Tuesday, 27 December 2016

இது இரு காதல் கடிதங்களின் கதை

இது இரு காதல் கடிதங்களின் கதை 
==================================

பகவத் கீதையில் பத்தாம் புத்தகத்தில்
52 ஆம் அத்தியாயத்தில்  
ஸ்ரீ கிருஷ்ணனுக்காய் 
ருக்மணி எழுதியிருந்தாள் 
அதுதான்  
பாரதத்தின் முதல் காதல் கடிதம் 
சரித்திரத்தில் 
ஒருபாடு கடிதங்கள் 
இதற்குப்பின்னால் எழுதப்பட்டிருந்தாலும்  
அதற்குள்ளே  
விசிதமாய் போவதில்லை நான்

இது ,,
யாரோ இருவர் 
மரம் சுற்றி காதலித்த 
வழக்கமான காதல் கதையல்ல    
சாகித்தியம் கொண்டு
அலங்கரித்து அலம்பாக்காத 
இது இரு காதல் கடிதங்களின் கதை 

""அவளுக்கு முதலில் தந்த காதல் கடிதத்திற்கு 
பதில் கிடைக்கவில்லை 
தொடர்பு விட்டு 
இத்தனைநாள் கழித்து 
எதற்காக அழைக்கிறாள் ம்ம்
நாளையுடைய  
அவள் பிறந்தநாள் 
இதற்கொரு காரணமா ம்ம் 
உறக்கம் வரவில்லை  
அவளைப்பற்றியுள்ள சிந்தைகள் 
அந்த இரவு முழுவதும் 
என் தலைக்குமேலுள்ள  
உச்சவரம்பில் 
ஒரு மின் விசிறி சுற்றுவதைப்போல 
சுற்றிக்கொண்டிருந்தது 

அந்த பஸ் ஸ்டாப்பில் 
ஒரு தணல் மரத்தின்  கீழில் வைத்துதான் 
ஆயிருந்தது 
எங்களுடைய ஆதித்ய சங்கமம்   
பின்னில் 
நீதியுடைய 
அடையாளமான 
தராசின் ஏற்ற குறைவில் 
சொல்லியுள்ள 
இந்த யுத்தம்,,ம்ம்   

குற்றபோதம் 
வேட்டையாடிய மனசுமாய் 
சமாதான 
நோக்கத்திற்கு வேண்டி 
பாதையோரம் 
காத்து நின்றபோது 
ஒரு  காட்சிப்பிழைப்போல்  
அவள் அருகி வந்தாள் 
இயக்கம் நின்றுவிட்ட இதயமுமாய் 
என் மனசு 
இருமுறை மந்திரித்தது 
மன்னிப்பு!!! மன்னிப்பு!! என்று 

ஒரு  யுத்தத்தின் பின்னாலுள்ள 
அமைதிபோல  
என்னவளே !! 
என்  பஞ்சேந்திரியங்கள் எல்லாம் 
நீயே ஆனாய் ,,, நீயே ஆனாய் 

உறக்கம் பிழிந்தெடுக்கும் 
நேசம் கொண்டு 
குளிர் கொள்விக்கிறாள்   
ப்ரேமையின் இதம் சொல்லும் 
கனவுகளிலிருந்து   
மரிக்காத 
புத்தக சுவடுகளுமாய் 
எழுத்துகளுடைய லோகங்களுமாய்  
என் கவிதைகளால்  
அவள் சிருஷ்டிக்கப்பட்டுவிட்டாள்""

யாருக்கும் சொல்லலாம் 
எனக்கு உன்னை 
பிடித்திருக்கிறது என்று 
ஆனால் 
அந்த பிரியம் உண்மை  என்று 
காத்திருந்து 
தெளிவிப்பது என்பது
அந்த எல்லோராலும்  
முடியுமென்றில்லை 
சில சந்தர்பங்களில் 
ஆத்மார்த்த ப்ரேமையும் 
தோற்றுப்போகும் 
காரணம் 
ஈலோகத்தில் 
"விதி" என்னும் பேரில் 
ஒரு பெரிய உண்மை  இருக்கிறது 

எழுதும்போது,,, 
எழுதுகின்றவர் எத்திக்கின்ற 
மற்றொரு லோகம்,, 
எழுத்து கைமாறும்போது 
அனுபவிக்கின்ற நடுக்கம் 
மறுபடிக்கு வேண்டி காத்திருக்கும்போது 
நிறைய கனவுகளும் 
எதிர்பார்ப்புகளும் என  
இத்தரத்தில் உள்ள 
இதங்களை தரமுடியுமென்றால் 
அது கடிதத்தினால் மட்டுமே முடியும் 

சில நாடகங்களிலும் சினிமாக்களிலும் 
மட்டுமே 
ஒதுங்கியிருக்கின்றன 
இன்றைய காதல் கடிதங்கள் 
வாட்ஸப்பிலும், ஃபேஸ்புக்கிலும்
சாட் செய்து 
அப்புறமும் இப்புறமும் 
ஐ லவ் யூ என்றுச்சொல்லி 
பரஸ்பரம் "ஐந்தாறு முத்தங்களும்" கொடுத்து 
மனசிலுதிக்கின்ற 
ப்ரியங்களுக்கெல்லாம் 
ஒரு துர்முகத்தைக்  கொடுத்துவிட்டோம்
   
கடித பரிமாறுதல்களால்
நம் ஒவ்வொருவருடைய காதல்   
ஜெய்த்துவிட்டது 
இல்லை 
பொய்த்துவிட்டது   
என்பதிலில்லை இதில் பிரதானம் 
நாம் எல்லோரும்
ப்ரியங்களுடைய 
சுகம் அனுபவித்திருக்கிறோம் 
என்பதுதான் 
கடிதங்களிலுள்ள பிரதானம் 

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment