவே என்னைக் கொன்னிருக்கலாம் தானே ம்மா ,, இப்படி ஒரு முகத்தோடு ஒரு பிள்ளை இல்லைன்னே நினைச்சிருக்கலாமேம்மா ,, என்னும்போது ,, அவளுக்கு பசியின் வலி ஒன்றும் தெரியவில்லை ,,, நேர்க்கோட்டில் நெஞ்சுப்பிளப்பதைப்போல் அழுதாள் ,,, இருக்கும் எல்லோருக்கும் பசி ஒரு பொழுதுபோக்காகியிருந்தது எதுவும் இல்லாத எனக்கு என் பசி,, என் அம்மாவின் பசி பெரும்வலி ,, மோட்சம் தேடி அலையும் பெரும்வலி ,, பெரும்பாலும் திக்கற்றவர்கள் வயிற்றுவலியால் தூக்கில் தொங்கி இறந்தார்கள் என்று செய்திவர கேட்டிருப்பீர்கள் ,,, ஆனால் அது வயிற்று வலி அல்ல,, பசியின் வலி,, இல்லை, நாங்கள் சாகமாட்டோம், என் வருங்காலத்தினுடைய ஆயுள் நீடிப்பு எல்லோருக்குமான இந்த பசியினோடிருக்கும் போராக இருக்கட்டும் ... நானும் என் அம்மாவும் அற்பம் கைகளால் வயிற்றை இறுகிப் பொத்திக்கொண்டாவது உயிர்வாழவேண்டும் ,, அவள் கண்ட என் கனவுகளுக்காய் ....... இத்தனை வலியும் வலியில்லைதான் ஆனால் கல்லூரியில் அவள் என்னை அருவருப்பாய் பார்த்த அந்த முதல் நொடி ,,, கனத்திருக்கிறேன் அவளைக்கடக்கும்போதெல்லாம் இதய எஞ்சின் வேகமாக படபடக்கும் ,, நடுக்கம் வரும் ,, வியர்க்கும்,, தாழ்வு மனப்பான்மை கொடி பிடிக்கும் இதயத்திற்குள் இருந்துவிட்டு இரும்பால் குத்தினாள் ,, சுவரெங்கும் அவள் சிரிப்புச்சத்தமே .... அன்றைய இரவு, கொதிசோற்றின் சூடு என் நெஞ்சு புண்ணிற்கு இதமிருந்ததில்லை ,,, எப்போதும்போல் காலையில் எழுந்து காலேஜுக்கு போயிட்டேன் ,,, எல்லோரையும் கேள்வி கேட்கும் வாத்தியார்கள் என் மூலையை திரும்பி பார்த்ததுக்கூட இல்லை .. பதிவெடுப்பதைத் தவிர என் ரோல் நம்பரை அடுத்து அவர்கள் உரக்க அழைத்தது என் பரீட்சைக்கான ஹால்டிக்கட் தரும்போதுதான் ... நீயெல்லாம் என்ன படிச்சி எழுதி கருமத்தை கிழிக்கப்போறியோ என்ற மென்னும் வார்த்தைகளுடன் சபிக்கப்பட்டே பெற்றிருந்தேன்" ,, பரீட்சை முடிந்தது முடிவு வரும் முன்னாலும் ,, லீவிற்கு ஊருக்கு செல்லும் முன்னாலும் ,,, கெட் டூ கெதர் பார்டீ வைத்திருந்தார்கள் .... எனக்கிருந்த காஸ்ட்லீ சட்டையின் மேல் தோள் கிழிந்திருக்கிறது .. சொந்தம் தையல் ஒட்டு போட்டுத்தான் அணிந்திருக்கிறேன் ,,, உறவினர்கள் வேண்டாம் என்று கொடுத்த ஆடையில் அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகியிருக்கும் கருப்புநிற டபுள் லூப் இருக்கும் பலூன் பேகி பேண்ட் போட்டிருந்தேன் .... உருகிய தோலின் வழியே என் நெஞ்செலும்புகளும் கழுத்தெலும்புகளும் எல்லோருக்குமான அன்றைய காட்சிப்பொருளாகின மேலும் உடலும் உயிரும் உருக உருக அவளும் என்னை ப்பார்த்து எள்ளலித்துக் கொண்டிருந்தாள் ,,, மரணப்படும் முன்னொருசில மணித் துளிகளுக்கு முன்னால் ஒருவன் எந்த அளவிற்கு வலிகளை அனுபவித்திருப்பானோ ,,, அதைவிடக் கொடூரம் இப்படி வாழ்வது இவர்கள் முன்னால் நடமாடுவது ,,, நடமாடிக்கொண்டிருக்கிறேன் ,, சபையில் அதிகப்பட்ச கேளிக்கைகளில் நிறைந்திருக்கிறேன் ,,, எ்னைக்குறித்த என் வருங்கால லட்சியங்களுக்கிடையில் கனவுகளுக்கிடையில் அவள் யாரோவால் என் உயிரோடு இணைத்து மெல்ல மெல்லப் பறித்துத் தொடுக்கும் மலரானாள் ,, என் கனவுகளில் தூரிகை உதிர்த்தவள் ... இன்று அதே கனவுகளில், காட்சிகளில் நின்று அகலே அகலே தூரமானாள் .. அழகான ஆடவர்கள் என் முகமருகி மூக்கு நுனியருகி பலமாக சப்தமிட்டுச் சிரித்தார்கள் ,, அவர்களுடைய கைச் சிறைக்குள்ளிருந்துவிட்டு அரிய வாசனைகளுடன் அவளும் சிரிக்கிறாள் ... அந்த எதிரொலிகள் ஒரு மணற் பரப்பில் .. மணற்சுழற்சியினூடே என்னை துரத்துகின்றன ... இதன்படியால் உறங்கிக்கூட நாளாகிவிட்டது ..அப்போதெல்லாம் கூட அதைத்தாண்டி வாசிப்பது எனக்கு வைராக்கியம் ஆகியது ... முதல் செமஸ்டர் பரீட்சை முடிவு நோட்டீஸ் போர்டில் ஒட்டியிருந்தார்கள் ......... லிஸ்டில் முதல் மாணவனாக ... எல்லோருடைய வயிற்றெரிச்சலையும் என் கண்ணீர்க்கொண்டு விழுங்கியிருந்தேன் ,,, இது என் இரண்டாம் புயலின் தாக்கம் ,,,, முதல் முறை அன்றைய முதல் க்ளாஸ் பீரியடில் ,,,, லேவண்டர் நிறை வாசங்களுமாய் ,,,, என் வாழ்வில் முதன்முதலில் பூக்கவிருக்கும் முதல் வசந்தமுமாய்...... அன்றைய கிழக்கினுடைய உதயமுமாய் ,, மூச்சில் புதிய வாசனையோடு .... அருகி......... அவள் உள்ளங்கைகள் என் மேங்கைகள் அமிழ்த்த ஒரு ஹாய் சொல்ல அடுத்தமர்ந்தாள் ........வலி காணும் அவள் கண்களால் என் எதிர்காலம் திறந்துகொண்டிருக்கிறாள்..........வலி நெஞ்சாங்குலையின் இருட்கட்டில் தலைக்கீழாக தொங்கிக்கொண்டிருந்த வவ்வால்கள் எல்லாம் என் இதயத்தின் இடவல வென்ட்ரிக்கிள் வாதாயனங்கள் ஊடே வெளிப்போயின ...வலி காயப்பட்ட சதை தளத்தில் உள்ளே ஓர் அடர்மழை ஒரு புல்வெளி வேர்விடுகிறது... வலி ............. உயர்ந்த வன்மரங்களுடைய காடொன்று உயிர்வரை வேர்விடுகிறது ........வலி ............. ரமணி சந்திரன் காதல் கதையில் வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர் கதாபாத்திரம் ஆகிறார் .......... கவிதை வேர்விடுகிறது .......வலி ....... ஆனால் இந்த வலி .............. முற்றிலும் அன்றைய, அப்போதைய என் பிறப்பு முதலான எல்லா வலிகளிலிருந்தும் முற்றிலுமான வேறுபட்ட......... வலி பூக்காரன் கவிதைகள்

No comments:

Post a Comment